தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/29/2013

அழகு என்பது
பெண்பால் என்றால்,
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால் ஆகத் தான் இருக்கும்.
அழகாய் இருப்பதால் அவன் என்னை
ரசிக்கவில்லை.
அவன் ரசிப்பதால் தான்
நான் அழகாகவே
இருக்கிறேன்

8/07/2013

அவள் யாரோ...நான் யாரோ..!

ன் காதலை
நீ வைத்துக் கொண்டு
ஏனடி என்னை
அலைக்கழிக்கிறாய்?

***

எப்படியாவது
சொல்லிவிடத்தான்
எப்போதும்
காத்துக் கிடக்கிறது
உன் மீதான காதல்..!

***

அவள் எப்போதும் இப்படித்தான்
என் கனவுகளில் உலா வருவாள்
கவிதைகளுக்கு எப்போதும் கரு கொடுப்பாள்
உறங்கிக் கொண்டிருக்கையில்
நினைவில்.. சில்மிஷங்கள் செய்து
தூக்கங்களை கலைத்தெறிவாள்..
ஓராயிரம் முறை கண்ணாடி பார்க்கையில்
என் பிம்பம் தாண்டி வந்து நின்று
புத்திக்குள் கல கலவென்று சிரிப்பாள்
ஆமாம்...
அவள் எப்போதும் இப்படித்தான்;
ஆனால்
அன்றாடம் காணும் எங்கள் தினசரிகளில்...
அவள் யாரோ...நான் யாரோ..!