தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/31/2013

தெரியுமா?



நீலகண்ட பிரம்மச்சாரி என்கிற தேசபக்தர் பாரதியாரின் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பாரதி, சாப்பிட ஏதாவது இருக்கா?’ என்றார் கம்மிய குரலில். ‘ஓய் நீலகண்ட பிரம்மச்சாரி, என்ன ஆச்சு?’ என்று பதறினார் பாரதியார். ‘சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு’ என்று பதில் வந்தது. வீட்டில் இருந்த சாப்பாட்டை உடனே பரிமாறச் செய்து, நீலகண்ட பிரம்மச்சாரி கண்ணீருடன் உண்ணும்போது நெஞ்சு வெடிக்க பாரதி எழுதிய பாடல்தான் -
‘இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.’
பசியை ‘அன்னை இட்ட அடிவயிற்றுத் தீ’ என்றார் பட்டினத்தார். பசியை இன்னும் உயர்த்தி, ‘அது தேவியின் வடிவம்’ என்கிறது, தேவி மகாத்மியம்.

‘எந்தத் தேவி எல்லா உயிர்களிலும்
பசியின் வடிவில் உறைகிறாளோ...
அவளுக்கு நமஸ்காரம்
அவளுக்கு நமஸ்காரம்
அவளுக்கே நமஸ்காரம்..’

10/18/2013

உன் நினைவோடே.......

அன்று உன் காதலால் என்னை
என் முதல் கவிதை எழுத வைத்தாய்,
இன்று உன் பிரிவால் என்னை முழு கவிஞன் ஆக்குகிறாய்.

உன்னைப்பற்றி நினைக்கக் கூடாது
நினைக்கக் கூடாது என
நினைத்து நினைத்தே,
உன் நினைவோடே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனதின் வலியை வார்த்தைகளால்
வெளிப்படுத்த முடியுமா முடியாதா
என்கிற சோதனை முயற்சியாகத்தான்
உன் பிரிவை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்த கவிதைகளெல்லாம் என் தமிழுக்கும்,
உன் நினைவிற்கும் பிறந்த குழந்தைகள் தானடி.