தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/09/2013

சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும்.....

சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும் இவ்வாரு சொல்வது தவறு

சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் இதுவே சரியான சொல்
குழந்தை செல்வம் இல்லாத பெண்கள் இன்று சஷ்டி அன்று எம்பெருமான் முருகனை வேண்டி சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை வரம் பெருவார்கள் இதை தான் மிக அழகாக சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்

இன்று கந்தசஷ்டியில் அனைவரும் விரதம் இருந்து எம்பெருமான் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை 36முறை படித்து தழிழ் தெய்வம் சுனாமி காத்த முருகனின் திருவருளை பெருவோம்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சுனாமி காத்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா....................



படித்ததில் பிடித்தது .........

11/02/2013

ஒருத்தனின் கருமாதிக் கடிதம்....

என்னைத் தொலைத்துவிட்டு போன
காதலியே நலமா.. கண்ணீர்
மழையில் உருகிக் கொண்டிருக்கும்
ஒருத்தனின் கருமாதிக் கடிதம்..

என்னை வேதனை பட வைத்தாய்..
காயம் பட்ட மனதுக்குள்
காதல் கசியச் செய்தாய்..

தொலைவிலிருந்தாலும் தொடர்ந்து
கேட்கச் செய்தாய்
உன் இதயத் துடிப்பை .. (எனக்கு மட்டும்..)

மனதுக்குள் என்னை சிறை வைத்தவளே
எனை மறக்க எப்படித் துணிந்தாய்..

நீ கண்ணீர் சிந்தினால்
உதிரம் சிந்தியது போல
சிதறிப் போனவனல்லவா நான்..

உன் முகம் சோர்ந்தால்
மூச்சு நின்றது போல
அலறியவனவல்லவா நான்..

இன்னும் புரியவில்லை
நீ என்னை பிரிந்த காரணம்..

நான் தொலைத்து விட்ட இதயத்துடன்
என்னையும் தொலைத்து விட்டு போனவளே
மறக்காமல் வந்து விடு என்
ம(ர)ணப் பத்தரிக்கைக்கு
மஞ்சள் தடவிக் கொடுக்க...