தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/30/2010

அயோத்தி பிரச்னை வரலாறு


 இன்று  அயோத்தி தீர்ப்பு 



1528: அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ராமர் பிறந்த அந்த இடத்தில், கட்டுவதற்கு இந்துக்கள் எதிர்ப்பு.

1853: அயோத்தியில் ¬முதன் ¬முதலில் வன்முறை வெடித்தது. 75 பேர் பலி.

1859: பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட ஏற்பாடு. உட்பகுதியில்¬ முஸ்லிம்கள் வழிபடவும், வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபடவும் வகை செய்யப்பட்டன. இருபுறம் சுவர் எழுப்பி மோதல் தவிர்க்கப்பட்டது.

1934: நாடு முழுவதும் இந்து - ¬முஸ்லிம் கலவரம். மசூதி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

1949: மசூதியில் ராம விக்ரகம் தென்பட்டது. இந்துக்களால் சிலைகள் வைக்கப்பட்டன எனக் கூறி ¬முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின், இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு அரசு பூட்டுப் போட்டது. அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவிக்கப்பட்டது.

1950: அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது என்று பைசாபாத் கோர்ட்டில் கோபால் சிங் விஷாரத் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். சுதந்திரத்துக்குப் பின், அயோத்தி தொடர்பாக கோர்ட்டுக்கு சென்ற ¬முதல் வழக்கு இது தான்.

1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் கோர்ட்டில் நிர்மோகி அகாரா வழக்கு.

1961: உ.பி.,யில் வக்பு சன்னி மத்திய வாரியமும், எட்டு ஷன்னி முஸ்லிம்களும் இணைந்து, டிச., 18ல், பைசாபாத் கோர்ட்டில் பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி வழக்கு.

1974: கோர்ட் உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து புதிய அதிகாரி நியமனம்.

1984: ராமர் பிறந்த இடத்தை மீட்போம் என்ற கோஷத்துடன் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், பிற அமைப்புகளும் வலுப்பெற ஆரம்பித்தன.

1986: மசூதியின் உள்ளே சென்று இந்துக்கள் வழிபடலாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ¬முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

1986: அயோத்தி தொடர்பான வழக்குகளை விரைந்து ¬முடிக்க வேண்டும் எனக் கோரி ஐகோர்ட்டில் உ.பி., அரசு மனு செய்தது. "பாபர் மசூதி நடவடிக்கைக் கமிட்டி' உருவானது.

1987: மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையிலிருந்த வழக்குகளை உ.பி., அரசு வாபஸ் பெற்று அவற்றை விரைந்து ¬முடிக்க ஐகோர்ட்டில் தாக்கல்.

1989: சர்ச்சைக்கு உட்பட்ட இடம் அனைத்தும், கோவில் என அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் வழக்கு. இது தொடர்பாக பைசாபாத் கோர்ட்டில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும் மூன்று நீதிபதிகள் கொண்ட

அலகாபாத் ஐகோர்ட் பெஞ்சுக்கு மாற்றம்: ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற கோஷத்துடன் புறப்பட்ட வி.எச்.பி., அமைப்பினர், சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் கோவிலுக்கான அடிக்கல் (சிலாநியாஸ்) நாட்டினர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் பலி.

1990: வி.எச்.பி., தொண்டர்களால் மசூதி சிறிதளவு சேதப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் சந்திரசேகர், பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் ¬முடிந்தது.

1991: மசூதி மற்றும் சர்ச்சைக்குரிய பகுதியின் மையப்பகுதியில் 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு. அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம், ஆனால் அந்த இடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது என்று கோர்ட் உத்தரவு. அயோத்தியில் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதிகளை அரசு கையகப்படுத்தியது. உ.பி.,யில் நடந்த தேர்தலில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது.

1992: டிசம்பர் 6ல் மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாயிரம் பேர் பலி.

1994: விசாரணை நீதிமன்ற உத்தரவு வரும்வரை அயோத்தியின் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதியில், எந்த கட்டுமானப் பணிகளோ அல்லது வழிபாடோ இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

1996: மசூதி இடிப்பு தொடர்பான சாட்சிகள் மீதான விசாரணை.

1998: வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசு பதவியேற்பு.

2001: அயோத்தி இடிக்கப்பட்ட நினைவு தினத்தில், அவ்விடத்தில் கோவில் எழுப்ப வி.எச்.பி., உறுதி. மார்ச் 12ம் தேதி கோவில் கட்டும் பணி துவங்கும் என்று அறிவித்தது.

2002 ஜனவரி: அயோத்தி தொடர்பான பிரச்னைக்கு என, சத்ருகன் சிங் தலைமையில் ஒரு அலுவலகத்தை பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். அது இந்து - ¬முஸ்லிம் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதால், உருவானது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

2002 பிப்ரவரி: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. கோவில் கட்டுமானப் பணிகளை மார்ச் 15ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும் என, வி.எச்.பி., கெடு விதித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கோத்ராவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 58 பேர் பலியாயினர்.

2002 மார்ச்: குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பலி.

2002 ஏப்ரல்: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, ஐகோர்ட்டில் மூன்று நீதிபதிகள் தலைமையில் குழு விசாரணை துவங்கியது.

2003 ஜனவரி: கோர்ட் உத்தரவுப்படி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு.

2003 ஆகஸ்ட்: தொல்லியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததற்கான சான்றுகள் இருந்ததாக தெரிவித்தனர்.

2003 செப்டம்பர்: பாபர் மசூதி இடிப்பில் ஏழு இந்து தலைவர்களுக்கு தொடர்ப்பு இருப்பதாகவும், ஆனால் அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் கோர்ட் அறிவித்தது.

2004 அக்டோபர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் பா.ஜ., உறுதியாக இருப்பதாக அத்வானி தெரிவித்தார்.

2004 நவம்பர் : மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு தொடர்பு இல்லை என அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய கோர்ட் முடிவு.

2005 ஜூலை: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில் வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப்பை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

2009 ஜூலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் தன் அறிக்கையை 17 ஆண்டுகள் கழித்து சமர்ப்பித்தது. இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

2010 செப்டம்பர் 30ல்: அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு.

இரு வேறு கருத்துக்கள்: அயோத்தி விவகாரம் கடந்த 1885ம் ஆண்டு முதல் நீடித்து வரும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. இத்தீர்ப்பு வரும் நேரத்தில் இது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் வருமாறு: யோகி ஆதித்யநாத்(எம்.பி.,): அயோத்தி என்றாலே ராமர் பிறந்த இடம் தான். இதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. ராமர் கோவிலுக்குரிய நிலம் வேண்டி நடந்த 76 போராட்டங்களில் ஏராளமான இந்துக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் இந்துக்களின் உணர்வுகளோடு இந்த கட்சி விளையாடுகிறது. பாபர் மசூதி செயற்குழு வக்கீல் சபர்யாப் ஜிலானி: தற்போதுள்ள இடத்தில் ராமர் பிறந்தாரா? எப்போது பிறந்தார் என்பதல்ல தற்போதைய சர்ச்சை. ராமர் சிலை உள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போதைய பிரச்னை. 160 சதுர அடியும் பாபர் மசூதி இருந்ததாக கூறவில்லை. 80 அல்லது 90 சதுர அடியில் தான் பாபர் மசூதி இருந்தது.

தீர்ப்பைக் கேட்பதில் குழப்பமோ, குழப்பம்: தீர்ப்பு விவரத்தை தெரிந்து கொள்வதற்காக, பத்திரிகையாளர்கள் உட்பட மீடியா பிரதிநிதிகள் ஐகோர்ட்டிற்கு வரவேண்டாம். இதற்காக சிறப்பு ஏற்பாடு லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை ஐகோர்ட்டால் நியமிக்கப்படும் பிரதிநிதி அறிவிப்பார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது நடந்த வாதபிரதிவாதங்களை விளக்குவதற்காக, ஆஜரான வக்கீல்கள், கலெக்டர் அலுவலக மீடியா சென்டருக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று பிற்பகல் 4 மணி முதல், நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் லக்னோவில் உள்ள மீடியா சென்டரை நோக்கி இருந்தது. 4.35 மணிக்கு, வக்கீல்கள் கூட்டமாக வந்தனர். சிலர், வெற்றிச் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் இரண்டு விரல்களை காட்டியபடி வந்தனர். தீர்ப்பு வெளியாகிவிட்டதோ என்று பத்திரிகையாளர்கள் குழம்பிப் போயினர். இருபதுக்கும் மேற்பட்ட வக்கீல்கள், வழக்கு விசாரணையின் போது தாங்கள் எடுத்துவைத்த வாதங்களை வாசித்தனர். ஆளாளுக்கு பலரும் பேசியதால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. ஒரே நேரத்தில் பலரும் பேசி குழப்பினர். தீர்ப்பு தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் 600 பத்திரிகையாளர்கள், லக்னோவில் குழுமியிருந்தனர். நேரடியாக ஒளிபரப்புவதற்காக 40க்கும் மேற்பட்ட வெளிப்புற படப்பிடிப்பு (ஓ.பி.,) வேன்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

9/29/2010

உண்மை பேசினாலும் தண்டனை

சாயங்கால வேளையிலே
சாலையின் ஓரத்திலே
சனங்களின் மத்தியிலே
சங்கமித்து நின்றிருந்தேன்

வானத்து தேவதை ஒருத்தி
வழி தவறி வந்தது போல்
மலர் போன்ற பெண்ணொருத்தி
என்னருகே பூத்து நின்றாள்

மின்னற் பார்வை
என் மீது அவள் பாய்ச்ச
இடி இறங்கியது போல
நான் நின்றேன்

புயல் போன்ற அந்த தென்றல்
என்னை நெருங்கியது
சருகு போன்ற என் மனம்
அதில் நொறுங்கியது

அருகில் வந்தவளை
"அன்பே" என்றேன்
"சொல்" என்றாள்
அவள் பார்வையிலே

உண்மையை சொல்லவா?

தூண்டிலில் சிக்கிய மீனை அறிந்திருக்கிறேன்
ஆனால்,
மீனிடம் சிக்குமாம் தூண்டில் என்று
இன்று தான் உணர்ந்தேன்
உன் மீன் விழி பார்வையில் நான் சிக்கிய போது

தாமரை மொட்டு இதழ் விரித்து மலர்வது போல்
உன் செவ்விதழ் மொட்டு
இதழ் விரித்து மலர்ந்தால்
அது உன் சிரிப்பு என்பேன்

யாம் அறிந்த மொழிகளிலே தமிழை போல
இனிது எங்கும் இல்லை என்று பாரதி சொன்னான்
சத்தியம் என நானும் ஒப்புக்கொள்கிறேன்
உன் தேனிசை குரலில் தமிழை கேட்ட பிறகு

தோட்டத்தில் பூக்களை பார்த்திருகிறேன்
ஆனால், நீர்வீழ்ச்சியிலும் பூக்கள் பூப்பதை
இன்று தான் பார்கிறேன், உன் கூந்தல் அலையில்
பூக்கள் சிக்கியதை பார்த்த பிறகு

புயலாக வந்த காற்று கூட
உன் தாவணியில் பட்டவுடன்
தென்றலாக மாறி சென்றதை
இன்று தான் பார்த்தேன்

இவ்வளவு ஏன்?

காதல் வந்தால்
கட்டெறும்பும் கவிதை பாடும்
என்பதனை
உன்னால் தான் நான் உணர்ந்தேன்

என் மன கதவை
உனக்காக திறந்து விட்டேன்
பதில் சொல்ல
உள்ளே வருவாயா என்றேன்

மௌனம் பேசியது

"இத்தனை அழகு எனக்குண்டு என்பதனை
இதனை நாள் நான் அறியேன்
இன்றதனை அறிந்தபின் தான் நான் உணர்ந்தேன்
எனகேற்றவன் நீயில்லை"
என கூறி விலகி சென்றாள்

ஒ! உலக இளைஞர்களே,

இன்று ஒரு தகவல்

"உண்மை பேசினாலும் தண்டனை"

9/28/2010

எவ்வளவு சிரமம் எழுதுவது ?


              எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது எழுதிபார்க்கையில் தான் தெரிகிறது. 2 வரி எழுதி முடித்தவுடன் என்ன எழுதுவது என்று தோன்ற மாட்டேங்குது. எப்படி தான் பக்கம் பக்கமாக எழுதுகிறார்களோ? அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு சில சமயம் உணர்ச்சி வேகத்தில் 20 வரி எழுத முடிகிறது மற்ற வேளைகளில் முடிவதில்லை. எழுதுவதற்கு மற்றொரு பெரிய தடைக்கல் தட்டச்சு தெரியாதது, பார்த்து பார்த்து தட்டங்குல்ல போது போதும் என்றாகிவிடுகிறது, எழுத நினைத்ததும் பாதியில் மறந்து விடுகிறது.

           அப்படியே ஒரு 10 வரி எழுதிவிட்டு படித்து பார்த்தால் நமக்கே (எனக்கே) சகிக்கமாட்டேங்குது என்னதான் பண்றது? அப்புறம் சொல்றத/எழுதறத ஒழுங்கா முறையா எழுதுனாதானே 
( ஒரு கோர்வையா இருந்தாதானே) படிக்கிறப்போ புரியும். எதை முதல்ல சொல்றது எதை நடுவில் சொல்றதுன்னு தெரிய மாட்டேங்குது. அப்புறம் ஒரு விசயத்தை பற்றி எழுதிக்கிட்டு இருக்கிறப்போ சம்மந்தம் இல்லாத ஒரு தகவலை நடுவில் எழுதறது. இந்த மாதிரி பல பல பல பிரச்சனைகள்.

இதையெல்லாம் எப்படி சரி செய்து ஒழுங்கா எழுதறது? ஒரு எழுத்தாளனாவது? தப்பாக இருந்தாலும் எழுதறது தான் ஒரே வழி. தப்பை சரி செய்துவிட்டு எழுதுவதை விட ( அப்புறம் எழுதவே முடியாது :-( ) எழுதி எழுதி தப்பை சரி பண்ணிக்கலாம் என்று உள்ளேன்.

அதனால் என் எழுதில் குறை இருந்தால் (இருக்கும்) மன்னிக்கவும்.

9/27/2010

உண்மைகள்


நகைச்சுவை போல தெரியும் சில உண்மைகள் :

எந்த சோதனையும் முழுமையான தோல்வியில் முடிவதில்லை, மோசமான எடுத்துக்காட்டுக்கு அவை பயன்படும்.

சொல்லப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் கைவசமாகும்.

யாரும் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.

குழுவாக வேலை செய்வது நல்லது, அப்போது தான் பழியை அடுத்தவர் மேல் போட வாய்ப்பு கிடைக்கும்.

தியரியில், தியரிக்கும் செயல்முறைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் செயல்முறையில், செயல்முறைக்கும் தியரிக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. (தியரிக்கு தமிழில் என்ன சொல்?).

ஒரு பிரச்சனையின் தீர்வை நோக்கி செயல்படும் போது, அதன் விடையை முன்னரே தெரிந்திருப்பது எப்போதும் பலன் கொடுக்கும்.

9/26/2010

படிங்க சார் கொஞ்சம் !


               தமிழனோடு ஒன்றி கலந்துவிட்ட ஒரு சொல் என்னவென்றால் அது "சார்" தான். மூச்சுக்கு முன்னூறு தரம் தமிழன் உச்சரிக்கும் சொல் "சார்". என்ன சார் நான் சொல்றது சரி தானே?. அதுவும் திரைப்பட கலைஞர்களின் பேச்சில் இது மூச்சுக்கு மூவாயிரம் முறை வரும். ஒரு திரைப்பட கலைஞரின் தொலைக்காட்சிப் பேட்டியை நண்பர்களுடன் பார்த்த பொழுது தான் "சாரின்" மேன்மையை கண்டுகொண்டோம், சாரைப்பற்றி பேச ஆரம்பித்தோம். அன்னைக்கு அடிச்ச கிண்டலும் கேலியும் நக்கலும் தான் எங்களின் "சார்" பயன்பாட்டை குறைத்தது. எவனாவது ( என் நண்பர்கள் தான்) சார்ன்னு பேசுவதை கேட்டோம் அவன் தொலைஞ்சான், சாரு சாருன்னு சொல்லி அவன நோக அடிச்சிடுவோம்.

ஒருத்தரை மரியாதையாக அழைக்கனும்னா "சார்" போடாம அழைக்க முடியாதா? தமிழில் ஐயா என்ற அழகான சொல் உள்ளதே. ஆனா பாருங்க இந்த சொல்லை பயன்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளது. கொஞ்சம் மாற்றி பயன்படுத்தினா பொருள் மாறிவிடுகிறது அதாவது மரியாதைக்கு பதில் அவமரியாதை வந்துவிடுகிறது.

சொல்லுங்க ஐயா , சொல்லுய்யா, என்னங்கய்யா?, என்னய்யா? அதனால் நாம் மரியாதையோடு ஐயாவை பயன்படுத்தவேண்டும். இதுக்கு பேர் தான் மரியாதைக்கு மரியாதை :-))

இன்னொரு சிக்கல் "ஐயா" என்ற சொல்லை பயன்படுத்தினால் வயதில் மூத்தவர், பெரியவர், பெருசு (கிண்டல்) என்ற எண்ணம் வருகிறது. 3, 4 வயது மூத்தவர்களை ஐயா போட்டா நல்லாவா இருக்கு? அதுக்கு என்ன தீர்வு? பேர் சொல்லி அழைப்பதே உத்தமம் என்பது என் எண்ணம். மரியாதைக்கு "ங்க" போட்டுக்குங்க. "சரிங்க சேகர் ", "என்னங்க சதீஷ் " என்பது மாதிரி. (என்னை விட வயதில் மூத்தவர்கள் என்னை "சார்" என்று கூப்பிட்டால் எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கும்.)

பழக பழக "சார்" பயன்பாடு குறைந்துவிடும், எனவே முடிந்த அளவு "சார்" போடாம பேச முயலுங்களேன். "ஆபீசரை" "சார்" போடாம அழைத்தீர்கள் என்றால் அது மிகப் பெரிய செயல், முயன்று பாருங்க. வாழ்த்துக்கள்!

ஒரு தமிழரிடம் பேசினால் ஒரு முறையாவது "சார்" என்ற சொல்லை பயன்படுத்திவிடுவேன். சார்... அட சொல்லுங்க சார், சார் நீங்க பெரிய ஆளு சார், சதீஷ்  சார் என்ன சொன்னாருன்னா , ஆமா சார், இல்ல சார், போங்க சார், கிண்டல் பண்ணாதிங்க சார், தனபால்  சார், ... இந்த மாதிரியாக.

"சார்" போட்டு பேச கூடாது என்று உறுதி எடுத்து "சார்" போடாமல் பேச பழகிக்கொண்டேன். ஒரு முறை கோவை  HDFC  வங்கிக்கு சில ஐயங்களை தீர்க்க தொலைபேசியில் தொடர்புகொண்டபோது என்னுடைய ஐயத்தை தீர்க்கவேண்டியவர் அப்போது இருக்கையில் இல்லாததால் என் அழைப்பை இன்னொருவருக்கு மாற்றினார்கள். எடுத்தவர் பாண்டியராஜன் எனக்கு ஒரு தமிழ் பெயரை  வங்கியில் கேட்டதும் மகிழ்ச்சி, உடனே நான் "சார்" I ..... என்று பேசினேன். ஒரு வாக்கியம் பேசி முடித்ததும் ச்ச தமிழ்ன்னு தெரிந்தவுடனே "சார்" போட்டு பேசிட்டோமேன்னு ஒரே விசனமாயிடுச்சி. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்ன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க. :-
(பள்ளிக்கூடத்தில் (தமிழ் வழி) ஆசிரியரை ( தமிழ் ஆசிரியரையும்) "சார்" என்று கூப்பிட்டபய தானே நான். எப்படி சுலபமா "சாரை" விட முடியும்.

நம்ம வலைப்பதிவு நண்பர்களும் "சாரை" தவிர்க்க முடியாமல் இருப்பவர்கள் தான் .. இவர்களும் தமிழர்கள் தானே. ;-)

9/25/2010

ஒன்றுபடுத்துவதா நம் மதம் ?

இந்து
          யார் இந்து? இதுக்கு தெளிவான பதில் உண்டா? இல்லை என்பதே பதில். ஏன்னா இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்து என்ற பதம் ஈரான் நாட்டை சார்ந்த மக்களால் சிந்து ஆற்றுக்கு அப்பால் இருந்த மக்களை குறிக்க பயன்பட்டது.

இப்ப இந்து மதம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவர்கள் பல்வகையான நம்பிக்கைகளை உடையவர்கள். வைணவத்துக்கும் சைவத்துக்கும் நடந்த சண்டை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டதிலும் இந்து மதம் என்பதைப்பற்றி வரையறை இல்லை. என் நண்பன் ஒருவன் சிவ பக்தன், தவறியும் பெருமாள் கோயிலுக்கு போகமாட்டான். சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மடம் திருமலை கோயிலில் சில மாற்றம் சொல்ல ஜீயர் மடத்துக்காரங்க அதெல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலை எதுவோ அதை ஒழுங்கா பாருன்னு சத்தம் போட்டாங்கில்லையா... எல்லாம் இந்த சண்டையால தான்.

இசுலாம்
            இசுலாம் தோன்றிய சிறிது காலத்திலேயே யார் உண்மையான தலைமை என்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் சன்னி, சியா என இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இஃப்படி (Ibadi) அப்படிங்கிற பிரிவு மற்ற இசுலாமிய பிரிவினரை நம்பிக்கையற்றவர்கள் (கபீர்கள்) என்று கருதுகிறது. அகமதியா என்பவர்களை முசுலிம்களாகவே பெரும்பான்மை பிரிவை சார்ந்த முசுலிம்கள் நினைப்பதில்லை. ஒவ்வொரு பிரிவுளிலும் உட்பிரிவு உண்டு.குரானை மட்டுமே நம்பும் பிரிவு உண்டு அவங்க கதீசு கிதீசு அப்படிங்கிற எதையும் ஒத்துக்கமாட்டாங்க. குரான்ல இல்லாததா கதீசுல இருக்கு? அப்படிங்கிறது அவங்க வாதம்.

கிருத்துவம்
                 ரோமை தலைமையிடமாக கொண்டு ரோமன் கத்தோலிகர்கள் உள்ளார்கள். அவர்களின் செயல்பாடு பிடிக்காதவர்கள் பிரிந்து சென்று அமைத்தது புரட்ஸ்தாந்து. மரபு வழாத (பழமைக்கோட்பாடு சார்ந்த) கிருத்துவர்கள். சிரியன் கிருத்துவர்கள், மாரோனைட் கிருத்துவர்கள், ஆர்மினியன் அபோஷ்டோலிக் கிருத்துவர்கள், காப்டிக் மரபு வழாத கிருத்துவர்கள் ... இவங்க எல்லாம் புரட்ஸ்தாந்து அல்ல. ரோமன் கத்தோலிகர்களுக்கு முன்னாடியே உருவான பிரிவுகள்.
           ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களை குறிக்க புரட்ஸ்தாந்து என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
          ஆங்கிலிக்கன், அட்வண்டிஸ்ட், பாப்டிஸ்ட், லுதரேன, பின்னாளைய துறவி கிருத்துவர்கள் (மோர்மன்), மெத்தோடசிம் கிருத்துவர்கள், ஆமிஸ் கிருத்துவர்கள், ஜகோவா கிருத்துவர்கள்.... ....
இன்னும் ஏகப்பட்டது இருக்கு.

பௌத்தம்
             ஈனயாணம், மகாயாணம், வச்ரயாணம் என்று பிரிந்து உள்ளது. இலங்கை, பர்மா, தாய்லாந்தில் கடைபிடிக்கப்படும் தேரவாதம் மகாயாணத்தை சார்ந்தது.
அசோகர் காலத்தை சார்ந்தது ஈனயாணம்.
           தேரவாதத்துக்கும் தமிழர்களுக்கும் ஆகாது. பர்மா, ஈழம் மறந்து போச்சா? கடைசி கட்ட ஈழ போரில் தாய்லாந்து இலங்கைக்கு போர் விமானம் எல்லாம் கொடுத்து உதவுச்சாம்.

நாத்திகம்
            நாத்திகம் என்பதால் நமக்கு தெரிந்த திராவிட கழகத்தை எடுத்துக்கொள்வோம்.
திராவிட கழக வீரமணியின் செயல்பாடு பிடிக்காமல் பலர் பிரிந்து சென்று வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். தொல்லை கொடுப்பவர்கள்\எதிர்ப்பவர்கள் பிரிந்து போனதும் அவரும் தான் பெத்த ராசாவை அடுத்த திக தலைவராக தயார்படுத்தி வருகிறார். இப்ப அந்த இயக்கத்திலிருப்பவர்களும் ஆமாம் சாமி நீங்க சொல்றது தான் சரி என்று தலையாட்டிக்கொண்டுள்ளார்கள்.

நண்பர்களே  ,
          எந்த மதமும் மக்களை ஒன்றிணைக்கவில்லை. அதிலுள்ள பிரிவுகளே இதற்கு சாட்சி. மதமெல்லாம் மக்களை சுரண்ட வந்த பம்மாத்து என கூறிய நாத்திக இயக்கங்களும் மதங்கள் போன்றே உள்ளன. இந்த பிரிவுகளுக்கு காரணம் அதிகாரம் தனக்கு மட்டுமே வேண்டும் என நினைப்பதே. அதிகாரம் கிடைக்காது என்று தெரிந்தால் அதிகாரம் வேண்டுபவர் தன் ஆதரவாளர்களுடன் தனியாக பிரிந்து வந்திடுவார் இல்லையென்றால் அதிகாரத்துக்கு போட்டியாக உள்ளவர்கள் அதிகாரத்திலுள்ளவர்களால் பிரிக்கப்படுவார்கள்\ஓரங்கட்டப்படுவார்கள்\ஒழிக்கப்படுவார்கள்.
                 தவறாக இருந்தாலும் மக்களுக்கு ஏதாவது ஒன்று தேவையாக உள்ளது. இந்த தேவை தான் மதத்துக்காரர்களின் முதலீடு. மதச்சண்டை எல்லாம் வருவது இதனால் தான். யாரும் சண்டை போடலைன்னா அவங்க எப்படி பொழப்ப ஓட்டறது?
              நமக்கு ஏதோவொரு நம்பிக்கை வேண்டும். தவறில்லை ஆனால் நம்ம நம்பிக்கைக்கு எதற்கு அடுத்தவர்கள் தரகு வேலை பார்க்கனும்? தரகுகாரர்கள் அவர்கள் சுயநலத்துக்காக நம்மை அல்லவா பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இல்ல எனக்கு தரகர் வேண்டும் என்பவர்கள் தரகர் தங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
                 ஊருல நிலத்தின் விலை அநியாயத்துக்கு ஏறியதுக்கு யார் காரணம் எல்லாம் தரகரின் சுயநலம் தான். சமூகத்தில் தரகரின் பங்கு பற்றி விலாவரியாக இன்னொரு இடுகை தான் போடனும், இந்த இடுகைக்கு இது போதும் என்று எண்ணுகிறேன்.

நம் நம்பிக்கையை மற்றவர்கள் முதலீடாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

9/24/2010

அன்பே!



ஏதோ எங்க வீட்டுகாரரும் சந்தைக்கு போனாருன்னு சொல்ற மாதிரி நானும் ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சாச்சு. என்ன எழுதுறதுன்னு யோசிச்சு யோசிச்சு ஏற்கனவே . நாட்டுலே எவ்வளவோ விஷயம் இருக்குது ஆனா நம்ம கிட்ட இருக்கா... நம்ம கௌண்டமணி சொல்ற மாதிரி டே நாயே ஊட்டிலே எஸ்டேட் இருக்கு உனக்கு இருக்கா அப்படின்னு எனக்குள்ளே ஒரு கேள்வி. சரி விடு.... எப்போவோ கிறுக்குனது ஒண்ணு எடுத்து போட்டுரலாம்னு இதோ .




அன்று ஒரு நாள் உன் முன்...
உள்ளத்தில் ஓராயிரம் வார்த்தைகள் இருந்தும்
உதட்டளவில் ஊமையாய்; திக்கி திணறி , உன்பால் உள்ள காதலை
உள்ளம் திறந்து உணர்த்திய போது;
புன்சிரிப்பால் எனை புதியவனாய் மாற்றிய போது
கள்ளமில்லா காதலியாய்.......



சாதி சாக்கடைகளும் சமயக் கோட்பாடுகளும் - நம்
காதலை நசுக்க நினைக்கையில், என்
கண் அசைவிற்கு கட்டுப்பட்டு
நண்பர்கள் மட்டுமே சொந்தமாய், நான் ஒருவனே உடமையாய்
என் தாலியை கழுத்தில் வாங்கிய கணத்தில்
மனங்கவர் மனைவியாய்......



சிக்கல்கள் எனும் சிலந்தி வலையில் நான்
சிக்கும் பொழுது என் சிந்தைகளை சிதற விடாமல்
வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் நேரத்தில்
அறநெறி ஊட்டும் ஆசானாய்.....


தோல்விகள் சூழ நான் துவண்டு விழுகையில்
தோள்கொடுக்கும் நேரத்தில்
நல்ல தந்தையாய்.....


உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், நான்
உன்மத்தர்களால் உள்ளம் இடிந்தாலும்
உயிருக்கு உயிராய் வாழ்கையில்
உற்ற நண்பனாய்.....


சோர்ந்து நான் வரும் வேளையில்
புன்சிரிப்போடு எனை எதிர் கொண்டு
ஆதரவாய் அரவணைத்து அன்போடு
அறுசுவை உணவு பரிமாறி, சற்றே நான்
கண்ணயர உன் மடியையே பஞ்சனையாக்கும் பொழுது
அன்புள்ள அன்னையாய்.....


அன்பே! உனக்குள்தான் எத்தனை பரிணாமங்கள்!!!

9/23/2010

Money is important, but how much do you need?

எனது மின்னஞ்சலுக்கு " MONEY IS IMPORTANT" என்ற தலைப்பில் வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு ...........

          Money is not everything, but money is something really very important. Beyond basic needs, money helps us achieve our life’s goals and support the things we care about most deeply – family, education, health care, charity, adventure and fun. It helps us get some of life’s intangibles – freedom or independence, the opportunity to make the most of our skills and talents, the ability to choose our own course in life, financial security. With money, much good can be done and much unnecessary suffering avoided or eliminated.

         But money has its own limitations too. Money can give us the time to appreciate the simple things in life more fully, but not the spirit of innocence and wonder necessary to do so. Money can give us the time to develop our gifts and talents, but not the courage and discipline to do so. Money can give us the power to make a difference in the lives of others, but not the desire to do so. Money can give us the time to develop and nurture our relationships, but not the love and caring necessary to do so. Money can just as easily make us more jaded, escapist, selfish, and lonely.

        Considering the above two sides of truth it is wise to know the answers for two important questions. (1) How much do you need? (2) What is it going to cost you to get it? It is keeping these two questions in mind that gives us a true sense of money’s relationship to happiness. If we have less than what we need, or if what we have is costing us too much we can never be happy. As things stand in the modern world, we need money to eat, sleep, dress, work, play, relate, heal, move about, and enjoy comforts. In what style we choose to do each of these will determine how much money we need, that is, our lifestyle. We should remember in choosing our style that it comes with a price tag.

        Evidence of the psychological and spiritual poverty of the rich and famous fills our newspapers, magazines, tabloids, and television programs and hardly needs repeating here. Suffice to say that many who own great stockpiles of material possessions, and who are, to all outer appearances, extremely wealthy individuals, do not enjoy real abundance. They are never content with what they have and live in constant fear of losing it.

       "We always think if we just had a little bit more money, we'd be happier," says Catherine Sanderson, a psychology professor at Amherst College, "but when we get there, we're not." Indeed, the more we make, the more we want. The more we have, the less effective it is at bringing us joy, and that seeming paradox has long bedeviled economists. "Once you get basic human needs met, a lot more money doesn't make a lot more happiness," notes Dan Gilbert, a psychology professor at Harvard University and the author of the new book “Stumbling on Happiness”.

         While earning more makes us happy in the short term, we quickly adjust to our new wealth--and everything it buys us. Yes, we get a thrill at first from expensive things. But we soon get used to them, a state of running in place that economists call the "hedonic treadmill."

         The problem isn't money, it's us. For deep-seated psychological reasons, when it comes to spending money, we tend to value goods over experiences. Money can help us find more happiness, so long as we know just what we can and can't expect from it. And no, we don't have to buy a Lexus to be happy. Many researches suggest that seeking the good life at a store is an expensive exercise in futility. Money can buy us some happiness, but only if we spend our money properly. Instead of buying things, we should buy memories.

        How much money it costs is not the issue, but how much the money costs us is of critical importance. Money should not cost us our soul, relationships, dignity, health, intelligence and joy in simple things of life. People who figure out what they truly value and then align their money with those values have the strongest sense of financial and personal well-being.

நன்றி : கணேசன் 

9/22/2010

தனித்துவமானவரா ரஜினி ?

            நண்பர் ஒருவர் "உங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை ? " என்ற பதிவிலிட்ட பின்னூட்டலுக்கான பதிலை ஒரு பதிவாக எழுதுகிறேன். பலரும் ரஜினியை விமர்சிப்பதற்கு கையிலெடுக்கும் இன்னுமொரு விடயம் இதுவென்பதால் ஒரு ரஜினி விசுவாசியாக எனது விளக்கம்.
இதுதான் அவரது பின்னூட்டல்.
//Rajini should stop acting on public meeting(should not be like others).., It is accustomed to cinema fraternity to praise the politician when they are on power,for instance when Jaya was CM Rajini called her 'Thairia lakshmi' now he is in all praise for Karuna. All you Rajini fans should understand this. Only then rajini will be unique from others.//

நண்பர் அவர்களே.....
          கலைஞர் இருந்த மேடையில் வைத்து விஜயகாந்தின் வெற்றியை பாராட்டிய ரஜினியை, எல்லோருமே ஜெயலலிதாவுக்கு பயந்து வாயை பொத்திக்கொண்டிருந்த நேரம் அவரது அமைச்சர்கள் முன்னிலையிலேயே ஜெயலிதாவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ரஜினியை உங்களுக்கு தெரியாதா? 2004 ஆம் ஆண்டு எனது ஒட்டு அ.தி.மு.க விற்கு என ரஜினி கூறியதுகூட ராமதாசின் ரசிகர்கள் மீதான தாக்குதலின் எதிரொலிதான், அப்போதுகூட ரஜினி கலைஞரை விமர்சித்ததில்லை. ஜெயலிதாவை 'தைரியலக்ஸ்மி' என பாராட்டியது வீரப்பனை கொன்றதற்காக மட்டும்தான். அங்கு ஜெயலிதாவின் ஆட்சித்திறனை அவர் ஒரு தடவைகூட பாராட்டவில்லை. இதுவரை சினிமாவிலுமிருந்து வந்த எந்த முதல்வர்களும் செய்யாத துணைநடிகர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை இப்போது கலைஞர் ஆரம்பித்துள்ளதற்குரஜினி பாராட்டியதில் என்ன தவறு?ஒருவர் ஏதாவது தப்பு பண்ணும் போது திட்டினா, அப்புறமா அவர் என்னதான் நல்லது பண்ணாலும் திட்டிக்கிட்டே இருக்கணும் என்பது எந்த ஊரு நியாயம் சார். இதுவும் ரஜினியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு தகுதியே அன்றி குறையில்லைக் கண்ணா .
                வீடு வழங்கும் திட்டத்தை கலைஞர் அறிவித்தபோதுகூட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இல்லாமல் சரியானவர்களுக்குத்தான் வீடு போய் சேரவேண்டும் என்பதை 'தாத்தா பேரன்' கதைமூலம் முகத்துக்கு முன்னாலேயே கூறியவர் ரஜினி. கலைஞரின் பாராட்டுவிழாவில் அஜித்தின் பேச்சுக்கு கலைஞரின் அருகிலிருந்தே எழுந்து கைதட்டியவர் ரஜினி. தன் குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பாகஇருக்கவேண்டும் என்பதால்தான் கலைஞர் ரஜினியை எப்போதும் தன பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார் . இதனால்தான் தான் சம்பந்தப்பட்ட எல்லா விழாக்களுக்கும் ரஜினியை அழைக்கிறார். போனவிடத்தில் திட்டிவிட்டா வரமுடியும்? எதிரியை கூட வையாத ரஜினி நண்பன் என்னும் பேரை சொல்லிக்கொண்டு திரிபவரை வைவாரா?
         தன்னைத்தவிர ரஜினி தன்கூட இருக்கும் அனைவரையுமே புகழ்ந்துதான் பேசுவது வழமை , இது நடிப்பல்ல நண்பரே நல்ல பண்பு. எதற்க்காக ரஜினி தன்னைதாழ்த்தி கமலை புகழவேண்டும்? சரி ரஜினி திட்டமிட்டு செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், ஏன் மற்ற யாருமே இதை செய்வதில்லை? காரணம் ஈகோ, ரஜினியிடம்அது இல்லை என்பதால்தான் நண்பர் 'கவிதைகாதலன்' குறிப்பிட்ட மாதிரி "நிச்சயம் ரஜினி என்ற ஒற்றை மனிதனைத்தவிர வேறு யாராலும் இந்த 150 கோடி ரூபாயை தோளில் தூக்கி சுமக்க முடியாது... ஆனால் அந்த மனிதனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாம் ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா என்கிறார்." என வியந்து பார்க்க முடிகிறது.
            ரஜினி அ.தி.மு,க விற்கு ஆதரவு தெரிவித்தது (ஒரு தடவை ) தவறென்றால் காங்கிரசும், பி.ஜே.பி யும் மாறிமாறி தி.மு.க வுடனும் அ.தி.மு.க வுடனும் கூட்டணி அமைப்பதை என்னவென்று சொல்வது?
         தி.க வுக்கு ஓட்டுப்போட சொன்ன அண்ணா மற்றும் கலைஞர் பின்னர் தி.கவிற்கு போட வேண்டாம் தி.மு.கா விற்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர்.
         தி.மு.க விற்கு குறிப்பாக கலைஞருக்கு ஒட்டு கேட்ட எம்.ஜி.ஆர் பின்னர் தி.மு.க ஊழல் கட்சி அ.தி.மு.க விற்கு வாக்கு போடுங்கள் என்றார்.
        அண்ணா, எம். ஜி ஆர் இருவருமே தமது தாய் கட்சிகளைவிடுத்து 'தனியாக கட்சி தொடக்கிய' பின்னர்தான் தாய் கழகங்களுக்கு ஓட்டுப்பட வேண்டாம் தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர், அங்கு சொந்த கட்சி என்ற சுயநலம் இருந்தது. ஆனால் ரஜினி அ.தி.மு.கவிற்கு ஓட்டுப்போட சொல்லியபோது ரஜினி என்ன அ.தி.மு.க தலைவரா? இல்லை உறுப்பினரா? ரஜினி அ.தி.மு.க வை ஆதரித்தது ராமதாசுடன் கலைஞர் வைத்த கூட்டணிக்காக, ரசிகர்களைத்தாக்கிய ராமதாசுக்காக.
          ரஜினி எப்போதுமே ஏனையவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்தான், இல்லாவிட்டால் 60 வயதிலும் 35 வருடமாக ஒரு துறையில் யாருமே நெருங்க முடியாத சூரியனாக இருக்க முடியாது.
          நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கிறீர்களோ அவர்களை ஏதாவதொரு கோணத்தில் விமர்சிக்க முடியும், ஆனால் அவர்களிடிமிருக்கும் பின்பற்ற வேண்டிய விடயங்களைத்தான் இளைஞன் பின்பற்றுகிறான். ரஜினியிடம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் மிக அதிகமாக இருப்பதால்த்தான் ரஜினி பல இளைஞர்களுக்கு இன்றும் தனித்துவமான வழிகாட்டியாக இருக்கிறார்.


9/21/2010

இரத்த தானம்.


             இன்று எனது நண்பரின் நண்பர் அவரது நண்பர் மனைவிக்கு   அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அந்த மருத்துவர் (முதல் நாள் தானே ஏற்பாடு செய்வதாக கூறினார் பிறகு மாலையில் வந்து நீங்கள் தான் ஏற்பாடு பண்ண வேண்டும் அதுக்கு அப்புறம் தான் சிகிச்சை என்று கூறிவிட்டார்), ஏற்கனவே எடுக்கப்பட்ட இரத்தம் செலுத்த முடியாது (ஏதோ மருத்துவ காரணம் சொன்னார்கள்) எனவும் இங்கு வந்து தான் இரத்ததானம் தரவேண்டும் எனவும் கடைசி நேரத்தில் கூறிவிட்டனர். அதுவும் அவரின் இரத்தம் ரொம்ப அரிதான A1B+ve வகையை சேர்ந்தது, அதனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே அவர் அனைவர்க்கும் போன் செய்து அவசரமாக விஷத்தை சொன்னார் ,அது என் நண்பரின் உதவியுடன் எனக்கு வந்தது , நானும் என் நண்பரின் உதவியுடன் அவர்களுகு  இரத்தம் தந்துள்ளேன், அதை இன்று நினைத்தாலும் உள்ளூர ஒரு சந்தோஷம். அவர்கள் நமக்கு பல்வேறு தானம் தந்தவனைபோல் என்னை பார்த்தனர் , ஒருவர் மாறி ஒருவராக தொடர்பு கொண்டு இறுதியாக திரு.ராமசாமி என்ற அன்பர் உடனே நேரில் வந்து வாழ்த்து  தெரிவித்து  கிளம்பி வந்து விட்டார். அவர் சுகாதார  ஒரு முன்னணி பன்னாட்டு  நிறுவனத்தில் வேலை செய்கிறார், அங்குஇருந்து நாங்கள் வந்தவுடன் , மருத்துவர்கள்  அறுவை சிகிச்சை செய்த நாள் முதல் ,அடுத்த  இரு தினங்களுக்கு பிறகு தொடர்ந்து என்னுடன் மிகவும் நீண்ட நாட்களாக பழகியதுபோல் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்
      இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் மனித நேய அடிப்படயில்  உங்கள் நண்பர்களின் உதவியுடன் தானம் செய்ய முயற்சி செய்யுங்கள்........  
                       நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள்.

நன்றி.

9/20/2010

அண்ணா உன் கடிததிற்க்கு பதில்


அனுப்புனர் ,
            பாசமுள்ள தங்கை
            சொர்கம்
பெருநர்
          என் ப்ரியமான அண்ணா ........
           நரகம்

அன்புள்ள அண்ணன்  உங்கள் அன்பில் வாழ வாய்க்காத தங்கை எழுதுவது........
      இங்கு நான் நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவரும் நலம்.அங்கு நீ,நம் அப்பா அம்மா அனைவரும் நலமா?
            பிறந்து 25 நாளில் இறந்த நான் சொர்கத்தில் தான் இருப்பேன் என்று நீ நம்புகிறாய்.ஆம் உண்மை தான் அண்ணா........ நான் சொர்கத்தில் தான் இருக்கிறேன்.ஆனால் இதை விட சுகமான சொர்கமாக நம் அம்மா அப்பா மற்றும் நீ உங்களின் மனமும் நிழலும் தான் என நினைக்கிறேன்.இதில் வாழ இயலாத எனக்கு இந்த சொர்க்கம் இனிக்கவில்லை அண்ணா.........
          ஆம் அண்ணா நானும் அந்த கடவுளை சாடுகிறேன்.அங்கு எத்தனை கொடுமைகளும் கொடூரங்களும் நடந்தால் என்ன?அண்ணா என்ற அஸ்திவாரதிற்க்கு முன் அவை பொடிபொடியாக அல்லவா நசங்கிவிடும்.உன் அன்பிலும் அரவணைப்பிலும் என்னை வாழ பணிக்காத அந்த கடவுளை நான் சாடுகிறேன்........
          நீ தாய்மாமன் சீர் செய்ய விரும்பினால் பிறந்த நொடியே தூக்கி எறியபட்ட அபலை தங்கைகள் ஏராளம்..இது தூக்கி எறியும் தாய்மார்களின் தாராளம்.அந்த அபலை தங்கைகளுக்கு அண்ணாக இருந்து வருடத்திற்க்கு ஒரு முறை சீர் செய் அண்ணா வசதி இருந்தால் வாய்க்கும் போதெல்லாம்.
                  எனக்கும் உன்னுடன் மோட்டார் பைக்கில் கல்லூரி வாசலில் இறங்க ஆசை..... கம்பிரமாக வரும் உன்னை கண்டு என் தோழிகள் உன் மேல் காதல் கொள்ள ஆசை அதை கண்டு இவன் என் அண்ணன் என கர்விக்க எனக்கு ஆசை....... என்னை காதலுடன் காணக் கூட காளையர்கள் அஞ்சுவதை கண்டுவிட ஆசை...... வேணாம்டா அவ  தங்கை அவ அண்ணனுக்கு தெரிஞ்சா நம்மள கொன்னுடுவான் என்று அவர்கள் பேசுவதை கேட்க ஆசை.........இதையெல்லாம் இந்த சொர்கம் தரவில்லை அண்ணா இங்கு ஆட்கள் உண்டு அமைதி உண்டு ஆனால் அன்பு மட்டும் இல்லை அண்ணா.........
           ஆம் அண்ண நான் இருந்திருந்தால் உன் காதலுக்கு உதவி செய்திருப்பேன் அதை காரணம் காட்டி உன்னை மிரட்டி உன்னிடம் என்னகு காசு,உடை,சாக்லெட் இப்படி நிறைய செலவும் வைத்திருப்பேன்.........என் அண்ணிக்கு நீ வாங்கி தந்த புடவை எனக்கு வேண்டுமென்று பொய்ச் சண்டை போட்டிருப்பேன்.........உங்களுடன் திரையரங்கத்திற்க்கு வந்து உங்கள் இருவருக்கு இடையில் அமர்ந்து உங்கள் முகம் போகும் போக்கை கண்டு ரசித்திருப்பேன்...... இந்த சின்ன சின்ன ரசனைகளும் ஆசைகளும் ஏக்கங்களும் இந்த சொர்கத்தில் தீர்வதும் இல்லை கிடைப்பதும் இல்லை அண்ணா.......இங்கிருக்கும் எனக்கு உன்னிடம் ஒரு விண்ணப்பம் அண்ணா உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் விரைவில் அதை குறைத்து கொண்டு விட்டு விடு அண்ணா....... நான் அங்கில்லாமல் இங்கிருந்தாலும் உன் மீது எனக்கு அக்கறை உண்டு. நம் அம்மா அப்பாவுக்கு எல்லாமே நீ தானே அண்ணா......உன் உடல் நலத்தில் எதேனும் குறை ஏற்பட்டால் அவர்கள் மொத்த சந்தோஷதையும் நிம்மதியையும் இழந்து விடுவார்கள் அண்ணா........
சொர்கம் பூமியிலோ வானத்திலோ இல்லை அண்ணா நாம் வாழும் வாழ்க்கையிலும் நல்ல பண்புகளிலும் செயல்களிலும் தான் உள்ளது.........
       எனக்கு ஒரு ஆசை அண்ணா எனக்கு சீக்கிரம் ஒரு பெயர் வைங்கண்ணா...................
இப்படிக்கு ப்ரியமுடன் தங்கை

9/19/2010

நட்பூ

உங்களை
நட்பென்று சொல்வதை விட
நாளென்று சொல்லவே
விரும்புகிறேன்........

நட்பு காணாத நாட்கள் நகரும்
நாள் காணாது
நொடி ஒன்று
பிறக்குமோ?

ஆதலால் தான்
உங்களை நட்பென்று
சொல்வதை விட
நாள் என்று சொல்லவே
விரும்புகிறேன்........

9/18/2010

என் அனுபவம் - பணம் எங்கே ?


அன்பை சொல்கிறேன் என்று
அழகானவள் ஒருத்தி வந்தாள்
பாக்கெட்டில் பணவீக்கம் என்றதும்
மனதால் அவள் நொந்தாள்

பணம் பார்க்கும் மனங்கள்
மனம் பார்க்க விரும்புவதில்லை
கல்லாகி போன மனங்கள்
கரைந்தாலும் கரைவதில்லை

உறவை சொல்வோர் எல்லாம்
நிறைவை தருவதில்லை
ஈரம் இருந்தால் மட்டுமே
இரங்குகிறது இதயங்கள் கூட

பரிவு என வருவதெல்லாம்
பணத்தை தான் தேடுகிறது
உறவென வருவதெல்லாம்
ஊட்டத்தை மட்டுமே நாடுகிறது

காசில்லா கோலத்திற்கு
கடவுள் கூட இரங்குவதில்லை
கடனாளியாகிவிட்டால்
கட்டிலில் கூட இடமில்லை

உடன் பிறந்தேன் என்பவர் எல்லாம்
நாம் உருக்குலைந்தால
உடன் இருப்பதில்லை
பத்து மாதம் சுமந்த உறவும்
படுக்கைக்கு துணை வந்தால்
நம்மை நினைப்பதில்லை

காசு பார்க்கும் கலிகாலமடா
இதில் காண்பதெல்லாம் பொய் வேஷமடா....

9/17/2010

எங்கள் தேவதைக்கு ஒருகடிதம்

அனுப்புநர்
 பாசமுள்ள அண்ணன் 
நரகம் , பூமியிலிருந்து,

பெறுநர்
என் தங்கை
சொர்க்கம்,வானில்.

அன்பு தங்கைக்கு பாசமுள்ள? சகோதரன்  எழுதுவது...
        என்னவென்றால் இங்கு நான்,நம் அப்பா அம்மா அனைவரும் நலம் அது போல் அங்கு நீ நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவர் நலம் அறிய ஆவல்.(இவர்களும் உன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்)
         பிறந்து 25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய் என்ற நம்பிக்கையுடன் சொர்கத்திற்க்கு இக்கடிதத்தை அஞ்சலிடுகிறேன்.
         அளவற்ற தாய்பாசம்,அன்பான தந்தையின் நேசம் இவற்றை விட்டு சீக்கிரம் உன்னை தன்னோடு அழைத்துக்கொண்ட அந்த கடவுளை நான் சாடுகிறேன்.தீயை விட மோசமான பெண்ணிய தீண்டுதல்கள் புரியும் கயவர்களையும்,கூடவே இருந்து குழி பறிக்கும் பச்சோந்திகளையும்,காட்டிக்கொடுக்கும் கபடதாரிகளையும்,
தாயையும்,தந்தையயும் தவிக்கவிடும் நன்றிகெட்டவர்களையும்,சொத்துக்காக உடன்பிறந்தவர்களை சாகடிக்கும் பேராசைபிடித்த பேய்களையும்,கைம்பெண்ணை ஏசும் கருநாக்கு பாம்புகளையும்,என்போல் வெளிநாடு வந்திருக்கும் சகோதரர்களின் மனைவிகளை தவறான் நோக்கில் அணுகும் மண்ணுலிபாம்புகளையும் விட்டு விட்டு உன் போல் ஒன்றுமறியா பச்சிளம் குழந்தையை தன்னுடன் சேர்த்துக்கொள்ள எப்படி அந்த கடவுளுக்கு மனசு வந்தது?
           நான் தாய்மாமன் சீர் கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும் பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில் கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய் கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும் குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் பாக்கியம் இல்லை,மச்சினன் உறவு கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ தவிர்த்து யாருமில்லை.
       ஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா? நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா? இல்லை கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி கொண்டாயா?பெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயா?கணவன் வீட்டுக்கு சென்றால் மாமனார் மாமியார் கொடுமைக்கு ஆளாக வேண்டுமென்றெண்ணிவிட்டாயா?
           நீயிருந்திருந்தால் எனக்காக என் காதலிக்கு தூது சென்றிருப்பாய் காதலும் ஜெயித்திருக்கும்.நீயிருந்திருந்தால் நான் சிகரெட் பிடிப்பதை அப்பாவிடம் கூறி அடிவாங்கியாவது சிகரெட் பிடிப்பதை நிறுத்தியிருப்பேன் இல்லையேல் உன் பாசத்திற்க்காகவாவது நிறுத்தியிருப்பேன்,நீயிருந்திருந்தால் எனக்கு தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு முதல் வாசகியாயிருப்பாய்.நீயிருந்திருந்தால் போலியில்லா பாசம் எனக்கு கிடைத்திருக்கும்,அன்பில்லாமல் அன்னிய தேசத்திலிருக்கும் என்னை அடிக்கடி தொலைபேசியில் விசாரிக்கும் அன்பு கிடைத்திருக்கும் உனக்காக நிறைய பரிசுப்பொருள்கள் வாங்கியிருப்பேன்.நீயிருந்திருந்தால் அண்டை அயலவர் உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன் அத்தனையும் வெறும் நனவாகவே போய்விட்டது.
           சகோதரி நான் உன்னை நினைக்கும் இவ்வேளையில் நீயும் என்னை நினைத்துகொண்டிருப்பாய் என்றெண்ணுகிறேன்,அங்கு உனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமலிருக்கும் என்றெண்ணுகிறேன் ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களே.கண்டிப்பாக அங்கு வாழும் அன்னை தெரேசா,காந்திஜி,நேரு,ஆகியோரை நல்ம் விசாரித்ததாக கூறவும்.கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.மறுபிறவியென்று ஒன்று இருந்தால் சகோதரியாய் சந்தோசப்படவில்லை நீ ஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
          இவண் உன் பாசத்திற்க்கும் நேசத்திற்க்குமுரிய சகோதரன்

குறிப்பு : இக்கடிதம் எதிர்பாரதவிதமாக படிக்க நேர்ந்தது ,அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன் என நம்பிக்கையடன் இதன் பதில் கடிதம் நாளைய பதிவில் .......

9/16/2010

அனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .


அனுபவம் அனைவருக்கும்
அவசியம் தேவை ஏனெனில்
அது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று ;
அது வாழ்க்கை அர்த்தத்தை புரியவைக்கும்;
நிபுணர் ஆக்கும் ; பயத்தை போக்கும்;
பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ;
முக்கியமாக பிரமிக்கத்தக்க வகையில்
உபயோகமாகி புத்திசாலி என பிரபலப்படுத்தும் .
சரித்திரத்தில் நல்ல அனுபவசாலிகள்
தங்களின் லட்சியங்களை
சிரமம் இல்லாமல் முழுதிருப்தியுடன்
நினைத்தபடி அடைந்துள்ளனர்
இதில் சந்தேகமேயில்லை .
அதனால் தான்
புத்திசாலி தமிழனுக்கு அனுபவம் 
அவசியம் தேவை எனவே ,
அனைத்துத்தமிழர்களும் கரம் சேர்த்து சபதம் ஏற்ப்போம் ;
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவேம்
நிச்சயம் உயர்வோம் புத்திசாலிகளாக .

9/15/2010

திருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா ?.


திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை,திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய முடிகிறது ...
எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100ல் 1 பங்கு பெருமைகூட நமது திருக்குறளுக்குக் கொடுப்பதில்லை ...
திருக்குறளுக்கு அத்தகைய பெருமையில்லாமல் போனதற்குக் காரணம் .இது ஓர் திராவிட நூல் என்பது தான் ...
இன்ன காரியங்களால் இன்ன வாஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்
.விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்து தான் பிரத்யக்ஷ அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாகஅமையக்கூடியது .தத்துவார்த்தம் கூறத்தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற கருத்தாகும் .
தத்துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய சாமர்த்தியத்தைக்காட்டிக்
கொள்ளச் சிலர் செய்யும்பித்தலாட்டம் என்றுதான் நான்
கூறுவேன்.
திருக்குறளில் அத்தகைய த்த்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை...
அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம் ...
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள் தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள் 
.உணர்வது மட்டும்மல்ல,நன்றாக மனத்தில் பதிய வையுங்கள் ...
திருக்குறள் நூல் ஒன்றே போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க ...
100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் 'டெக்ஸ்ட்' புத்தகங்கள் வாங்கிப் படித்து
மடையர்களாவதைவிட 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்றுதான் கூறுவேன் .திருக்குறள் ஒன்றே போதும் 
.உனக்கு அறிவு உண்டாக்க ;ஒழுக்கத்தைக்கற்பித்துக் கொடுக்க;உலகஞானம் மேற்பட.அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரைஅலட்சியப்படுத்தி வந்திருக்கின்றோம்...அனைவரும் திருக்குறளைப்படித்து அறிவுள்ள
மக்களாகி இன்புற்று வாழவேண்டும் என்பது தான் எனது ஆசை...........
சென்னை  திருவள்ளுவர் கழகம் சார்பில் 14.3.48-ல் நடைபெற்ற 3வது
திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அருமைவாய்ந்த சொற்பொழிவிலிருந்து ... சில துளிகள் ... அவ்வளவே.

9/14/2010

பன்றி காய்ச்சல் தான்!!!!!!!.வேறென்ன.....???


           இந்த பன்றி காய்ச்சல் வந்தாலும் வந்தது அவனவன் டாக்டர் மாதிரி வாயில் கவசம் மாட்டிகிட்டு சுத்துறதும் தாலிபன் தீவிரவாதி மாதிரி கண்ண மட்டும் காட்டிட்டு முகத்த பூரா மூடிட்டு பேட்டி குடுப்பதும் தெருவுல சுத்துறதும் பார்க்கவே வினோதமா இருக்கு. இந்த மாதிரி முன்னாடி Anthrax மற்றும் SARS பீதி அமெரிக்காவுல சுத்தீட்டு இருந்தானுங்க இப்ப இங்கயும் பயம் வந்துடுச்சு. இந்த பயம் ஏற்பட்டதுக்கு முக்கிய காரணம் மீடியா தான், நொடிக்கு ஒரு முறை அங்க வந்துடுச்சு இங்க வந்துடுச்சுன்னு நல்லா கிளப்புறாங்க பீதிய,  இதைப் பற்றி விழிப்புணர்வு கூறி மக்களை ஆறுதலும் அமைதியும் கொள்ள செய்யக் கூடாது??, அதாவது நோயை கண்டறிய செய்யும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள்) நிலைமை இப்படி இருக்க சும்மா ஐஸ் சாப்பிட்டு வரும் தும்மல் தலைக்கு குளிததனால் வரும் தும்மல் அப்புறம் மூக்கு போடி போட்டதனால் வரும் தும்மல் இருமலுக்கு கூட நேரா அங்க போய் பரிசோதனை பண்ண சொன்ன எப்படி?? இப்படி செய்வதனால் உண்மையாக நோய் இருப்பவர்கள் கூட சரியான சிகிச்சை பெற முடியாமல் போகலாம் இல்லையா?? அல்லது அங்கு செல்வதனால் நோய் தொற்றிக் கொண்டால்?? கொஞ்சம் அமைதியாக பதட்டம் இல்லாமல் யோசிச்சி செயல்பட வேண்டும்.

இது போன்ற நோய்கள் காலம் காலமாக வருவது உண்டு, ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் தாக்கம் பெரிதாகிறது. இதற்கு காரணம் VIRUS கிரிமிகள் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர், அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் நாம் அவ்வளவு நோஞ்சானாக மாறிவருகிறோம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை. நம் உணவு முறை, வேலை செய்யும் முறை, உடல் உழைப்பின்மை, தூங்க நேரமின்மை. இப்படி பல காரணங்கள் உண்டு.

பொதுவாக எனக்கு தெரிந்த மருதுவர்களிடத்தில் பேசியதில் இது மிகவும் பயப்பட வேண்டிய நோய் இல்லை என்று கூறினர். வேகமாக பரவக் கூடியது தான் அதில் ஒரு சந்தேகமும் இல்லை, ஆனால் இது யாரை தொற்றிக் கொள்ளும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தான். அதனால் தான் சிறு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கபடுகின்றனர், வேறு ஏதேனும் பெரிய நோய் உடையவர்களுக்கும் இது வேகமாக பரவுகிறது.

இந்த மாதிரி நேரத்தில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்வர், ஒருவர் துளசி சாபிட்டால் வராது என்று கூறினார் எனக்கு என்னமோ சரிதான் என்று படுகிறது ஏனென்றால் துளசியில் பல்வேறு பயன்கள் உண்டு. சாப்பிட்டு தான் பாருங்களேன், ஆனால் மக்கள் போகிற வேகத்தை பார்த்தல் ஊரில் ஒரு துளசி செடி மிஞ்சாது போல.

நண்பன் ஒருவன் அனுப்பிய மினஞ்சல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் படித்து பாருங்கள், நேரமின்மையால் மொழிபெயர்க்க இயலவில்லை
மன்னிக்கவும்.

Scientific Prevention of Swine Flue using Household Products
Inhale Clove Oil (Lavang) For 1 Second.
Chew 1 Clove In a Day
Eat Raw Garlic (Lasun), Onion, Ginger (Aale) (1 to 5gm)
Drink Hot Milk With 2gm of Turmeric
Consume Plenty Of Vit C Fruits-Lemon/Avala

Precautions for swine flu
1. Wash your hands frequently
Use the antibacterial soaps to cleanse your hands. Wash them often, at least 15 seconds and rinse with running water.

2. Get enough sleep
Try to get 8 hours of good sleep every night to keep your immune system in top flu-fighting shape.

3. Drink sufficient water
Drink 8 to10 glasses of water each day to flush toxins from your system and maintain good moisture and mucous production in your sinuses.

4. Boost your immune system
Keeping your body strong, nourished, and ready to fight infection is important in flu prevention. So stick with whole grains, colorful vegetables, and vitamin-rich fruits.

5. Keep informed
The government is taking necessary steps to prevent the pandemic and periodically release guidelines to keep the pandemic away. Please make sure to keep up to date on the information and act in a calm manner.

6. Avoid alcohol
Apart from being a mood depressant, alcohol is an immune suppressant that can actually decrease your resistance to viral infections like swine flu. So stay away from alcoholic drinks so that your immune system may be strong.

7. Be physically active
Moderate exercise can support the immune system by increasing circulation and oxygenating the body. For example brisk walking for 30-40 minutes 3-4 times a week will significantly perk up your immunity.

8. Keep away from sick people
Flu virus spreads when particles dispersed into the air through a cough or sneeze reach someone else’s nose. So if you have to be around someone who is sick, try to stay a few feet away from them and especially, avoid physical contact.

9. Know when to get help
Consult your doctor if you have a cough and fever and follow their instructions, including taking medicine as prescribed.

10. Avoid crowded areas
Try to avoid unnecessary trips outside.

நன்றி.

9/13/2010

ஒரு காதல் கதை

முன்குறிப்பு:
இது சமீபத்தில் டிவியில் பார்த்த Fastrack கண்கண்ணாடி விளம்பரம் (You tube லிங்க் கிடைக்கவில்லை, கிடைத்தால் அப்புறம் சேர்க்கிறேன்) பார்த்ததில் தோன்றிய யோசனை இது,

இது ஒரு மொக்கைக் கதை மட்டுமே இதற்குள் உள்குத்து, நுண்ணரசியல் எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

இதுவும் ஒரு காதல் கதை

என்னாச்சு, என்ன சொன்னார், உன்னை பொண்ணு பார்க்க வந்தவர்?
வந்தாரு, பார்த்தாரு, போயிட்டாரு,
அவரோட பேசினியா?
ம், பேசினேன், அரைமணிநேரம்,
என்ன சொன்னார்?
அவரைப்பத்தி சொன்னாரு, என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்னென்ன பழக்கம் உண்டு, எல்லாம் சொன்னாரு,
உன்னைப் பத்தி என்ன சொன்னார்?
ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாரு,
நீ என்ன சொன்னாய்?
நானும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்,
என்னது, பிடிச்சிருக்குன்னு சொன்னியா?
ஆமாம்,
சொல்றதுக்கு முன்னாடி, என் முகம் உனக்கு ஞாபகம் வரலையா?
வந்தது, ஆனா, அதுக்கும் முன்னாடி, எங்க அப்பாவோட முகம் ஞாபகம் வந்தது, அதனால் தான்,
கொஞ்சம் கூட நினைவில்லையா, எத்தனை நாள், எத்தனை போன் கால், எத்தனை மெசேஜ், எவ்வளவு மணி நேரம் பேசியிருப்போம், எல்லாம் ஒரு அரை மணி நேரத்தில் முடிஞ்சு போச்சா?
புரியாம பேசாதே, நான் முதலில் இருந்தே சொல்லிக்கிட்டுருந்தேன், இது நடக்காதுன்னு, நீ தான் பேசிப் பேசி என் மனச மாத்தினாய்,
நீயும் தான் மனசை மாத்திக்கிட்ட, எத்தனை நாள் சொல்லியிருக்கே, "நான் இல்லாம உன்னால வாழவே முடியாதுன்னு",
உண்மை தான், ஆனா என் அப்பாவோட முகத்தைப் பார்த்தா, அவர்கிட்ட சொல்லி மனசை நோகடிக்கத் தோணலை,
நிஜமாதான் சொல்றியா? இது தான் உன் முடிவா?
ஆமாம், நல்ல யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்,
சரி, அப்புறம் உன் இஷ்டம், போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு குடுத்துட்டு போ,
என்ன வேணும் உனக்கு? என்னைத் தவிர எது வேணும்னாலும் கேளு,
கவலைப்படாதே, உன்னையெல்லாம் கேட்கமாட்டேன்,
அப்புறம்,
ஒவ்வொரு நாளும் குறைஞ்சது, ரெண்டு மணி நேரமாவது, போன்ல பேசியிருப்போம், ஏதோ என் கம்பெனி சியூஜில வாங்கின கனெக்க்ஷன்கிறதால பில்லு எகிறாம இருந்தது, ஏற்கனவே மூணு நம்பர் என் பேர்ல வாங்கிட்டேன், வேற கிடைக்காது, அதுனால அந்த சிம்கார்டை மட்டும் கழட்டிக் குடுத்துட்டு போ, அடுத்து வருபவளுக்குகொடுக்கணும்.
பின்குறிப்பு
இதைக் கதையை நாளைய இயக்குனர் என்ற போட்டிக்கு  எழுதவே எண்ணியிருந்தேன், சரியான நேரம்  என்னிடம் அமையாததால் , நீங்கள் தப்பிவிட்டீர்கள், நான் பங்கு கொள்ளவில்லை.

9/12/2010

இவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்திரபாபு,


ந்திரபாபு என்ற பேரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது முக்கியமா அவரது பாடல்கள் தான் நான் ஒரு முட்டாளுங்க,... புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...... குங்கும பூவே கொஞ்சு புறாவே.......
எனக்கு அவர் பாடிய அனைத்து பாடல்களுமே பிடிக்கும், அவரின் வாய்ஸ் நம் அனைவர்க்கும்  ஈர்த்து வந்துள்ளது என்றால் அது மிகையில்லை. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத காலத்தால் அழியாத பாடல்கள் அவை.
நான் சந்திரபாபுவின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள திரு.முகில் எழுதியுள்ள கண்ணிரும் புன்னகையும் என்ற புத்தகத்தை வாங்கி ஒரே மூச்சில் படித்தேன். அப்போது தான் சந்திரபாபு மாதிரி ஒருத்தன் வாழ்ந்ததும் இல்ல வீழ்ந்ததும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.

சந்திரபாபு பொதுவாகவே மேல்நாட்டு பாணியில் இருக்க விரும்புவார், ஸ்டைல்ஆக இங்கிலீஷ் பேசுவார் அவர் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆயினும் மிஸ்டர் என்று சொல்லியே அழைப்பார் (எம்.ஜி.ஆரை கூட அவ்வாறே அழைப்பார்) யாருக்கும் பயப்பட மாட்டார். காக்க பிடிக்க மாட்டார். மனதில் பட்டதை பேசும் குணம் கொண்ட அவருக்கு இதனால் எதிரிகள் அதிகம் ஆயினர். அவருக்கு அவரின் திருமண வாழ்வு சந்தோசத்தை தரவில்லை அதனால் குடி பழக்கத்துக்கு ஆளானர்.
***********************************************************
(அதனால் கொஞ்சம் சிரமம் பாராமல் லிங்கை கிளிக் செய்து சந்திரபாபு வீடியோவை கண்டு ரசிக்கவும்.)
http://www.youtube.com/watch?v=Upso-wCi0Cs
http://www.youtube.com/watch?v=xVnP2aXmO4I
http://www.youtube.com/watch?v=Hia6FsJBNtk
**********************************************************
சிவாஜியிடம் சபாஷ் மீனா கதை சொன்னார் தயாரிப்பளார், அந்த காமெடியன் வேடத்தில் சந்திரபாபு தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று கூறி சந்திரபாபுவை புக் பண்ண சொன்னார் சிவாஜி,
சந்திரபாபுவிடம் கதை சொன்னார் தயாரிப்பளார்.
உடனே சந்திரபாபு "யார் ஹீரோ ?"...
"சிவாஜி கணேசன்" என்று பதில் வந்தது.
"கணேசன், he is a good actor, எனக்கு என்ன சம்பளம்"? என்று கேட்டார் சந்திரபாபு."நீங்க எவ்வளவு எதிர்பார்க்கிரிங்க?" அப்படினார் தயாரிப்பளார் .சந்திரபாபு "சிவாஜிக்கு என்ன சம்பளம்?"
"ஒரு லட்சம்"
"அப்போ எனக்கு லட்சத்தை விட ஒரு ரூபாய் அதிகம் தாங்க, ஒரு லட்சத்தி ஒரு ரூபாய்."
தயாரிப்பளார் டர்ராகி சிவாஜியிடம் வந்து விவரத்தை கூறினார்.உடனே சிவாஜி "அவன் கேக்குறத கொடுத்துடுங்க இதுல அவனுக்கு நல்ல scope இருக்கு, அவன் நடிச்சாதான் நல்ல வரும்" தயாரிப்பளாரும் அந்த சம்பளத்தை கொடுக்க ஒத்து கொண்டார். படமும் சூப்பர் ஹிட். .. அந்த படத்தை பார்த்துதான் நம்ம சுந்தர்.சி அவர்கள் உள்ளதை அள்ளித்தா
என்ற படத்தை எடுத்து வெற்றியும் அடைந்தார். இரண்டு படங்களிலும் வெற்றிக்கு காரணம் காமெடி ஜாம்பவான்கள் சந்திரபாபுவும், கவுண்டமணியும் என்றால் அது மறுப்பதற்கு இல்லை.
***********
நான் கண்ணதாசனின் புத்தகங்களை படித்ததில் கண்ணதாசன் சந்திரபாபுவால் பாதிக்க பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார். கண்ணதாசன் அவர்கள் தயாரித்த கவலை இல்லாத மனிதன் படத்துக்கு சந்திரபாபு சரியாக படபிடிப்புக்கு வருவதில்லை, வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று வேலைகாரர்கள் மூலம் சொல்லி அனுப்பிவிடுவார் என்றும், எம்.ஜி.ஆர் அவர்கள் தலையிட்டு பின்பு தான் சந்திரபாபு ஒழுங்காக நடித்து கொடுத்தார் என்று கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ளார். கடைசியில் கவலை இல்லாத மனிதன் படத்தை தான் எடுத்து உலகத்தில் தன்னை கவலை உள்ள மனிதனாக ஆக்கி விட்டது என்பார் கண்ணதாசன்.
**************
திரையுலகில் யாரும் கட்டாத அளவுக்கு வீடு கட்டினார் சந்திரபாபு மாடி வழியே வீட்டுக்குள்ளையே காரை நிறுத்தும் அளவுக்கு பெரிதாக கட்டினார். பிறகு மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரித்து இயக்க விரும்பினார் இதற்காக எம்.ஜி.ஆர் அவர்களை புக் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆர் சந்திரபாபு படத்துக்கு ஒத்துழைப்பு தராததால் சந்திரபாபு தன் சொத்துக்கள் அத்தனையும் இழந்தார். குடியால் அவருக்கு படங்களும் குறைந்தன கடைசியில் அவர் 1974ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை 
விட்டு பிரிந்தார். சந்திரபாபு மறைந்தாலும் தன் பாடல்களால் அவரின் நடனத்தால் அவரின் காமெடியினால் அவர் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்......... 

9/11/2010

கதை எழுத நினைப்பவர நீங்கள் ? இது உங்களுக்கான பதிவு .....

கதை எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதமாக இனி ஆன்லைன் -ல் கதை எழுதலாம். பல்வேறு
விதமான படங்களையும் சேர்த்து அழகிய புத்தகம் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கதை எழுதவேண்டும் என்ற ஆசை நெடுங்காலமாக இருக்கிறது ஆனால்
அதற்கு நேரம் இல்லை கூடவே கதைக்கு தகுந்த மாதிரி நாம் நினைத்த
படங்கள் கிடைக்கவில்லை என்று நினைக்கும் அனைவருக்கும் எளிதாக
ஆன்லைன் மூலம் கதை எழுதலாம். எழுதிய கதையில் விரும்பிய
படங்களை சேர்த்துக்கொள்ளலாம். எழுதிய கதையை ஆன்லைன் மூலம்
நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://storybird.com

இந்தத் தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச புதிய கணக்கை உருவாக்கி
கொண்டு கதை எழுத தொடங்க வேண்டியது தான்,.விரும்பிய படங்களை
நாம் விரும்பும் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நேரம் கிடைக்கும்
போது நம் கணக்கை திறந்து கொண்டு ஒவ்வொரு பக்கமாக கதையை
எழுதி கொண்டே போகலாம்.இங்கு இருக்கும் படங்களை பார்க்கும்
போது எல்லோருக்கும் கதை எழுதவேண்டும் என்ற ஆசை வரும்.
நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திப்பாருங்கள். இலட்சதிற்கும்
மேற்பட்ட கதைகள் இந்தத் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.சென்னையில்
இருந்து தோழி வாசகி அவர்கள் தான் ஆன்லைன் மூலம் கதை எழுத
இணையதளம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டிருந்தார்
அவர்களுக்காகவும் நம் அனைவருக்காகவும் கதை எழுத ஒரு அழகான
பயனுள்ள தளம்.

9/10/2010

240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்


இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்
குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்
பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்த சிறப்புப் பதிவு.


அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு
நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

படம் 2
இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு
என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்
நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)
கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக
சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும்
முடிவின் வலது பக்கம் இருக்கும் Select என்பதை சொடுக்கி
மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்
தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம்
இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து
தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது

நன்றி : விண்மணி

9/09/2010

கண்ணாலனே .......

சென்ற வாரம் எனதுடன் இருக்கும் நண்பர்களில் ஒருவருக்கு வந்தவுடன் தொடர்ச்சியாக அனைவருகும் வந்துவிட்டது . என்னைத்தவிர அப்போது நான் அங்கு இல்லை .....அதை பற்றிய பதிவு தான் இது ....


மெட்ராஸ் ஐ என எப்படி பெயர் வந்தது? இந்த நோய்கான காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது.

மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் எப்படி வரும்? ஏன் வரும் சொல்ல முடியாது ஆனா வர வேண்டிய நேரத்தில் வரும் . ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ   ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு அடுத்த சில நாட்களிலே அடுத்தவருக்கு பரவி விடுகிறது.


இந்த நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவந்து தடித்து விடும். ஆனால் தற்போது கண் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்கள் சிவப்பது குறைவாக இருந்தாலும் எரிச்சல் அதிகம் இருக்கும். விஜயகாந்திற்கு எப்போதும் கண் சிவப்பா இருகிறதே அப்போ அவருக்கு கண் வலியா என்று கேட்காதீங்க அது எனக்கு தெரியாது

"மெட்ராஸ்- ஐ' ஒருவருக்கு தானாக வர சாத்தியமில்லை. யாராவது ஒரு நபருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பின் அவர்கள் மூலமாகவே பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதாலோ அல்லது கிருமிகள் காற்றில் பரவுவதாலோ இந்நோய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இந்நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, முகம் துடைக்கும் துணிகளை பயன்படுத்தினால் மட்டுமே கிருமிகள் எளிதில் பரவும். கண்நோய் பாதித்தோர் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வீட்டில் இருப்போர், நோய் பாதிக்கப்பட்டவருக்கு கண்ணில் மருந்து ஊற்றியவுடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

இந்நோய் பாதித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பாதிப்பு இருக்கும். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றது தான் 'மெட்ராஸ் - ஐ'; தானாகவே சரியாகி விடும். மருத்துவரிடம் சென்றால் மூன்று நாளில் சரியாகிவிடும் மருத்துவரிடம் செல்லவில்லை என்றாலும் மூன்று நாளில் சரி ஆகிவிடும்,

மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி கை மற்றும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன்...

9/08/2010

நம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை

நீண்ட நாள் ஆய்வுக்கு பின் நம்முடைய ரூபாயின் சின்னத்தை அறிவித்து விட்டார்கள். உலகிலேயே பணத்திற்கு சின்னம் வைத்திருக்கும் ஐந்தாவது பெரிய நாடாக நம் நாடு வந்துவிட்டது. (புதுசா எதாவது சொல்லூப்பா இதெல்லாம் எங்களுக்கு தெரியும்) . சரி அப்படி வெளியிட்ட சின்னத்தை நாம் எப்படி நம்முடைய கம்யுட்டரில் உபயோக படுத்துவது என்று இங்கு காணலாம்.

கீழே கொடுத்துள்ள ரூபாய் சின்னத்தை முதலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
http://www.4shared.com/file/8hRiU_P2/Rupee_Foradian.html
டவுன்லோட் செய்தவுடன் உங்களுக்கு வரும் .ttf பைலை காப்பி செய்து உங்கள் கம்ப்யுட்டரில் C:\Windows\Fonts என்ற இடத்திற்கு சென்று நீங்கள் காப்பி செய்த பைலை பேஸ்ட் செய்து விடுங்கள். இப்பொழுது உங்கள் கம்ப்யுட்டரில் MSword திறந்து கொள்ளுங்கள். Rupee Foradian Font செலக்ட் செய்து கொள்ளுங்கள் .

அடுத்து உங்கள் கீபோர்டில் 1 க்கு இடது புறமிருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு நம் இந்திய ரூபாயின் சின்னம் வரும்.

அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான் போது உங்கள் font மாற்றி நீங்கள் இந்திய ரூபாயின் சின்னத்தை பெறலாம்.

9/06/2010

அவசியமற்ற மொழி கலப்பு தமிழில்

         தமிழில் ஏராளமான வட மொழி சொற்கள் கலந்து மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன.பல நூற்றாண்டு காலமாக தமிழ் மீது வட மொழி திணிப்பு நடந்தேறி வருவதால் தமிழ்ச்சொல் எது வடமொழிச்சொல் எது என பிரித்தறிவதே கடினமான ஒன்றாக உள்ளது.இதனால் சமத்கிருத சொற்களின்றி தமிழால் இயங்க முடியாது என்பது போன்று ஒரு பொய்த்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் உண்மை அதுவன்று.
      சொல்வளமும் இலக்கிய வளமும் மிக்க தமிழால் தனித்து இயங்க முடியும்.'சீரிளமை திறம்'மிகுந்த தமிழுக்கு ஊன்றுகோல் எதுவும் தேவையில்லை. .உண்மையில் தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளின் துணையின்றி சமத்கிருதம்தான் இயங்க முடியாது.ஏனென்றால் அது பேச்சு வழக்கொழிந்து இறந்து பட்ட மொழி.ஆனால் நம் தாய்த்தமிழோ இன்றும் வாழும் மொழி.கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் தமிழ் என்றும் அழியாது.தமிழ்த்தாயின் புதல்வர்கள் அதை அழியவும் விடமாட்டார்கள். வடமொழிச்சொற்கள் தமிழில் இருந்து அப்புறப்படுத்த பட வேண்டும் என்று நாம் கோருவது மொழி வெறியின் பாற்பட்டது என குற்றச்சாட்டு எழலாம்.
       இல்லை,நிச்சயமாக இல்லை.மொழிப்பற்று, இனத்தின் மீது கொண்ட பற்று காரணமாகவே நாம் இவ்வாறு கோருகிறோம்.மொழி என்பது வெறுமனே கருத்துக்களை பரிமாறி கொள்வதற்கான கருவி மட்டுமல்ல.அம்மொழி பேசும் மக்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பெட்டகம் அது.ஒரு இனம் எத்தகைய பண்பாடு,கலாச்சாரத்தை பின்பற்றுகிறது என்பது அவ்வினம் பேசும் மொழியை பொறுத்தே அமைகிறது.ஒரு மொழியின் மீது பிறிதொரு மொழியின் தாக்கம் என்பது தவிர்க்க முடியாத வகையில் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது.அந்த அடிப்படையில் பார்க்கும்போது வடமொழியின் தாக்கம் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு இழைத்திருக்கிறது. ஜோஷ்யம், ஜாதகம்.அதிர்ஷ்டம்,துரதிர்ஷ்டம்,அஷ்டமி, நவமி,வாஸ்து இந்த சொற்களை பாருங்கள் அத்தனையும் வடமொழி.அத்தனையும் மூடநம்பிக்கைகள் எனவே வட மொழி என்பது அழுக்குகளை தமிழ் மீது அள்ளி இறைத்து சென்ற சூறைக்காற்று. இன்று நம் முன் உள்ள பணி அந்த அழுக்குகளை நீக்கி தாய்த்தமிழை தூய்மைப் படுத்துவதே.வட மொழி எதிர்ப்புக்கு தொல்காப்பியர் மறைமலை அடிகள் பேராசிரியர்.ம.நன்னன் என நீண்ட பாரம்பரியம் உண்டு.அந்த வரிசையில் நாமும் இணைவோம் பி.கு.ஜோஷ்யம் வாஸ்து இவையெல்லாம் அறிவியலின் பாற்பட்டது,அவற்றை பின்பற்றலாம் என்றொரு வாதம் எழலாம்.இல்லை,
அவை முற்றிலும் அறிவியலுக்கு முரணானது என்று நிறுவும் வகையில் தனிப்பதிவு ஒன்றை விரைவில் இடவிருக்கிறோம்.நன்றி மீண்டும் சந்திப்போம். .

9/05/2010

மனிதசிலை வடித்த சிற்பிகள்


           ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நாளை, செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
      ஒரு சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை, எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லின் மூலம் நாம் உணரலாம். நமது முன்னோர்கள், ஆசிரியர்களுக்கு என்று சிறப்பானதொரு இடத்தை சமூகத்தில் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் தற்போது ஆசிரியர்கள் அந்த சிறப்பான இடத்திற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆசிரியர்கள் பாடங்கள் மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை, வாழ்கையை நமக்கு வாழ கற்றுக்கொடுத்தார்கள், ஒழுக்கம், அன்பு, நெறி, மற்றும் பல விசயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர். இன்றைய அவசர காலத்தில் இதை சொல்லித்தர அவர்களுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. மேலும் அவர்களுக்கே ஒழுக்கத்தையும் நெறியையும் நாம் கற்றுத்தர வேண்டியிருக்கிறது. நீங்கள் கேட்கக்கூடும் எல்லாத் துறையிலும் தான் இப்படி இருக்கிறது இவர்களை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று, உண்மை தான், ஆனால் ஆசிரியர்கள் ஒரு சமுதாயத்தின் தூண்கள், அவர்கள் நமக்குள் விதைப்பதை தான் நாம் அறுவடை செய்கிறோம்.
        இன்றைய கால கட்டத்தில் மதிப்பெண்களை முன்னிறுத்தியே பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மாணவனுக்கு சுயமாக சிந்திக்க, கற்பனை சக்தியையும், அவனுடைய சிந்தனை  சக்தியை தூண்டவும் இன்றைய பாடத்திட்டங்களோ, ஆசிரியர்களோ உதவியாக இல்லை என்றே சொல்லவேண்டும். நிறைய பேர் சொல்லக் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆங்கிலேயர்கள் நமக்கு குமாஸ்தா வேலை செய்ய ஏற்ப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை, நாம் இன்னும் பின்பற்றிகொண்டிருக்கிறோம் என்று, உண்மை தான் இன்றைய நிலையில் ஆராய்ச்சிப் படிப்புகளில் யாரும் அக்கறைக் காட்டாமல் இருப்பதே இதற்கு சான்று. மந்தையில் ஒரு ஆடு போகும் போது பின்பற்றி செல்லும் ஆடுகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். பணம் மட்டுமே வாழ்கையின் குறிக்கோளாகிப் போன இந்த காலத்தில் பெற்றோர்களும் இதற்கு உடந்தை. எப்போதும் படிப்பு படிப்பு, நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும், உயர் படிப்பை முடித்து அமெரிக்காவிற்கு போக வேண்டும் இதான் இன்றைய பெற்றோர்களின் மற்றும் மாணவர்களின் குறிக்கோள்.
        ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவே ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தார்கள், தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், மொழி ஒரு சமூகத்தின் அடையாளம் என்பதையும், அந்த அடையாளத்தை நாம் அடைய பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ், தமிழில் பள்ளிகளில் பேசினால் குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு நம் மொழியினை பேசுவதையே சிறுமை என மறைமுகமாக போதிக்கின்றனர்.
         என் ஆசிரியர்கள் பற்றிய பசுமையான நினைவுகள் எனக்கு நிறைய இருக்கின்றன, என்னுடைய பள்ளி ஆசிரியர்  செந்தில் , அவர்கள் எங்கள் குடும்ப உறவாகவே மதிக்கப்படும் ஒரு நபர். எங்கள் வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள். நான் மதிக்கும் மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர். எனது தமிழாசிரியர்கள் எல்லோருமே அருமையான வழிகாட்டிகள், கணக்கு பாடம் எடுத்த கதிர்  ஆசிரயரை மறக்கவே முடியாது ஒரு விரிவுரையாளர் கூட அவ்வளவு நுட்பமாக பாடம் எடுக்க முடியாது, அற்புதமான மனிதர், நண்பர்களை போல நடத்துவார்கள்.
            மாதா, பிதா, குரு அப்புறம் தான் தெய்வம், அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பளிக்கும் ஆசிரியர் தினத்தின் மேன்மையை நம் இளைய சமுதாயதிற்கு  எடுத்து கூறுவோம். வருங்கால சமுதாயத்தை ஆசிரியர்கள் நன்முறையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த இடுகையின் மூலம் ஆசிரிய பெருந்தகைகளுக்கு என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



9/04/2010

கோடிக்கு மேல் என்ன...? தமிழில் உங்களுக்கு தெரியுமா?


எனக்கு தமிழில் இதுவரையில் கோடி வரைக்கும்தான் தெரியும்.
கோடிக்கு மேல் வருவதை தமிழில் எவ்வாறு
கணக்கிட்டு கூறுவது என்பது எனக்கு தெரியாது.

நண்பர் ஒருவர்   எனக்கு அனுப்பிய மெயிலை, உங்களுக்கு ஏற்றவாறு தந்துள்ளேன் .
இதை பார்த்தபின் தமிழில் இல்லாத வார்த்தைகளே இல்லை எனலாம்
மேலும் தமிழே உலகின் முதன் மொழி எனவும் சொல்லலாம் .


.
படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும்

9/03/2010

அறிவியலில் என் தமிழ்

         அறிவியல் அறிஞர்கள் என்று கூறியவுடனேயே நம் கண் முன் வந்து நிற்போர் நியூட்டனும் , ஐன்ஸ்டீனுமே . ஆனால் நம் தமிழ் நாட்டின் தமிழறிவியல் அறிஞர்பலர் உலகமக்களாலறியப் படவில்லை.

ஏன்? நம்மில் பலருக்குக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே!

கபிலனின் தொலைநோக்கி கலிலியோவின் தொலைநோக்கி,
சாத்தனாரின் விளைவு சி.வி.இராமனின் விளைவு,
அருகர்தம் அணுக் கண்டுபிடிப்பு தால்தனின் அணுக் கண்டுபிடிப்பு,
ஔவையின் அணுமாதிரி அறிவியல் அறிஞர்தம் அணுமாதிரி,
வள்ளுவரின் மருத்துவவியல் இக்கால மருத்துவவியல் போன்ற பலவற்றை இங்கு எடுத்துக் கூறலாம்.
இவை அனைத்தையும் மட்டுமன்றி, இன்னும் இருப்பன எல்லாவற்றையும் வள்ளுவரால் கூற முடியும். ஆனால்
நம் தமிழ் அறிவியல் அறிஞர்தம் தனித்தனி ஈடுபாடுகள் கருதி அவை இங்கு தனித்தனியே கூறப்படுகின்றன.


என் அறிவுக்கு எட்டிய ஒரு சில...
"அணுவைக் கண்டுபிடித்தது யார்?" என்ற வினாவிற்கு 'இக்கால' பள்ளி மாணவனும், மெத்தப் படித்த மேதாவியும் தால்தன் (Dalton) என்றே கூறுவர். தால்தன் எனும் ஆசிரியர் தான் முதன்முதலில் அணுவைப் பற்றிய கருதுகோளைக் கூறியவர் என்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. 1803 ஆம் ஆண்டு அதாவது 18 ஆம் நூற்றாண்டில் அவர் கூறியது யாதெனில்,
"அனைத்துப் பொருட்களும் அணுக்கள் எனப்படும் மிகநுண்ணிய துகள்களால் ஆனவை; மேலும் அவை பிளவுறத்தக்கதல்ல!" என்பதேயாகும். ஆனால்,


"மொழிமுதல் காரணம் ஆம்அணுத் திரள் ஒலி எழுத்து அது முதல்சார் பெனஇருவகைத்தே"  (நன்னூல்-எழுத்து-58)
இதனைக் கூறியவர் பவணந்தி முனிவர் ஆவார்.
அதன் பொருள் யாதெனில் "மொழிக்கு அணுக்களின் கூட்டம் என்பதே முழுமுதற்காரணம்; அம்மொழியும் ஒலிவடிவம், வரிவடிவம் என இருவகைப்படும். எழுத்து மேலும் முதல், சார்பு எனவும் வகுக்கப்படும்." இவ்வாறு கூறிய வகையில் அவர் தான்தான் இதனைக் கூறியவன் எனப் பதியவில்லை! மற்றும்  "அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆக்கப்பட்டது என்று அருகர் கூறுவர்" அவ்வகையிலேதான் "மொழியும் அணுக்களால் ஆனது!" என்று அவர் கூறுகிறார். இதனை அவர் கூறியது பன்னிரெண்டாம் நூற்றாண்டில்.
இதுவே "பிறிதொரு படாஅன் தன்மதம் கொளல்" அதாவது 'பிறரது கொள்கையையே தானும் ஏற்றல்' என்று பொருளாம். ஆனால் இன்றைக்கு, பிறரது கண்டுபிடிப்புகளை தனது என்று திருடிக்கூறும் கயமைத்தனம் மேலோங்கிவிட்டது.அது சரி, பவணந்தியின் பங்கை அணுக் கொள்கையில் கூறியாகிவிட்டது. இதில் ஔவையாருக்கு என்னப் பங்கு என்றுதானே எண்ணுகிறீர்கள்? அணுவைப் பிளக்க முடியும் என்று அண்மையில் தான் கண்டுபிடித்தனர். ஆனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திட்ட ஔவையார் திருவள்ளுவரைப் புகழ்கையில் பின்வருமாறு கூறுகிறார்.


"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்."
(திருவள்ளுவமாலை) -சான்று


இது யாருக்கும் தோன்றிடாத ஒரு சிந்தனை! அணுவைப் பற்றி அறிந்திராத காலகட்டத்தில், அதனை உணர்ந்து, எண்ணத்தால் ஆய்ந்து, அதைப் பிளக்க முடியும் என்ற முடிவுக்கு வந்ததோடு அந்தச் சீமாட்டி விடவில்லை, அதனுள் ஏழு கடல்களைப் புகட்டி (?) அதனைத் திருக்குறளுக்கு ஒப்புமைப்படுத்தியுமுள்ளார் அவர். என்னே ஒரு அறிவியல் சிந்தனை!


{உங்கள் வாசிப்புக்கு முட்டுக்கட்டை போட்டதற்கு வருந்துகிறேன். இந்தத் தலைப்பில் பதிவுகள் தொடர்ந்து இடப்படும்! }


இப்பதிவு பலரைச் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே அளிக்கவும்!