தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/31/2012



























முன்னேற்றங்களும் பின்னேற்றங்களும்


வாழ்வின் அடிப்படை தத்துவம்;


நாம் கடந்து வந்த

வாழ்க்கை புத்தகத்தில்,

வருடங்கள் மாதங்கள்

வாரங்கள் நாட்கள்

நிமிடங்கள் நொடிகளென

அனைத்து பக்கங்களை

புரட்டிப் பார்த்தால்,

நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்

புத்தாண்டு என்பது

வருங்கால தேதிகளை மாற்றிவிடும்

ஒரு நாள்தான் என்று ;

கடந்து வந்த பாதைகள்

கடக்கவிருக்கும் பாதைகளில்

நமக்கு சந்திக்க போகும்

அனுபவங்கள் யாருக்கும் தெரியாது;

திசை திரும்பிவிட்ட

படகுமேலேரி பயணிக்கும் நம்மை

இந்த புத்தாண்டு

நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;


மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்

நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி

நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்

என்றும் நிலைத்துவிட

இறைவனிடம் பிரார்த்தித்து

என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்

12/30/2012

எனது பார்வையில் 2012

இந்த வருஷம் எப்படி ஓடியது என்று தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால்

மிகவும் மோசம்

ஒன்றே ஒன்று புதிதுபுதிதாகப் புத்தகங்கள் தேடித் தேடி படித்தேன். படிக்கிறேன்.

கம்பராமாயணத்தில் விசேஷ ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொஞ்சமாக நினைவுக் குதிரையை ஓட விட்டுப் பார்த்தும் இணையத்தைக் கொஞ்சம்

துழாவியும் பத்திரிகைத் துறை நண்பரொருவர் கொடுத்த நிகழ்வுப்பட்டியலையும்

தோராயமாக பார்த்துத் தயாரித்த -2012.

1. என் அண்ணன் வயதையொத்த அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் முதல்வராயிருக்கிறார்.

2. மட்டையினால் நாட்டுக்கு விளையாட்டுத் தொண்டாற்றிய சச்சின் டெண்டுல்கர் தேசத்துக்குச் சேவைபுரிய ராஜ்ஜிய சபா எம்பியாக்கப்பட்டார்.

3. நிதித்துறை மந்திரி பதவியிலிருந்து தப்பித்து பிரனாப் முகர்ஜி இந்தியாவின் பதினான்காவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆபத்தில்லாத ஃபாரின் டூர் பதவி என்று ப்ரதீபா ’பாட்டி’லால் அடையாளம் கொடுக்கப்பட்ட பொறுப்பான பதவி.

4.மீடியம் பட்ஜெட் சிறு கார் ஓட்டும் முதலாளிகளையும் நசுக்கும் முயற்சியாக டீசலை ஐந்து ரூபாய் வரை ஏற்றினார்கள். ஆறு சிலிண்டர்கள்தான் வருடத்திற்கு என்று கட்டை போட்டார்கள். ஒருவாரத்திற்கு டீசல் கிடைக்காமல் அனைவரையும் வீதிகளில் பேயாய் அலையவிட்டார்கள்.

5. தீபா கங்குலி சீதா பிராட்டியாராக நடித்த ராமாயணத்தில் சிரஞ்சீவி ஹனுமானாக நடித்த தாரா சிங் தனது 83 வயதில் உயிர் நீத்தார். அறுபது எழுபதுகளில் கன்னியரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராஜேஷ் கன்னாவும் இறந்தார்.

6. மனித இனத்தின் ஜெயண்ட் லீப்பாக சந்திரனில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பை பாஸ் சர்ஜரியில் ஏற்பட்ட குளறுபடிகளால் இறந்தார்.

7. சிதாரினால் பல உள்ளங்களில் ஜிப்ஸி கிதார் மீட்டிய பண்டிட் ரவி ஷங்கர் 92வது வயதில் மேலுலகம் சென்றார்.


8.ரொம்பவும் அபர செய்திகளாகப் பார்த்தாயிற்று, சுப செய்தியென்றால் நமக்கெல்லாம் அரட்டையடிப்பதற்கும் அவ்வப்போது சில சத்விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கும் உறவுப் பாலம் அமைத்துக் கொடுத்த மார்க் ஸூகெர்பெர்க் தனது நீண்ட நாள் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.


9.பிரேஸில் நாட்டு இருபதுவயது பெண்ணொருத்தி $780,000 டாலருக்கு தனது கற்பை விற்று கலிகாலப் புரட்சி செய்தார்.

10. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆஞ்சநேயர் விக்கிரஹம் வைத்துக்கொள்ளாமல் பராக் ஒபாமா இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்க ராஜ்ஜியத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றார்.

11.ரிக்கி பாண்டிங்கும் சச்சினும் திராவிடும் ”ஆடியது போதும்” என்று இளைஞர்களுக்கு ஒதுங்கி நின்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.

12.யுவராஜ் சிங் அரிதினும் அரிதான ஜெர்ம் செல் கேன்சரை ஜெயித்து மீண்டும் விளையாட ஆரம்பித்துவிட்டார்.

13.பெட்டிங் கள்ளப் பணம் என்று ஆயிரமாயிரம் நொட்டைகள் இருந்தாலும் ஐபிஎல் ஜமாய்க்கிறது. ஷாரூக்கானின் கொக்கத்தா நைட் ரைடர்கள் 2012ம் வருடத்திய பட்டத்தை வென்றது
14. காவல் கோட்டத்திற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருதும், ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் உயரிய நட்புறவு விருதும், அசோகமித்திரனுக்கு என்.டி.ஆர் விருதும் கிடைத்தது தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட சுப நிகழ்வுகள்.

15. ஒரு பதினைந்து வயது பையனை “ஒழுங்கா படியேம்ப்பா” என்று சொன்ன குற்றத்திற்காக உமா மஹேஸ்வரி என்கிற ஆசிரியை சென்னை பாரீஸில் கல்விக் கூடத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். வன்முறை வரவேற்பறைக்கு வந்ததன் விளைவு.

16. ஒன்பது வருடங்களுப்பிறகு மின் கட்டணத்தை 37% உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை உயிரோடு கொளுத்தியது. ”கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று வரலாறு காணாத மின்வெட்டையும் அறிமுகப்படுத்தி ஏற்றிய கட்டணத்தை ஓரளவிற்கு சமன் செய்தது. மின்சாரமின்மையால் தனது சொந்த தொழிலையே மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான ஒரு அபாக்கியசாலியை பேட்டி எடுத்துப் போட்டிருந்தது தினகரன்.

17.அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாத ஹேமமாலினிக்கு சர்வதேச பெரும்புள்ளி அவார்ட் லண்டனில் வழங்கப்பட்டது. இன்னும் பத்து வருடம் கழித்தும் இது போன்ற அவார்ட் வாங்குமளவிற்கு ஹேமமாலினி திகழ்வார் என்று பரவலாக நம்பப்படுகிறது.


18. மாருதி ஸுஸுகி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் மனித வளத் துறை மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். வேலை வாங்கும் தகுதியில் இருப்பவர்களுக்கும் வேலை செய்வதாக பாவ்லா காட்டுபவர்களுக்குமிடையே நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டம் கொலை என்பது துர்பாக்கியமே. நியாயமான கோரிக்கையுள்ளவர்கள் தர்மமான முறையில் போராடுவார்கள்.


19.ஹிக்ஸ் போஸன் என்கிற கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளையே கண்ட மாதிரி அறிவியல் உலகம் கொண்டாடியது.

20. ஆகாஷ் எனும் டேப்லெட்டின் அட்வான்ஸ்டு வெர்ஷனை இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி நாட்டுக்கு அர்பணித்து புண்ணியம் கட்டிக்கொண்டார். முதல் லட்சம் டேப்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழங்களில் படிப்பவர்களுக்கு மட்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். பார்ப்போம் உரியவர்களை சென்றடைகிறதா என்று.

21.திடீரென்று ஒருநாள் நித்யானந்தா மதுரை ஆதினமாக அதிரடியாகப் பதவியேற்றுக்கொண்டார். இருவரும் சிரித்துக்கொண்டே பேட்டியளித்தார்கள். பலர் செல்லாது என்று போராடினார்கள். முடிவில் மதுரை ஆதினமே நித்தியை ஆதினப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

22. இரண்டாம் வகுப்புப் படித்துவந்த ஸ்ருதி என்கிற பள்ளி மாணவி பஸ்ஸிற்குள் இருந்த ஓட்டையில் விழுந்து நசுங்கிச் செத்ததும், மாணவனொருவன் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது விழுந்து உயிரிழந்ததும் நிர்வாகத்தினரின் அலட்சிய மனோபாவத்தினை வெளிப்படுத்தியது.

23. கூடங்குளம் அணு மின்சாரத்தை எதிர்த்து இடிந்தகரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அணு உலை ஆபத்தானதல்ல என்று கூறி போராடியவர்களிடம் அவப்பெயர் சம்பாதித்துக்கொண்டார் அப்துல்கலாம்.

24.ஆங்காங்கே இயற்கைச் சீற்றங்கள் பெருமளவில் இருந்தது. சுமத்ராவில் பூமித்தகடுகள் இன்னமும் சீட் ஆகாமல் நடனமாடிக்கொண்டிருக்கிறது.


25. மாயன் இனத்தவர்கள் காலண்டர் வரைய கல்லில் இடமில்லாமல் போனதால் நிறைய பேர் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று ஜல்லியடித்தார்கள். தன்னிடமிருந்த ஒரு லட்ச ரூபாயை ரோடில் சென்றவருக்குக் கொடுத்த ஒரு அநாமதேய அப்பாவியைப் பற்றிய செய்தி வந்தது. வாங்கியவர் திரும்பக் கொடுப்பாரா?

26.ஊழலுக்கெதிராக என்று சொல்லிக்கொண்டு ஆம் ஆத்மி என்கிற அகில இந்திய கட்சியை அண்ணா ஹசாரேவின் டீம் ஆளாக அறியப்பட்ட அர்விந்த கெஜ்ரிவால் தொடங்கினார். ஆம்! கட்சிப் பெயரிலேயே சர்ச்சை ஏற்பட்டது.

27.தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கொல்வதும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் தொடர்கிறது.

28. வழக்கம் போல இந்த வருடமும் தமிழில் நிறைய யதார்த்த திரைப்படங்களை எடுத்தார்கள். சாட்டை, வழக்கு எண் போன்ற படங்கள் வெற்றியடைந்தன.

29.தில்லியில் ஒரு மாணவியை பாலியல் வன்கலவியினால் சிதைத்தார்கள். உடனே பூதாகாரமாக நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் ரேப்புகள் ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. நடைபெற்ற இதுபோன்ற துக்கச்சம்பத்தினால் கொதித்தெழுந்த பொதுமக்கள் கருட புராணத்தை திருத்தியமைக்குமளவிற்கு அக்குற்றத்திற்கான தண்டனைகளை தங்களது கணினியின் கீபோர்ட் மூலமாக வழங்கினார்கள்.

30. தூக்கு போடும் வரை வெளியே மூச்சுக் காட்டாமல் கப்சிப்பென கஸாப் தூக்கிலடப்பட்டார். அவரது மரணதண்டனையைவிட அரசாங்கத்திற்கு அவரால் ஏற்பட்ட செலவினங்கள் அதிகமாகப் பேசப்பட்டது.

31. விலாடிமிர் புடின் மூன்றாவது முறையாக ரஷிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

32. இளையராஜா இன்னமும் ஜோராக இசையமைக்கிறார்.

33.மற்றபடி எல்லாவருடமும் நடக்கும் அநியாயங்கள் அவலங்கள் அலட்சியங்கள் அவமானங்கள் அதிகார அடக்குமுறைகள் தாராளமாகவும் லோக க்ஷேமத்திற்கான காரியங்கள் விரல் விட்டு எண்ணும்படியாகவும் இந்த 2012லும் நடந்தது.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2013ல் பரவலாக நல்ல காரியங்கள் உலகெங்கும் நடந்து எங்கும் சுபச்செய்திகள் பரவ வாழ்த்துகள்.

12/25/2012

உன்னை காதலிக்கிறேன் என்று!


நேற்றைய கனவும்


உன்னால்தான் நிரம்பி வழிந்தது,

வழக்கம் போல நெருக்கமாய்

தூரத்தில்தான் அமர்ந்திருந்தாய்,

வழக்கம் போல காதலை

மெளனத்திற்கு இரையாக

இருவருமே போட்டுக் கொண்டிருந்தோம்!


ஏதேனும் செய்திகளை

உன் விழிகள் எனக்குப் பகிருமா?

என்று உற்று நோக்கினேன்

அது காதலைத் தவிர

வேறொன்றும் பகிரேன் என்று

பிடிவாதம் பிடித்தது...!


என் மெளனத்துக்கு காரணத்தை

நீயும் மெளனத்தால் தேடியது

போலவே நானும் தேடியதில்

குடி கொண்டிருந்த நிசப்தத்தில்

பரவிக் கிடந்த அதிர்வுகளோடு

சப்தங்களை அதிகமாக்கிக்

கொண்டிருந்த நமது இதய துடிப்பும்

அன்னிய தேசத்து எல்லையை

கடந்து செல்லும் அவஸ்தையோடு

தொண்டையை கடக்கும்

அவ்வப்போது நாம் விழுங்கும் உமிழ்நீரும்

சேர்ந்தேதான் காதலை கனப்படுத்தின...!


நான் உன்னை காதலிக்கிறேன்

என்று சொல்லப்போவதில்லை

என்பதைப் போல...

நீயும் சொல்லப்போவது இல்லை

என்பதை உரக்க கட்டியம்

கூறிக் கொண்டிருந்த

மெளனத்தை உடைக்கும் முயற்சியில்

முதலில் எட்டிப் பார்த்த

உனது உதட்டோரப் புன்னகையில்

நான் உடைந்தேதான் போனேன்..!

ஏதாவது சொல் என்றேன்...

போகவா என்றாய்....!

கலைந்து போன கனவில்

நிஜத்தை தொலைத்த வெறுமையோடு

விடியப்போகும் பொய்மையில்

உன்னை சந்திக்கையில்....

இப்போதாவது உன் காதலைச் சொல்லேன்

என்று என் மெளனத்தால்

உன் மெளனம் மோதி

ஒரு கேள்வி கேட்கிறேன்...

நிஜத்தில் நீ மெளனித்தாலும்

பரவாயில்லை,

அடுத்த கனவிலாவது சொல்

நான் உன்னை காதலிக்கிறேன் என்று!

12/20/2012

கும்கி



விமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையை பொதுப்பார்வையாக்க முயலும் ஒரு யுத்தி என்பதோடு மட்டுமில்லாமல் சினிமாவை தங்களின் உச்ச கட்ட தொழில்நுட்ப அறிவினை எல்லாம் பயன்படுத்தி பார்க்கும் களமாகவும் ஒரு சிலர் இங்கே நினைக்கிறார்கள்.


மேதாவிகள் உலகம் எப்போதும் உலக தரத்தில் இருக்கும் எல்லா விசயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறது. துரத்தும் வாழ்க்கையின் ஏதோ ஒரு ஓய்வு தருணத்தில் சினிமாவை பார்க்கச் செல்லும் என்னைப் போன்ற சாமானியர்கள் சினிமாவை சினிமாவாக வாய் பிளந்து பார்த்து விட்டு அதை எடுக்க பிரயாசைப் பட்டிருக்கும் அந்த படக்குழுவினரின் உழைப்பை கண்டு வியக்கவும் செய்கிறோம். மிக மோசமாய் அரைத்த மாவையே அரைத்து பார்வையாளனை ஏமாற்றும் ஒரு சில படங்களைக் கண்டு நாம் அதிருப்தியுற்றாலும், தமிழ் சினிமாவில் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் பேசும் படங்களை சினிமாவோடு ஒன்றிப்போய் ரசிக்கும் நாங்கள்..., எங்களின் சூப்பர் ஹீரோக்கள் நிகழ்த்தும் அதிரடி சாகசஙகளையும் கை தட்டி விசிலடித்து ரசிப்பதிலும் யாதொரு குறையும் வைப்பதில்லை.

கொம்பன் என்னும் காட்டு யானை ஆதிக்காடு என்னும் ஊரில் இருக்கும் விளை நிலங்களில் அறுவடை செய்வதற்கு முன்பாக வந்து அட்டூழியம் செய்கிறது. மனிதர்களைக் கொன்று விடுகிறது. இந்தக் கொம்பனை விரட்ட காட்டு இலாகா துறை எந்த ஒரு உதவியும் செய்யாமல், தலைமுறை தலைமுறையாய் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் வாழும் பழங்குடியினரை அந்த இடத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்ய, அதை நிராகரித்து விட்டு.. காட்டு யானை கொம்பனை விரட்ட ஒரு கும்கி யானை கொண்டு வர தீர்மானிக்கிறது அந்த ஆதிக்காடு என்னும் கிராமம்.

கும்கி யானைக்கு பதிலாக பொம்மனின் கோயில் யானை ஊருக்குள் சூழ்நிலையால் வந்து விட, பொம்மனுக்கும் ஊர் தலைவரின் மகளான அல்லிக்கும் மலரும் அழகான காதலைத்தான்... இயக்குனர் பிரபு சாலமன் கதையின் கருவாக்கி இருக்கிறார். கதைக்கான களம் அட்டகாசமானது, சமீபத்திய தமிழ் சினிமாவுக்கு மிக, மிக புதியது.

மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும் முட்டையிலிருந்து வெளியே வரும் மீன் குஞ்சு முதன் முதலாய் நீரில் அடித்து நீந்தி அங்கும் அங்கும் அனுபவமின்றி அலை பாய்கையில் என்ன ஒரு பதட்டம் இருக்குமோ, அதே பதட்டத்தை விக்ரம் பிரபு கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது, மற்றபடி... சரியான பாதையில் அவர் பயணிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும் என்பதில் யாதொரு மாற்றமும் இல்லை.

காதலை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளை அந்த திரைப்படத்தை பார்க்கும் அத்தனை பேரும் மானசீகமாக காதலிக்க வேண்டும் என்ற ஒரு நியதியை ஏற்படுத்துவது வெற்றிக்கரமான ஒரு இயக்குனரின் வேலை. இந்த வேலையை கனகச்சிதமாக நிறைவேற்றி இருக்கும் பிரபு சாலமன் சாருக்கு ஒரு " ஓ.. "போட்டே ஆகவேண்டும். கதாநாயகி லட்சுமி மேனனை வைத்துக் கொண்டு படத்தில் அவர் நடத்தி இருப்பது சர்வ நிச்சமயாய் ஒர் அல்லி தர்பார்தான்...!

ஆதிவாசிப் பெண்ணாய் வந்து அதுவும் முதல் படத்திலேயே (சுந்தர பாண்டியன் முன்னாடியே ரிலீஸ் ஆனது வேற விசயம்....) க்ளோசப் ஷாட்களில் எல்லாம் எல்லா விதமான முகபாவங்களையும் நேர்த்தியாய் கொண்டு வரும் லட்சுமி மேனன் அட்டகாசமான தேர்வு..! காதலுக்காய் கோயில் யானையை கும்பி யானையாக்க பொம்மன் பிராயசைப்படும் இடங்களில்....நமக்கே சீட்டில் இருந்து எழுந்து...." பார்கே.....பார்கே...மாணிக்கம் முன்னால போ..." என்று கத்தவேண்டும் என்று தோன்றுகிறது..! காட்டு யானை கொம்பனை கோயில் யானை மாணிக்கம் எப்படி விரட்டப் போகிறது....என்ற ஒரு டென்சனை நமக்குள் ஏற்படுத்தி விட்டு.. கூலாக காடு, மலை, அருவி, சுனை, விளை நிலங்கள் என்று பச்சை பசேலென்று திரைப்படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது... !

தம்பி ராமையா இந்தப்படத்தில் நகைச்சுவையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் (நல்ல கவனிங்க...பிரிச்சு மேஞ்சுருக்காரு...). ஆங்காங்கே விமர்சனம் எழுதிய சிலர் தம்பி ராமையாவை ஓவர் டோஸ் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள்...! அது எந்தமாதிரியான பார்வை என்று தெரியவில்லை...ஆனால்... கதையோடு பொருந்தி வரும் அவரின் பாத்திரமும் அவரின் நகைச்சுவைகளும் மிகப்பிரமாதம்...! இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் அவர் பேசாமல் சூழலை மையப்படுத்தியே பேசி நம்மை சிரிக்க வைப்பது அழகு.....

மாணிக்கத்திற்கு மதம் பிடித்து விடும் இடத்தில், யாருமே எதிர்பாராமல் கொம்பன் என்ட்ரி...ஆவது கிளாஸ்....!!! கொம்பன், தனது பாகனான பொம்மனை (விக்ரம் பிரபு) அடிப்பதை பொறுக்க முடியாத மாணிக்கம் சீறிப்பாய்ந்து கொம்பனை தாக்க....

இரண்டு யானைகளுக்கும் இடையே நடக்கும் சண்டையே படத்தின் க்ளைமாக்ஸாகிப் போகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று நிறைய தொழில் நுட்ப புலிகள் கடுமையாய் இயக்குனரை விமர்சித்திருக்கிறார்கள்...

இயன்ற வரையில் கிராபிக்ஸ் காட்சியில் யானைகளின் சண்டையை இயக்குனர் காட்ட முயன்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். ஒரு திரைப்படம் பார்க்கும் போது முழுக்க முழுக்க படக்குழுவினரடமே எல்லாவற்றையும் எதிர்பார்க்காமல் கொஞ்சம் நமது கற்பனைக்கும் இடம் கொடுத்து காட்சிகளை விவரித்துப் பார்க்க வேண்டும்....! நான் சொல்வது கொஞ்சம் முரணாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம்...!

திரையில் ஒரு கதை, களம், காட்சிகள், கதாநாயகி, கதாநாயகன் என்று காட்சிப்படுத்துவது இயக்குனரின் வேலையாகிறது என்றாலும் கும்கி மாதிரி திரைப்படங்களைப் பற்றி தனியே அமர்ந்து யோசித்து, கற்பனையில் ஊறி, ரசிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது. தகப்பனின் நம்பிக்கையை உடைக்க விரும்பாத அல்லியும், மதம் பிடித்தது உனக்கு இல்லை மாணிக்கம், எனக்குதான் என்று தனது மாமாவையும், நண்பனையும், மாணிக்கம் என்ற யானையையும் கடைசியில் இழந்து புலம்பும் இடத்தில் விக்ரம் பிரபு....நடிப்பில் பவுண்டரி அடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் அவருக்கு பின்புலத்தில் அவரது குடும்பமே இருந்திருக்கிறது என்பது கதை தேர்வில் மட்டுமில்லாமல், இசையிலும், பாடல்களிலும் தெளிவாகவே தெரிகிறது.

பாடல்களில் இமான்...பட்டையை கிளப்பி இருக்கிறார் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. அல்போன்ஸ் குரலில் நீ எப்போ புள்ள சொல்லப் போற...என்று காதலியின் பின்னாலேயே காதலைச் சொல்ல ஏங்கித் திரியும் யுகபாரதியின் (யுகபாரதிதானே...?!) வரிகளுக்கு இமான் போட்டிருக்கும் ட்யூன் படம் பார்த்து முடிந்த பின்பும் மனதுக்குள் அழுது கொண்டேதான் இருக்கிறது.

இயக்குனருக்குள் பெரும் சோகம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கைப் பற்றிய நிலையாமையை அவர் தெளிவாய் விளங்கி இருக்க வேண்டும். முந்தைய படமான மைனாவிலும் ஒரு மாதிரியான சூழலில் தான் படத்தை முடித்திருப்பார். கும்கியிலும் கூட.. இந்தப் பக்கம் மாணிக்கம் யானை, கும்கி யானையை கொன்று விட்டு தனது எஜமானரைக் காப்பற்றிய திருப்தியில் இறந்து கிடக்க, தம்பி ராமையாவும், விக்ரம் பிரபுவின் நண்பராய் நடித்து இருப்பவரும் இறந்து கிடக்க...

தனது மகளின் காதலை புரிந்து கொண்டாலும் தனது பாரம்பரியம் கெட்டுப் போய்விடுமே என்பதால் இறுக்கமாய் உள்ளுக்குள் அழும் ஊர்த்தலைவரும், அப்பாவின் பேச்சையும் நம்பிக்கையையும் மீற முடியாமல் காதலை உள்ளுக்குள் தேக்கிக் கொண்டு கதறும் லட்சுமி மேனன் ஒரு புறமும்...

தன் மீது ஊர் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்து விடக்கூடது என்ற உணர்வில் தான் இழந்து போன உறவுகளுக்காக அழுது கொண்டு...விக்ரம் பிரபு அந்த கிராமத்தை விட்டும் நடக்க...

எ...பிலிம் பை பிரபு சாலமன் என்று படம் முடிந்து விடுகிறது. கதாநாயகியும் கதாநாயகனும் சேர்ந்திருக்க கூடாதா என்ற ஒரு ஏக்கத்தை நமக்கு கொடுக்க வேண்டும் என்ற டைரக்டரின் எண்ணம் இங்கே மெளனமாய் வெற்றி பெறுகிறது.

தமிழ் சினிமா இயக்குனர்களை வழக்கமான கதைகளை விட்டு நகர்ந்து வெவ்வேறு களம் நோக்கி சிறகடிக்க வைக்க கும்கி போன்ற திரைப்படங்கள் உதவக்கூடும்....!

நன்றி : நண்பரே

12/13/2012

அவள் என்னை காதலிக்கிறாளா..?

அந்த கவிதையின் இறுதியில்


சூசகமாய் காதலைச் சொல்லியிருந்த

வரிகளை அவள் வாசித்துவிட்டு

என்னை காதலிக்கத் துவங்கியிருக்கலாம்;

வெறுக்கத் துவங்கியிருக்கலாம்

மெளனமாக இருக்கலாம்,

கோபமாக இருக்கலாம்,

சிரித்திருக்கலாம்;

புரியாமலேயே விழித்திருக்கலாம்;

எதிர்பார்த்திராமல் அழுதிருக்கலாம்;

மீண்டும் வேறு கவிதைக்காக காத்திருக்கலாம்;

அல்லது....

அந்த வரிகளை சாதாரணமாக

கடந்தும் போயிருக்கலாம்...;

ஆனால்...

நான் அவளுக்காக இன்னொரு

கவிதையை எழுதி விட்டு

மீண்டும் இறுதி வரியில்

அவள் என்னை காதலிக்கிறாளா..?

என்று அறிய முயலும்...

அர்த்தத்தோடு முடிக்க

முயன்று கொண்டிருக்கிறேன்...!

11/30/2012

எது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....!ஜெயிப்பேன்....!

நீ என்னவாக விரும்புகிறாய்...?  ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?


இப்போது இருவருமே திரு திருவென்று முழித்தோம்.....

தொழிலதிபர் ஆக விரும்பியவரிடம் அதற்கான திட்டமிடல் இல்லை....என்னிடமோ குறிக்கோளே இல்லை...? இருவருமே எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள்....? மெளனமாய் நின்றிருந்தோம்.......

 குறிக்கோள் இல்லாமல் எங்கே பயணிக்கிறீர்கள்? புரிதலோடு வாழ்க்கையின் நிலையாமையை விளங்கிக் கொண்டிருக்கும் நாம் வாழும் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்......அதில் மாற்றமில்லை. இடைப்பட்ட இந்த நேரத்தில் எங்கு பயணிக்கிறோம்...என்று தெரியாமலேயே செல்வதை விட.... இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல் திட்டத்தை அன்றாடத்தில் எப்படி கடைபிடிக்கிறோம் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டாமா? முகத்தில் அறைந்தார்

புகழ் என்ற ஒன்றிலும் புகழ்ச்சி என்ற ஒன்றிலும் மட்டுப்பட்டு நின்றவர்கள் வாழ்வில் படுகேவலமாக தோற்று இருக்கிறார்கள். மேலும் ஒரு திறமைசாலியை 100பேர் கேவலப்படுத்தினாலும் திறமைசாலியின் திறமைகள் வெளிப்பட்டே தீரும். இந்த இடத்தில்தான் ஒரு விசயம் கவனமாக அறியப்படவேண்டும் செல்ப் எஸ்டீம் என்ற தன்னைப்பற்றிய சுய மதிப்பீடு சரியாக இருக்கிறதா என்பது உணரப்படவேண்டும். இதை சரியா புரிஞ்சுக்க தெரியலேன்னா.. ஓவர் கான்பிடென்ட் என்ற கிணத்துக்குள்ள போய் விழ வேண்டியதுதான்.

தெளிவான குறிக்கோள்கள் மேலும் அதற்கான திட்டமிடல்கள் அது நோக்கிய அன்றைய நகர்வு அதாவது.. எனது குறிக்கோளுக்காக ஒவ்வொரு தினமும் நான் என்ன செய்கிறேன்? என்பதும் முக்கியமாகிப் போகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தடைகள் ஓராயிரம் இருக்கத்தான் செய்கின்றன....

அந்த தடைகளும் சதையினை தாண்டி எலும்பினை குத்தும் வேதனையை கொடுக்கின்றது....இங்கே தானிருக்கிறது சூட்சுமம் ...சாதரணமாக இங்கே தான் துவண்டு விழுந்து சோர்ந்து விடுகிறோம்... ஆனால் மாறாக ஒரு வித திமிரும் கோபமும் இங்கேதான் வரவேண்டும்....!

எங்கே விழுகிறோமோ.. அங்கே விசுவரூபம் எடுத்தாக வேண்டும். நம்மை சிதைப்பதற்கென்றே எதிர்மறை சிந்தனையாளர்களும், சூழ் நிலைகளும் கூட விசுவரூபம் எடுக்கும்...ஆனால்....ஏய் வாழ்க்கையே.... நீ என்னை என்ன செய்து விடுவாய்...? கோடாணு கோடி மனிதர்கள் வந்தனர் சென்றனர்...! எம்மை சுற்றியிருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதெனில் எனக்கான வாழ்க்கையை மறுத்து விடுமா ? இந்த பூமியின் சுழற்சி...

என் பாதச் சுவடுகளின்

வெறித்தனமான அழுத்த ஓட்டங்களின்

விளிம்பில்..காத்திருக்கிறது...

நான் கடக்கப் போகும்..இலக்குகள்

வெளிச்சமும் இருளும்

குழப்பி கிடைத்த

மங்கலான ஒரு அந்திமம்

தந்த இருட்டின் நுனியில்

வெடித்து சிதறும்

எனக்கான சூரியக் கதிர்கள்....!

திட்டமிடலும், செயலாக்காலும் மட்டுமல்ல....தோழா.. சரியான தேர்ந்தெடுத்த நட்புகளும் நமது வெற்றியின் காரணிகள். வாழ்வில் சில பொழுது போக்குக்காகவும், நம் மூளையை சுத்திகரித்துக் கொள்ளவும்தான்...அதுவே வாழ்க்கையாகக் கொண்டால் அது பெரும் அபத்தம்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. தினமும் பதிவெழுதி விடுகிறீர்களே...அன்றாட வேலைகளுக்கு நடுவே உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று....! நண்பரின் கூற்று தவறு நான் தினமும் பதிவுகளை வெளியிடுகிறேன்... ஆனால் தினமும் எழுதுவது கிடையாது....ஒரு வார இறுதியின் கேளிக்கைகளுக்குப் பிறகான பின்னிரவில் பெரும்பாலும் விழித்திருப்பேன்...தோன்றுவதை எல்லாம்....அப்போதே எழுதுகிறேன்......மேலும் தனித்து இருக்கும் நேரங்கள் எல்லாம்.....ஏதாவது தோன்றிக் கொண்டேதானிருக்கிறது....!

என் எழுத்துக்கான கருவை நான் பெரும்பாலும் புறத்தில் தேடுவது மிகக் குறைவு........! அதனால் என்னோடு நானிருக்கும் நிமிடங்களை வடிப்பதற்கு அதிக பிராயத்தனம் செய்வது இல்லை. சொல்லி முடித்தவுடன்....ஏற இறங்க பார்த்து விட்டு போய்விட்டார் அவர்.

பாருங்க செமயா ட்ராக் மாறி போய்ட்டேன்...........

வாழ்வின் ஓட்டத்தில் வாள் வீசும் வீரனாய் போரடிக் கொண்டுதான் இருக்கிறோம்... ! இதில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது....

1) நேரம் தவறாமை

2) துல்லியமான இலக்கு

3) இலக்கு நோக்கிய பயணம்

4) செயல் திட்டங்களும் செயல்படுத்தலும்

5) தெளிவு

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆசியாவின் சூப்பர் தொழிலதிபர் கலாநிதி மாறன்.....இவரது வெற்றிக்குப் பின்னால்..அரசியலும், பணபலமும் இருப்பதாக மிகைப்பட்ட பேர்கள் நினைக்கிறார்கள்...அப்படியில்லை.....கலாநிதி மாறன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தொழிலதிபராகி இருப்பார்......காரணம்....அவருடைய பார்வையும், இன்னோவேட்டிங் ஐடியாவும், அட்டிடியூட் என்னும் மனப்பாங்கும்தான் காரணம்...........

வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!

ஆமாம் சார்.....ரொம்பவும் மன உறுதியோட மனசு புல்லா நம்பிக்கையோ வாள் வீசிக் கொண்டிருக்கும் போராளிதான் நானும்...

எது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....!ஜெயிப்பேன்....!

நீங்களும்தான் பாஸ்....ஜெயிக்கணும்...ஜெயிப்பீங்க...!

ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!

11/29/2012

தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை




யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம்.

உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்!

காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவியாய், உணர்வுகளை பிரதிபலிக்கும் அணி இலக்கணமாய், வார்த்தைகளை அளவிடும் மாத்திரைகளாய்....எம்மவரின் வாழ்வில் எத்தனை எத்தனை பங்கு கொண்டாய்....

காலங்கள் தோறும் உன்னைக் கொண்டு இம்மனிதரின் வயிற்றுப்பசி அடங்கியது தாயே....! உன்னை சிறப்பாக்க, உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!

தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?

கம்பனின் சொல்லாடலை அவர்களின் தன்மைக்கேற்ப எப்படி விளங்குவார்கள்? அப்படியே விளக்கினாலும்...வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? உங்களின் ஆய்வுகளை எல்லாம் எதோ ஒரு பல்கலைகழகத்தில் நிகழ்த்தி அதன் மூலம் நம் மொழியின் வளத்தை நிறுவ முடிவுகள் எடுத்து அரசு நடைமுறை படுத்தியிருக்கலாமே.....? இதற்கு எதுக்கு கோடிகளில் செலவு....? மாறாக தமிழனின் வாழ்க்கை மிளிர அதை செலவு செய்திருக்கலாமோ.....?

அந்தோ பரிதாபம் எம்மொழிக்கான விழா...அதற்கு ஒரு பாடல்....இதிலேயே தெரிந்து விட்டது தமிழனின் தமிழ்ப்பற்று. எம்மண்ணின் மணத்தை பாடலிலும் பாடல் வரிகளிலும் கொணரவுமில்லை, பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒலிக்கவுமில்லை. தமிழ் என்பது ஒலி வடிவம் கொண்ட, எழுத்து வடிவம் கொண்ட..இலக்கணத்தில் சிறந்த...தொன்மையான மொழி மட்டுமல்ல..அது நமது கலாச்சாரத்தில் ஊறிய, வாழ்வில் அங்கமான உயிரோடு கலந்த ஒரு விசயம்.

செம்மொழியின் பாடலும், தமிழனுக்கு சம்பந்தம் இல்லாதது அதில் பயன்படுத்திய வரிகள் வேண்டுமானால் தமிழோடு தொடர்புகொண்டிருக்கலாம் ஆனால் இசையும், இசைத்த கருவிகளும் தமிழோடு தொடர்பற்றது. ஒரு தாய் தன் குழந்தையை தாலட்டும் இசையில் நாம் எந்த சிரத்தையும் எடுக்காமல் தமிழ்த்தாய் வெளிப்பட்டு ஒரு வித உற்சாக அமுது படைப்பாள். ஏற்றம் இறைக்கும் உழவனும், நாற்று நடும் பெண்களுகம், ஆண்களும் இசைக்கும் பண்ணில் ஒளிந்து நின்று எட்டி எட்டிப் பார்த்து நம்மை மகிழ்விப்பாள் எம் தமிழ்த்தாய். அவளுக்கென்று ஒரு கலச்சாரம் உண்டு அந்த கலாச்சாரத்தை மேற்கித்திய இசையின் மூலம் அழிக்க நினைத்திருப்பது ஒரு கொடூரமான செயல்
யூனிகோட் என்னும் அச்செழுத்தினை இனி அனைவரும் பயன்படுத்தவேண்டும்....சரி....

வலைப்பூக்களில் தமிழ் மிளிர்கிறது .....சரி

உலகெமெங்கும் இருந்து தமிழறிகள்......கட்டுரைகளை சமர்ப்பித்தனர்......சரி..

மக்கள் கூட்டம் கரை புரண்டது........சரி

தமிழில் கையெழுத்திட அனைவரும் முன் வரவேண்டும்...சரி...

இனி தொடர்ந்து செம்மொழி மாநாடு நடக்கும்.....சரி....

தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளில் இயன்ற வரை தமிழ் புகுத்தப் பட வேண்டும் என்றும் லேகியம் விற்கும் விற்பன்னர்களுக்கும், ராசிக்கல் விற்கும் வியாபாரிகளுக்கும், தொடர் நாடகம் என்னும் ஒரு மனோதத்துவ தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் இவர்கள்....அதிகபட்ச மக்கள் பார்க்கு நேரங்களில் செம்மொழியான எம் தாய்மொழியின் பெருமை சொல்ல நேரம் ஒதுக்க ஏதேனும் சட்டம் உள்ளதா?

எல்லா தமிழ் ஊடங்களும் தமிழின் சிறப்பினை கூற தனியே பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்று கட்டளைகள் எதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மொழியின் வளமறியும் நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?

தமிழ் மொழி இல்லாத விண்ணப்ப படிவங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்க முடியுமா?

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என்று கண்டித்து சொல்லா ஏதேனும் வழிவகை உண்டா.....?

ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....

இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை சரளமாக வரும்.....எதாவது வேலை ஆகவேண்டும் அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்றால் உரக்க ஆங்கிலத்தில் பேசினால் ...பயப்படுகிறார்களா இல்லையா....? மனோதத்துவ ரீதியாக மனதிலே ஒரு எண்ணம் எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயப்படும் நிலை மாற...ஏதாவது விளக்க வகுப்புகள் எடுக்கப் போகிறீர்களா....செம்மொழி விழா நடத்தியவர்கள்.....?

மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!

தமிழ்....பேச.....தமிழன் இருக்க வேண்டும்...முதலில் இல்லையெனில் ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்புகளையும்....அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய நிலை வரும்...


போற்றுவார் போற்றட்டும்...

புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!

தொடர்ந்து செல்வேன்....

ஏற்றதொரு கருத்தை...

எனதுள்ளம் ஏற்றதால்..

எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....

நில்லேன்....! அஞ்சேன்...!

11/08/2012

DON'T WORRY BE HAPPY





நாம குழந்தையாக இருக்கும்போது நாம் பெரியவானாக வளர்ந்துவிட்டால் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். பெரியவனாகிவிட்டால், வேலைக்கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். வேலைக்கிடைத்துவிட்ட பிறகு நல்ல மனைவிகிடைத்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். நல்லமனைவி கிடைத்த பிறகு குழந்தையிருந்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். குழந்தை பிறந்த சிறிதுகாலத்திற்கு பிறகு அந்த குழந்தை வளர்ந்துவிட்ட பிறகு வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அதன் பிறகு அந்த குழந்தை டீன் ஏஜ் பருவத்தை தாண்டிவிட்டால் கவலையில்லாமல் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அந்த குழந்தைக்கும் கல்யாணமாகி நாமும் ரிட்டையர்டுயாகி நாம் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் போது வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம்.


ஆனால் வாழ்வின் உண்மையென்னவென்றால் இந்த நிமிஷத்தைவிட வாழ்வில் வரப்போகும் நிமிஷம் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இப்போதுயில்லையென்றால் பின் எப்போது?

நம் வாழ்வில் எப்போழுதும் சாவால்கள் நிறைந்துள்ளன. நாம் அதைப் புரிந்து ஒத்துக்கொண்டு சந்தோஷமாக வாழக் கற்றுகொள்ள வேண்டும்.வாழ்க்கை இப்போதுதான் சந்தோசஷமாக ஆரம்பிக்கிறது என்று நாம் நினைக்கும் போது உடனே தடைக்கல் எதிர்படும். அந்த தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாகமாற்றி வெல்ல வேண்டும். நிமிஷங்கள் தங்கப்புதையல் மாதிரி . அதன் முக்கியத்துவதை உணர்ந்து அதை நம் வாழ்வில் யாரை முக்கியமாக கருதுகின்றோமோ அவர்களுடன் பகிர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். நிமிடம் யாருக்காகவும் காத்திருக்காது அதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

படித்து முடிக்கும்வரை , உடல் எடையை குறைக்கும்வரை, அல்லது கூட்டும் வரை, வேலைக் கிடைக்கும்வரை, இல்லை  இந்த நிமிஷத்தைவிட வேற எந்த நிமிஷமும் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைத்து வாழுங்கள்.

11/01/2012

மனதை உருக்குலையச் செய்தக் காட்சி

என் மனதை மிகவும் பாதித்த வீடியோ க்ளிப். மனது மட்டுமல்ல இதயம் இன்னும் அழுது கொண்டிருக்கிறது


தன் சுயநலத்தை மட்டுமே மனதில் கொண்டு தாய் நாட்டை சுரண்டும் மனிதர்களை சரித்திரங்களில் மட்டும் நாம் பார்க்கவில்லை

இப்போது நாம் கண் எதிரிலேயே காண்கிறோம். வானத்தில் இருக்கும் நட்சதிரங்களை போல லட்சமாய் கொட்டிக் கிடக்கும் சுயநலவாதிகள் மத்தியில்  லட்சிய இல்லா  /பொதுநல வாதிகள் வளர்வது அபூர்வம்..அப்படிபட்ட சுயநலமில்லாத ஒருவரின் வாழ்க்கை சம்பவமே கிழேயுள்ள வீடியோ க்ளிப். இதை இந்த கால மனிதர்களும், தங்களை மக்களின் தலைவன் என்று சொல்பவனும் ஒரு தடைவையாவது சுய அறிவோடு இதை பார்க்க வேண்டுகிறேன்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CjNovbdxZtc
இதை பார்த்த பின் உங்களின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணிர் வருமானால் இன்னும் உங்கள் இதயம் முற்றிலும் சுயநலத்தால் பாதிக்கபடவில்லை என்று கருதலாம்.

இனிவரும் காலத்திலாவது சுயநல அரசியல் ஜாம்பவான்களின் ஆசைப் பேச்சுக்களை நம்பி இளைஞர்களான நாம் சோரம் போகாமல், சிந்தித்து, செயற்பட்டு சமுதாயத்தின் விடிவுக்காக சுயநலமில்லாமல் பொதுநலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்

10/15/2012

வியப்பான உலகமிது......

சூப்பர் சிங்கர் பார்த்து 


ஒட்டு போடும் நாம் 

சிங்கள தமிழன் சாகும் போது

தந்தி அனுப்ப தேடிய போது 

காணாமல் போய்விடுவோம்.....


தொலைகாட்சி நெடுந்தொடரை

தொய்வின்றி பார்த்துவிட்டு

தொற்றுநோய்(டெங்கு ) விழிப்புதொகுப்பை

தொல்லை என தள்ளிவைப்போம் ...


அணுமின் நிலையம் பற்றி

அலை அலையாய் செய்தி வர

அடுத்த வீட்டு சண்டையை ஆசை 

அதீர ரசித்து பேசிடுவோம்

விலைவாசி உயர்வு இங்கே

விறுவிறுவென உயர்ந்து நிற்க

சசிகுமாரின் "சுந்தர பாண்டியனில் "

மூழ்கிவிட்டோம்.......


மின்சாரம் இல்லை ....

வேலையும் இல்லை


தண்ணீர்பஞ்சம் தலைவிரிக்க

தண்ணீர் தர ஆளும் இல்லை- மது

தண்ணியிலே மூழ்கிவிட்டு

தள்ளாடும் மனிதரினம்........


அரசியல் தலைவர்களால் இன்று

ஆதாயம் ஏதுமில்லை

வாக்குரிமை என்று என்றே நம்

வரிப்பணத்தை இழந்துவிட்டோம்.....


பொழுது போக்குக்கும் ,போதைக்கு மயங்கி

வாழும் விந்தையிலும் விந்தையான

வியப்பான உலகமிது......



10/10/2012

அன்பு தோழி



தென்றல் தீண்டியும்


சிமிட்டதா கண் இமைகள்

இருக்கையில் அமர்ந்து

என்னையும் கண்ணையும்  ரசித்தது...

அளவுக்கு அதிகமான நெரிசலிலும்

என்னை தேடும் அவள் மனம்....

நான் தினசரி பயணிக்கும் பேருந்து...


வேண்டாம் ...அன்பு தோழி

நான் காதலை மறந்து ,கடமையை

நோக்கி  பயணிப்பவன் ...

10/03/2012

மாறுதல் நிச்சயம்.....







ஆழ்மனதின் ஆற்றல் பற்றி எவ்வளவோ படித்திருப்பீர்கள். அந்த ஆற்றல் நம் வாழ்க்கையை

ஆக்கவும்; உதவும் அழிக்கவும் செய்யும். ஆழ்மனதின் நம்பிக்கைகளை ஒட்டியே நம் வாழ்க்கை

அமைகிறது. உங்கள் குறிக்கோளை நீங்கள் அடையமுடியவில்லை என்றால் அதற்கு உங்கள்

ஆழ்மனதிலுள்ள குறுக்கும் நம்பிக்கைகளே காரணமாக இருக்கும்.


'என் ஆசைகள் எப்போதுமே நிறைவேறுவதில்லை'

'நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி'

'வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் தேவை'

போன்ற நம்பிக்கைகள் ஆழ்மனதில் இருக்கும் பட்சத்தில் எதிர்மறையான எண்ணங்களே

தோன்றும்.

நம்பிக்கைகள் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன. எண்ணங்கள் விளைவுகளைத்

தோற்றுவிக்கின்றன. எண்ணங்கள் எதிர்மறையாக இருந்தால் நீங்கள் விரும்புவதற்கு

நேர்மாறாகவே விளைவுகள் இருக்கும்.


ஆழ்மன நம்பிக்கைகளை ஆராய்ந்து அவற்றை மாற்றுவதற்கு மிகுந்த பொறுமையும்

விடாமுயற்சியும் தேவை.

ஆனால், அதற்கான குறுக்கு வழி ஒன்று உண்டு. தகுந்த விளைவுகளை வலிந்து உருவாக்குவதன்

மூலம் எண்ணங்களை மாற்றலாம். எண்ணங்கள் மாறினால் நம்பிக்கைகள் மாறும். இந்தப்

பாஸிடிவ் அதிர்வுகள் மேலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது உங்கள் இலக்கு

சுலபமாக எட்டக் கூடியதே என்று உங்கள் ஆழ்மனம் நம்பிவிட்டால், உங்கள் விருப்பத்தை

நிறைவேற்றுவதற்கான வழிகளை அது தானாகவே கண்டுபிடிக்கும். அதற்கு என்ன செய்ய

வேண்டுமெனெப் பார்ப்போம்.

1. முதலில் உங்களது இலக்கு என்ன என்பதைத் தெளிவாக எழுதுங்கள்

2. உங்கள் இலக்கினை நீங்கள் எட்டிவிட்டால் உங்கள் வாழ்க்கை முறையில் எப்படிப்பட்ட

மாற்றங்கள் இருக்கும் என்பதைப் பட்டியலிடுங்கள்



3. இந்தப் பட்டியலிலிருக்கும் மாற்றங்களை தற்போதைய நிலையில் எவ்வளவு சுலபமாக

உங்களால் செய்யமுடியும் என மதிப்பிடுங்கள். (10 - வெகு சுலபம்; 1 - மிகக் கடினம்).



4. நீங்கள் எளிதாக செய்யக் கூடிய மாற்றங்களை அடையாளம் கொண்டுவிட்டீர்கள். நேரம்

கடத்தாமல் அவற்றை செயல்படுத்த ஆரம்பியுங்கள்.



இப்படி உங்கள் இலக்கினை எட்டியபிறகு இருக்கும் வாழ்க்கை சூழலை நீங்கள் கொஞ்ச

கொஞ்சமாய் ஏற்படுத்த ஆரம்பித்தீர்களானால், உங்கள் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுவதை

ணர்வீர்கள். முன்பு தொழில் தொடங்குவதை நினைத்தவுடன் 'அந்த வாய்ப்பு எனக்கு இந்த

ஜென்மத்தில் கிடைக்குமா தெரியவில்லை' என்ற எண்ணம் ஏற்பட்டிருக்குமாயின் இப்போது

'அதொன்றும் பெரிய காரியமில்லை. கொஞ்சம் தாமதமாகிறது. அவ்வளவுதான்' என்று எண்ணத்

தோன்றும்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் எழுமாயின் ஆழ்மனதுக்கு உங்கள் இலக்கு மலைப்பாகத் தெரியாது.

விருப்பங்கள் நிறைவேறும் வழிகள் தானாகத் திறப்பதைக் காண்பீர்கள்.


அதற்காக கடன் வாங்கி பட்டியலிலிருக்கும் எல்லாவற்றையும் உடனேயே செயல்படுத்த   நினைப்பது சரியல்ல; அது ஆழ்மனத்தில் அபாயமணியை எழுப்புமே தவிர நம்பிக்கையை   ஏற்படுத்தாது. எனவே சின்னச் சின்ன மாற்றங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்துங்கள்.   மாறுதல்களை நிச்சயம் காண்பீர்கள்

10/01/2012

நாள்முதலாய்

பட்ட வலியெல்லாம்  போதும்

என்று.... தோணுது

உன்னை  விரும்பிய

நாள்முதலாய்....!!


என் வாழ்க்கையை

நல்லவள்  என்று நம்பி......

கெடுத்துவிட்டேன்...... என்

தொழில் ,மரியாதையும்

கெடுத்துக்கொண்டேன்...!


அதன் தண்டனையை

நான் தனியே..... மட்டும்

அனுபவித்து விட்டுப்

போகிறேன்.....

என்னை சார்ந்தவர்களுக்கும்

 தெரியாமல்.....!!  

9/30/2012

உன்னிலிருந்து பிறப்பதால்!!





பலமுறை  முயன்றும் முடியவில்லை!

இதயம்  'தாடி' என கேட்பது ...

ஆதலால்  தாடையில் வளர்த்தேன் 'தாடி'...!

பூக்களைத் தேடி வந்த வண்டுக்கு...

முட்களால் காயம்!  அவள் பார்வை!!

அவளைப் பார்த்தும் துடிதுடித்தது இதயம்!

எங்கே தாம்  இல்லாமல் போயிவிடுவோமோ என்று...!

கவிதை மனதின் உள்ளிருந்து பிறக்குமாம்! ஆம்!

ஒத்துக்கொண்டேன்.  உன்னிலிருந்து பிறப்பதால்!!

நேர்மாறான சிந்தனை


சமீபத்தில்  பல விதமான நேர்மாறான சிந்தனைக்கு உட்கொள்ளும்போது படிக்க நேர்ந்தது

அதை உங்களுடன்




* உன்னுடைய குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும். தோல்வி கண்டு துவளக்கூடாது.

தோல்வியின் மூலமே நாம் புத்திசாலிகளாகிறோம்.

* உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு

எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியாது. உன்னை ஆன்மிகவாதி ஆக்கிவிடவும் முடியாது.

உனது சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.

* இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும்

வகையில் நம்மை நாமே விட்டுவைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை

நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

* தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிருந்தால்

தீய செயல்கள் தலைகாட்ட வழி ஏற்படாது.

                                                                                                                                   - விவேகானந்தர்

9/29/2012

சுந்தர பாண்டியன் - சினிமா விமர்சனம்




நான் படம் பார்க்க போனதையே ஒரு படமா எடுக்கலாம் போல. இன்னைக்கு பாத்து என்னை

படம் பாக்க விடாம விதி இடைஞ்சல் செய்ய அதை தாண்டி வந்து சிறிது குறைபாடோட

படத்தை பார்த்தேன்.


படத்திற்குள் வருவோம். இந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில்

நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது

நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம்

குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது. (இப்போ பண்ணரங்கா)

எல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத்

துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார்

சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல்ல அவரும் ஏற்றுக்

கொள்கிறார்.

ஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நடந்து விடுகிறது.

கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர

அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து

ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.

நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும்

போது தியேட்டர் கலகலக்கிறது.

ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே

தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை

இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு

பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.

சூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின்

தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு

எடுத்து கலாய்க்கிறார்.

விஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில்

எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில்

நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.

பாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும்

இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும்

என்று நினைக்கிறேன்.

சுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன்

எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல

படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல்

இயல்பாக இருக்கிறது.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.  சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை

குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.

9/19/2012

பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்




பார்வதிதேவியின் புத்திரனாக அவதரித்த விநாயகர் ஆரம்பத்தில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் மனித உருவத்துடன் தான் இருந்தார். பிரம்மன் உயிர்களைப் படைக்கும் பணியை மேற்பார்வையிட சென்றார். அந்நேரத்தில், தொழிலில் சற்று கவனமில்லாமல், தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டார் பிரம்மன். கொட்டாவி சோம்பலின் அறிகுறி. சோம்பல் வந்து விட்டால், துன்பம் பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்து விடும். அந்த கொட்டாவியில் இருந்து ஒரு அரக்கன் பிறந்தான். இவன் தன்னைப் படைத்த பிரம்மனை வணங்கினான். ஐயனே! நீங்கள் உபயோகிக்கும் மண் உள்ளிட்ட எந்த உபகரணத்தில் இருந்தும் நான் பிறக்கவில்லை. வாயில் இருந்து பிறந்துள்ளேன். தாயில்லா பிள்ளையான நான் தங்களின் பிள்ளையாக இருக்க விரும்புகிறேன், என்றான். பிரம்மா இதற்கு சம்மதிக்கவில்லை. கோபம் கொண்ட அவன், அப்படியானால், நான் கேட்கும் வரத்தையாவது தாருங்கள், என்றான். பிரம்மா சம்மதிக்க, நான் யாரைக் கட்டித் தழுவுகிறேனோ அவர்கள் சாம்பலாக வேண்டும், என்றான். பிரம்மா சம்மதித்து விட்டார். அவ்வளவு தான். தன்னை மகனாக ஏற்காத பிரம்மனையே கட்டிப்பிடிக்க முயன்றான் அவன். பிரம்மா ஓடிவிட்டார். இதைப் பார்த்த விநாயகர் தந்தையிடம் சென்று நடந்த சம்பவத்தை சொன்னார். பிரம்மா இல்லாததால் உயிர்களின் பிறப்பு நின்றது.


கொட்டாவியில் இருந்து பிறந்த சிவந்த நிறமுடைய அந்த அரக்கன் சிந்தூரன் என தனக்கு பெயர் சூட்டிக் கொண்டான். தேவலோகத் தெருவில் போவோர், வருவோரை எல்லாம் கட்டிப்பிடித்து பஸ்பமாக்கினான். அவனைக் கண்டு நடுங்கிய தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை நோக்கினார். தந்தையின் பார்வையை குறிப்பால் உணர்ந்த கணபதி சிந்தூரனைக் கொல்ல முடிவெடுத்தார். இந்நிலையில் மகேஸ்வரன் என்ற குரு (பிரகஸ்பதி) பக்தன், அவரை தினமும் கோயிலில் சென்று வணங்குவான். குரு அவன் பக்திக்கு மகிழ்ந்து, என்னை வணங்கிய உன் சிரம் இந்த உலகத்தாரால் வணங்கப்படுவதாக,என வரமளித்தார். அதற்கான நாளை எதிர்பார்த்திருந்தான் மகேஸ்வரன். ஒருநாள் அவன் தன் பரிவராங்களுடன் வீதியுலா சென்ற போது, அவ்வூருக்கு நாரதர் வந்தார். மன்னன் அவரைக் கவனிக்காமல் சென்றான். கோபமடைந்த நாரதர் அவனை அசுரனாகும்படியும், யானத்தலையுடன் திரியும்படியும், சிவனால் அத்தலை அறும்படியும் சபித்தார். இதன்பிறகு மகேஸ்வரன் அட்டூழியம் செய்து திரிந்தான். சிவபெருமான் அவன் சிரத்தை அறுத்தார். பிரகஸ்பதியிடம் ஓடோடிச் சென்ற விநாயகர், உங்கள் விருப்பப்படி உங்களால் வரம் தரப்பட்ட மகேஸ்வரனின் தலையை நான் பொருத்திக் கொள்வேன். அவன் தலையுடன் கூடிய என்னை எல்லாரும் பணிவர், என்றார். பின் அந்த தலையை தன் திருமேனியில் தாங்கி காட்சி கொடுத்தார். அன்று முதல் விநாயகருக்கு கஜானனர் என்ற பெயர் ஏற்பட்டது. ஒருநாள் சிந்தூரன் விநாயகரை எதிர்க்க வந்தான். சர்வசக்தியுள்ள அந்தக்கடவுள் சிந்தூரனை அப்படியே தூக்கி தன் மத்தகத்தில் சாந்தாக பூசிக்கொண்டார். தேவர்கள் மகிழ்ந்தனர். வடமாநிலங்களில், விநாயகர் உடல் முழுவதுமே செந்தூரம் பூசுவதன் காரணம் இதுவே.



காணபத்தியம்

இந்து மத்தத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணபத்தியம் எனும் பிரிவு இக்கடவுளை மையப்படுத்தியதே.
இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது. இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது.



திருவுருவ விளக்கம்



திருவடி


ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.



பெருவயிறு

ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.



விநாயகரின் வேறு பெயர்கள்



பிள்ளையார்


கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.

ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்


விநாயக சதுர்த்தி


வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.

9/17/2012

என் தமிழ் மொழி






"பிறந்தவுடன் நான் சொன்ன  "அம்மா" என்ற என் மொழி 


மழலையாய் நான் கற்ற மழலை மொழி 

அதுவே செம்மொழியான என் தமிழ் மொழி! 

பண்பை வளர்த்த பண்பாட்டு மொழி 

என் கவிதைகளை உருவாக்கிய  என் காதல்  மொழி 


செம்மொழியான என் தமிழ் மொழி! 

என் பகுத்தறிவை வளர்க்கும் பக்குவ மொழி 

உலகை ஆளப் பயணிக்கும் மொழி 

செம்மொழியான என் தமிழ் மொழி! 

நம் தமிழ் இதயங்களை இணைக்கும் இனிய மொழி 

இணையத்தில் வளரும் செம்மொழியாக இங்கே! 

இணைக தமிழ் இதயங்கள்! 

9/15/2012

நம் தோழர்கள்........


கடல் தாண்டி ஆண்டு வந்த 


தமிழ் சமுதாயம் இன்று கலை இழந்து 


கவலையோடும் கண்ணீரோடும் கடலுக்கு 


நடுவே அல்லல்படுகிறது (கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் நிலை)


வாழ்வு வேண்டுமென்று வந்தோரெல்லாம் 


வசதியாக வாழ்கின்றனர் என் தமிழ்நாட்டிலே 


இங்கு வாழ்ந்துவிட்டு சென்ற தமிழீழ 


தமிழினமோ தவிக்கிறது தண்ணீருக்கும் 


தங்குமிடத்துக்கும்…. 


எக்காலமும் நிக்காது இக்காலம் வரை 


தொடர்கிறது ஒருக்காலும் அனுமதியாத 


சுயமரியாதை யுத்தம்… 


என் தமிழன் ஒன்றுபடும் காலம்  வரை 


இது நிற்காது செல்லும் நித்தம் 


அதுவரை நம் தோழர்கள் குடும்பத்தை 


அரவணைப்போம் அவர்களுள் ஒருவராக


9/07/2012

பிரிவுடன்..........




நீரில்லா மீனாய் 

தவித்த போது 

நேரில் வந்தாள் 

வசந்தம் தந்தாள்! 

பார்க்கும் இடமெல்லாம் 
தேவதை அவள் முகம் பகலில் ! 

இரவில் அவளை தேடினேன் 
நிலவாய் வானில் ! 

விழிகளின் சயனத்தில் 
இவளுடன் பயணம் கனவில் ..! 

கனவுடன் கலைந்தது 
அவளின் நினைவுகள் 

அவள் பிரிவுடன் ..! 

9/04/2012

வரப்பிரசாதமே

 

 

கட்டு கட்டாக கவிதைகளையும்

கட்டுரைகளையும் மன வேதனைகளையும்

வார மற்றும் மாத பத்திரிகைகளுக்கு 

அனுப்பி விட்டு பத்திரிகையில் 

வெளியாகாதா என்ற ஏக்கத்தில் 

கண்கள் பூத்து எழுத்திற்கு நான் தகுதி

இல்லையோ என்று வேதனை பட்ட 

நாட்கள்தான் எத்தனை எத்தனை....

நண்பர்களிடம் நல்ல விதமான கருத்தும் 

பாரட்டும் பெறும்போது பூரித்த நாட்கள்தான்

எத்தனை எத்தனை?

எழுத்து என்ற ஓர் அற்புத

வலைத்தளம் என்னை போல்

நல்ல உள்ளங்களுக்கு


ஓர் சிறந்த வரப்பிரசாதமே...

8/28/2012

என் நினைவுகள்

 

நினைவாற்றலை வளர்க்க விரும்பினேன்

என் நினைவுகள் உன்னை சுற்றுவதால் !


ஆகாயத்தின் மேல் உன்னை வர்ணிக்க


விரும்பினேன் !


காகிதத்தின் நீளம் , அகலம் பத்தாததால் !


தேன் சுவையானது தான் :


இல்லை என்று யார் சொன்னது ?


உன் எச்சில் சுவைக்காத வரை !


பூக்களில் வரும் வாசனை அற்புதமாக


தோன்றவில்லை ;;;


உன் வாசம் கண்டதால் !


உன் சிரிப்பு உண்மையிலேயே அழகுதான்


இல்லை என்றால் அதை பார்க்க


இவ்வளவு ஆர்வம் வருவது ஏன் ?

8/22/2012

அன்பே




நான் எத்தனை முறை மரணத்தை தழுவினாலும்


அத்தனை முறையும் எனக்கு இந்த பிரபஜத்தில்

ஜனனம் வேண்டும் ,

எனது ஒவ்வொரு ஜனனத்திலும் உன் காதலை 

பெற்று உன் அன்பிற்காக ஏங்கியே நான் மரணத்தை

தழுவவேண்டும் அன்பே,,,...!!!

8/15/2012

இன்று விடுதலை திரு நாள்

 

தெற்கே ஓர் அன்னையிடம்
வடக்கே பூகம்பம் வந்தது
1000 பேர் பலி என்று சொல்
அய்யோ பாவம் என்று வருந்துவாள்

மொழியால் , இனத்தால் ,எல்லைகளால்
பிரிந்து கிடந்தாலும்
மனித இழப்பை குடிமக்கள்
யாரும் விரும்புவதில்லை
சிலரது சுய நலத்தால்  பிரிந்து கிடக்கிறோம்
பிரிக்க படுகிறோம் - போர்களை அறிவிப்பது
நாடல்ல நாட்டுமக்களும் அல்ல
நாட்டு தலைவர்கள்

சுதந்திரம்
ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை -பறவை போல
ஆயிரம் வசதிகளுடன்
எல்லை என்னும் கூட்டில் அடைத்தால்
அது சுதந்திரம் ஆகாது
ஓரறிவு பறவை
ஆறறிவு மனிதன்
நினைவில் இருக்கட்டும்
சுதந்திர நாடு என்று
மார்த்தட்டிகொள்ளும் மடையர்களுக்கு

வடக்கே ஓர் அன்னையிடம்
தெற்கே சுனாமி வந்தது
5000 பேர் பலி என்று சொல்
அய்யோ பாவம் என்றுதான் வருந்துவாள்
அவளும் 

இன்று விடுதலை  திரு நாள் ......

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.....

8/09/2012

இதயத்தின் வலி






நான் விரும்பிய ஒரு இதயம் என்னை விரும்பாத போதுதான்,
என்னை விரும்பிய இதயத்தின் வலி புரிந்தது.....

என்னை விரும்பிய இதயத்தை நான் புரிந்த போதுதான் என்னை விரும்பிய இதயத்தை நான் தொலைத்தது புரிந்தது ..............

புரியாத பிரியம் பிரிந்த போதுதான் புரிந்தது .....

பிரிந்த பின் புரிந்த பிரியம் இதயத்தில் வலியை மட்டும்தான் தந்தது

8/01/2012

சவாலுக்குத் தயாரா?’

 
         ‘‘இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடி விடேவண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பைத நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ் பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கைலகைளக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்ல,எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார். சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீ யின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது. ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’’ -நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது,நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவலையின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக! சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சனத் தம்பதியின் மகனாக, 1940-ல் பிறந்தார் புரூஸ்லி. குடும்பம் சீனா திரும்பியதும், குழந்தை நட்சத்திரமாகப் பல நாடகங்களில் நடித்தார்.
பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக்கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18-வது வயதிலேயே பாக்ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. வாஷிங்டன் பல்கலைகழகத்தில் தத்துவம் படித்தார். கூடவே, சனத் தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத் தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் ல-யின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரேவற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலேமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன்னார் லீ.

1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியான Õஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூலில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ்ல. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்துவிட்டன’’ என்று டாக்டர்கள் சொன்னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்றுவரை விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகைள உருவாக்குபவர்கேள சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்!

7/28/2012

அழு...வாய்விட்டு அழு...

அழு...


வாய்விட்டு அழு...

கதறிக்கதறி அழு...

உன்

கண்ணீரோடு காதலும்

கரைந்து போகும்வரை

அழு...

பின்பு

உலகத்தைப் பார்...

காதலையும் மீறி

எத்தனையோ அழகுகள்...

காதல்தோல்வியும் தாண்டி

எவ்வளவோ பிரச்சனைகள்...

அழகுகளை ரசிக்கக்

கற்றுக்கொள்...

பிரச்சனைகளை தீர்க்க

பழகிக்கொள்...

வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை

புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே

கண்ணீர்தான் சிந்துகிறாய்...

காதல் இறந்ததற்கா

உயிரைச் சிந்தத்துணிகிறாய்?

காதல் புனிதமானதுதான்...

புனிதமான எதுவும்

உயிரை விலையாய் கேட்பதில்லை.

விலங்குகளை பலிகொடுத்து

கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்...

நம்மையே பலிகொடுத்து

காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்.

நண்பா...

காதல் தோல்வியா?

காதலியை வெறுத்திருந்தால்

தேடிச்சென்ற காதலை மறந்து

தேடிவரும் காதலை அணைத்துக்கொள்...

காதலையே வெறுத்திருந்தால்

களவைப் போல காதலையும்

கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்...

வாழ்க்கையென்பது வாழ்வதற்கே

என்பதைப் புரிந்துகொள்...!

7/24/2012

எனது கனவு இதுவே

சமீபத்தில் எனது விட்டருகே உள்ள பூங்காவில்  அரசு தேர்வு சம்பந்தமாக படித்துகொண்டு இருந்தேன்.அப்போது  என் அருகில் மதிக்கத்தக்க பெரிய்வர்  வந்தவர் அவர் 'தியாகி'

நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன் அதற்கான பதிலை  சொல்லு பார்ப்போம்  என்றார் அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு 


இது நமது நாடு என ஏழை எளியோர்களை உணர வைக்க,


இந்திய மக்களில் உயர்ந்த ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்று எவருமில்லை.

இந்தியாவில் அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குக் கடுமையாக பாடுபடுபவர்களைக் கொண்ட ஒரு இந்தியாவை உருவாக்குவதற்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

தீண்டாமை கொடுமை அல்லது மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளும் தீமைகள் இல்லாத ஒரு இந்தியா.

ஆண்களைப் போல பெண்களும் சம உரிமைகளை அனுபவித்தல்..

உலகின் பிற அனைத்துப் பகுதியிலும் அமைதி நிலவ நாம் பாடுபடுவது.

இந்தியாவைப் பற்றிய எனது கனவு இதுவே ஆகும்.

கனவு கண்டவர் யார் ?




நமது தேச தந்தை " மகாத்மா காந்தி"