தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/03/2012

என்னையே…! எனக்குக்…

பூமிக்கு சுழற்சியை…


கொடுத்தவள் நீதானே…!


பகலுக்கு ஒளியை…

அளித்தவள் நீதானே…!



இரவிற்கு நிலவை…

இரந்தவள் நீதானே….!

நதியையும் கடலையும்….

இணைத்தவள் நீதானே…!



காதலுக்குள் மோதலை…

சேர்த்தவள் நீதானே…!


காதலில் காமத்தை…

கருக்கியவள் நீதானே…!


நேர்மையை பொறுமையாய்…

எனக்குள்…!

புகுத்தியவள் நீதானே…!!


ஓய்வையும் உழைப்பாய்…

என்னுள்…!

மாற்றியவள் நீதானே…!!


என்னையே…! எனக்குக்…

காட்டியவள்…!! நீதானே…!!!

கருத்துகள் இல்லை: