தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/17/2012

நான்……

யாரும் புரிந்து கொள்ளவியலா?


ஜடமாகவே இருந்துவிடுகிறேன்

நான்……



காலம்

என் கைகளில்

திணித்துப்போன…

நிறமற்ற கனவுகள்…

எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…



தேவதைகள்

யாருமற்ற எனது நிலத்தில்

சருகுற்று…

பேய்கள் வசிக்கட்டும்….



எப்போதேனும்…

கொலுசுகளோடு

வரும்

யாரோ ஒருத்தி

கண்டெடுக்கக் கூடும்…

சருகுகளினடியில்….

சிக்குண்டு போன…

யாரும்படிக்காத…

எனது புத்தகத்தின்…

இறுதிப் பக்கங்களை…..

கருத்துகள் இல்லை: