தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/13/2012

அவள் என்னை காதலிக்கிறாளா..?

அந்த கவிதையின் இறுதியில்


சூசகமாய் காதலைச் சொல்லியிருந்த

வரிகளை அவள் வாசித்துவிட்டு

என்னை காதலிக்கத் துவங்கியிருக்கலாம்;

வெறுக்கத் துவங்கியிருக்கலாம்

மெளனமாக இருக்கலாம்,

கோபமாக இருக்கலாம்,

சிரித்திருக்கலாம்;

புரியாமலேயே விழித்திருக்கலாம்;

எதிர்பார்த்திராமல் அழுதிருக்கலாம்;

மீண்டும் வேறு கவிதைக்காக காத்திருக்கலாம்;

அல்லது....

அந்த வரிகளை சாதாரணமாக

கடந்தும் போயிருக்கலாம்...;

ஆனால்...

நான் அவளுக்காக இன்னொரு

கவிதையை எழுதி விட்டு

மீண்டும் இறுதி வரியில்

அவள் என்னை காதலிக்கிறாளா..?

என்று அறிய முயலும்...

அர்த்தத்தோடு முடிக்க

முயன்று கொண்டிருக்கிறேன்...!

கருத்துகள் இல்லை: