தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/02/2013

என்தாயைக் குறிக்க.

எதையெதையோ எழுதியவன்
என்னைப் படைத்த
தாய்க்கெனஒரு கவிதை 
எழுதமுனைந்தேன்.

எங்கெங்கோ படித்த
வார்த்தைக் கோர்வைகள்
அனைத்தும் என் கண் முன்னே 

உதிர்ந்திருக்கும்
ஒவ்வொரு எழுத்திலும் 
ஒவ்வொன்றும்  எழுத்தோவியங்கள்.

அனைத்தையும் சேர்த்து 
வார்த்தைகளாக்கினேன்.
எதுவும் பொருத்தமில்லாததாக 
தோன்றியது 
என் தாயைக் குறிக்க.

எனக்கென எரிதழல் சுமந்து
வண்ணநிழல் தந்தவளுக்கு
வார்த்தைச் சுழலிலும்
ஒருவாக்கியம் கிடைக்கவில்லை.

ஒருவேளை
ஆயுதஎழுத்தைப் போல
“தேவதை எழுத்து”
ஒன்று இருந்திருக்குமாயின்
பொருந்திப்போயிருக்கும்
என்தாயைக் குறிக்க.

கருத்துகள் இல்லை: