தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/25/2013

என் அருமை தமிழ் மொழியே!

நான் பிறந்தபோது நீ என் பக்கமில்லை...
பாதியில் வந்தாய்,
நன்கு பழகினோம்,
உன்னை நன்கு புரிந்து கொண்டேன்,
போகுமிடமெங்கும் கூட வந்தாய்,
என் தோல்விக்கு ஆறுதல் சொன்னாய்,
அடிபட்ட போது முதலில் வந்தாய்,
உன்னையே பேச வைத்தாய்,
உன்னிலயே நினைக்க வைத்தாய்,
என்னை கவிதை எழுத வைத்தாய்,
எப்போதுமே கூட இருந்தாய்,
ஆனால்,
நான் சாகும் போது
நீ என் கூட வந்துவிடாதே!
உன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்
இங்கு எத்தனை பேரோ....?!?!?
- என் அருமை தமிழ் மொழியே!

கருத்துகள் இல்லை: