தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/31/2011

எனது பார்வையில் 2011


வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம் தான்... சரி 2011 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும் என்ன என்பதை பார்ப்போம்...

உலகம்...
• ஜப்பானில் நிகழ்ந்த மிகப்பெரிய பூகம்பம் அதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை(சுனாமி) பல்லாயிரகணக்கான உயிர்களை பலிக்கொண்டது, பல கோடி சொத்துக்களும் சேதமடைந்தன.

• இளவரசர் சார்லஸ் திருமணம் லண்டனில் ராணி எலிசபத் முன்னிலையில் ஆடம்பரமாக(கோலாகலமாக) நடைப்பெற்றது.

• ஒசாமா-பின்-லேடனை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது (ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையை வெள்ளை மாளிகையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகள்)

• உலகின் 7-வது பில்லியனாவது குழந்தை( world's seven billionth baby) உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த்தது.

• ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவப்படைகள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது.

• வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சி அதை தொடர்ந்து லிபியா அதிபர் கடாபி அக்டோபர் 20 ஆம் தேதி போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார்.

இந்தியா...
• ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே வின் கிளர்ச்சி.

• சிக்கிம் மாநிலத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது, சேதமதிப்பு 1 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது.

• கொல்கத்தாவில் அம்ரி என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தினால் 90க்கும் மேற்பட்டவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.

• மேற்கு வங்காளம் பிரகாஷ் நகர் கிராமத்தில் வழிதவறி சுற்றி திரிந்த சிறுத்தைப்புலி ஒன்று பல பொதுமக்களையும் மூன்று வனத்துறை காவலர்களையும் கடித்துக்கொதறியது, நீண்ட போராட்டத்துக்குப்பின் பிடிப்பட்டது.

• டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட அணி உலகக்கோப்பையை கைப்பற்றி உலக சாம்பியன் ஆனது.

• உலகின் முதன்மை கார் பந்தயமான பார்முலா - 1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைப்பெற்றது.

• மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சேவாக் தனது அதிரடி ஆட்டம் மூலம் இரட்டை சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.

தமிழகம்...
• 2ஜி வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி கைதானார்.

• 2011 தமிழக சட்டசபை தேர்தலில் அருதிப்பெருன்பானமையுடன் அ.இ.அ.தி.மு.க ஆட்சிபீடம் ஏறியது.

• சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகள் 22 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். (அதில் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் 20 பேர் என்பது மிகவும் பரிதாபத்திற்குரியது)

• முல்லை பெரியாறு அனை விவகாரம் தமிழகம்-கேரளம் இடையே பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சோகம்..
• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.

• ஆப்பிள் நிறுவனத்தின் தலைச்சிறந்த நிர்வாகி ஸ்டீவ் ஜாப் மரணமடைந்தார்.

சினிமா...
• போனவருடத்தில் வெளியான படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் குறைவாகவே உண்டு (ஏழாம் அறிவு ,எங்கேயும் எப்போதும் ,போராளி  ) 

நான் :
இந்த வருடம் நிறைய பிரச்சனைகளைசந்தித்த ஆண்டு...நிறைய காழ்ப்புனர்ச்சி சண்டைகள், சச்சரவுகள்... நிறைய பேர் யோக்கிய வேஷம் போட்டு வெளுத்து வாங்கினார்கள். நானும் சீண்டப்பட்டேன். முதலில் கோபபட்டு, உடலாலும் ,உள்ளதாலும் மிகவும் காயமடைந்த ஆண்டு


வலைப்பூ

பதிவுலகில் நான் காலடி எடுத்து வைத்து இரண்டாண்டு முடிவடைந்தது  ,இது வரை 403  பதிவுகள் எழுதி இருக்கின்றேன்... இத்தனைக்கும் மற்றவர்களை காட்டிலும் எனக்கு அனுபவம் குறைவாக இருந்தது.. வரும் வருடம் அப்படி இல்லை.. என்னையும் செழிமை படுத்தி நல்ல பதிவுகளுடன் உங்களை அடுத்த வருடம் சந்திப்போம்

என்னோடு தொடர்ந்து பயணப்பட்டு வரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்..
அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. குட் பை 2011..


என்றும் அன்புடன்
கோவைராமநாதன்


கருத்துகள் இல்லை: