"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
8/09/2010
படித்ததில் பிடித்தது "புத்தகம்"
புத்தகம் புதுமை
செய்யும்!
புரட்டுவது பக்கத்தை
அல்ல மனத்தை !
பத்திரபடுத்து புத்தகத்தை
பத்துமாதம் சுமந்து
பெற்ற உன்னை
பத்திரமாத்து தங்கமாக்கும்!
புத்தகம் திறககும்
போதெல்லாம்...
திறக்கும் உன்
மனக் கதவு!
கடலெனக் கிடக்கும்
கிடைக்கும் புத்தகத்தை
கிடக்கும் மிடமெல்லாம்
இடைவிடாது படி
பிடித்த நேரமெல்லாம்
படி உன் நேரம் சரியாகும்!
பரப்பிக் கிடக்கும்
புத்தகம் விரிக்கும் அறிவை!
உறங்கி கிடக்கும்
உயர்வை உசிப்பிவிடும்!
புத்தகம் ஆக்கும்
புத்தனாய் உன்னை!
ஏற்றம் கொடுக்கும்
மனச் சீற்றம் குறைக்கும்!
மற்றம் தந்து
மனிதனாக்கும்!
மனிதனை மாமனிதனாக்கும்!
மறுக்காமல் மறக்காமல்
தேடித் தேடி பிடி படி !
புத்தகம் புத்துயிர்
தரும் தவறாமல் படி !
நன்றி : சரவணன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக