தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/15/2012

வியப்பான உலகமிது......

சூப்பர் சிங்கர் பார்த்து 


ஒட்டு போடும் நாம் 

சிங்கள தமிழன் சாகும் போது

தந்தி அனுப்ப தேடிய போது 

காணாமல் போய்விடுவோம்.....


தொலைகாட்சி நெடுந்தொடரை

தொய்வின்றி பார்த்துவிட்டு

தொற்றுநோய்(டெங்கு ) விழிப்புதொகுப்பை

தொல்லை என தள்ளிவைப்போம் ...


அணுமின் நிலையம் பற்றி

அலை அலையாய் செய்தி வர

அடுத்த வீட்டு சண்டையை ஆசை 

அதீர ரசித்து பேசிடுவோம்

விலைவாசி உயர்வு இங்கே

விறுவிறுவென உயர்ந்து நிற்க

சசிகுமாரின் "சுந்தர பாண்டியனில் "

மூழ்கிவிட்டோம்.......


மின்சாரம் இல்லை ....

வேலையும் இல்லை


தண்ணீர்பஞ்சம் தலைவிரிக்க

தண்ணீர் தர ஆளும் இல்லை- மது

தண்ணியிலே மூழ்கிவிட்டு

தள்ளாடும் மனிதரினம்........


அரசியல் தலைவர்களால் இன்று

ஆதாயம் ஏதுமில்லை

வாக்குரிமை என்று என்றே நம்

வரிப்பணத்தை இழந்துவிட்டோம்.....


பொழுது போக்குக்கும் ,போதைக்கு மயங்கி

வாழும் விந்தையிலும் விந்தையான

வியப்பான உலகமிது......



கருத்துகள் இல்லை: