தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/05/2011

கனாக்கண்டேன் தோழா

கனவது கண்டேன் நினைவதாக



நினைவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


நடப்பதெல்லாம் கனவதாக இருக்க


கனவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


கனவது கனவாய்ப் போவதால்


கனவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


இருப்பது விட்டு பறப்பதைப் பிடிக்க


இருப்பது மட்டும் மெய்க்கக் கனாக்கண்டேன்!


மக்களெல்லாம் உண்மை மக்களாக


நம்மினம் மனிதரென கனாக்கண்டேன்!


நீரது பிரியாது உறவது நிலையாது


உறவது நிலைக்கக் கனாக்கண்டேன்!


காதலெனக் கூறி காமம் விலக்கி


காதலர் வாழக் கனாக்கண்டேன்!


இல்லையென சொல்லி இருப்பது மறைத்து


மறைக்க ஒன்றுமில்லாதவர் இருக்கக் கனாக்கண்டேன்!


பெற்றோரென்பவர் பெற்றதால் கடைமை


பெறாத பெற்றோருக்கும் கடைமை அமையக் கனாக்கண்டேன்!


உண்மையென்பது பொய்யில் பிறக்க


பொய்யென்பது உண்மையில் மறையக் கனாக்கண்டேன்!


கல்லில் அரிசி கிடக்கக் கண்டு


அரிசியில் கல்லில்லாமல் விற்கக் கனாக்கண்டேன்!


கொழிக்கும் வர்க்கம் செழித்து வளர


உழைக்கும் வர்க்கம் செழிக்கக் கனாக்கண்டேன்!


கல்வியென்பது பணத்தில் விளைய


பணமது கல்விக்கடிமையாகக் கனாக்கண்டேன்!


கலைகள் யாவும் அழிவது கண்டு


வளருதல் வேண்டும் கலைகள் யாவுமெனக் கனாக்கண்டேன்!


மனிதனொருவன் கிழிந்த ஆடைக்குள்ளிருக்க


ஆடைகள் மனிதன்மேலணியக் கனாக்கண்டேன்!


கலங்கும் மனங்கள் பெருகுவது கண்டு


மனங்களெல்லாம் மகிழ வழிகானக் கனாக்கண்டேன்!


மிருகமென மனிதன் மாறாமிலிருக்க


மனிதனெப்படி மனிதனாகக் கனாக்கண்டேன்!


பசியில் வாடும் உள்ளம் கண்டு


உள்ளத்தில் நல்லெண்ணம் பிறக்கக் கனாக்கண்டேன்!


என்கனவது பொய்க்காதுவெனக் கருதி


எல்லோரும் வாழும் நிலையெதுவெனக் கனாக்கண்டேன


கருத்துகள் இல்லை: