தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/07/2011

முதலாளிகளின் கேவல விளையாட்டு.....

இந்தியா பத்தாகப் பிரிக்கப் படும்.
தேசத்திற்காக ஆடும் போது இல்லாத ஆர்வம்
முதலாளிகளுக்காக ஆடும் போது வரும்.
ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு முதலாளியின் கையில்
வீரர்கள் அணியும் ஜட்டி முதல்
முதலாளிகளின் விளம்பரங்கள்.
அவன் விளம்பரத்தைக் காண,
அவனுக்கு பணம் கொடுத்து
கைத் தட்டி வரவேற்க ரசிகர்கள்.
நாட்டில் நடக்கும் வேறெந்த பிரச்சினைகளிலும்
கவனம் செலுத்தாமல் தொலைக் காட்சியில்
புகுந்து களிப்புறும் நம் மக்கள்.
அதைப் பயன் படுத்தி மற்றப்
பிரச்சினைகளை மூடி மறைத்து
நீர்த்து போக செய்யும் நம் அரசு
அவன் கோடிக் கணக்கில் ஊழல்
செய்யவும் தனது வருமானத்தைப்
பெருக்கிக் கொள்ளவும்
மக்களை மடையர்களாக்கி செவ்வனே
அரசியல் செய்யும் ஒரு சித்து
விளையாட்டு இந்த ஐ.பி.எல்
சோற்றுக்கு வழியில்லாத தேசத்தில்
எதற்கடா இந்த கொழுத்த
முதலாளிகளின் கேவல விளையாட்டு(!?)

கருத்துகள் இல்லை: