தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/27/2011

என் பார்வையில் ' கோ '



தமிழ் சினிமாவின் சமீபத்திய தியேட்டர் கூட்ட வறட்சியை போக்க வந்திருக்கும் முதல் கோடைக்காலப் படம் “கோ”. ஓளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது படம். முதல் படத்தில் டீசண்டாய் இருந்து கொண்டு கந்துவட்டி மேட்டர், இரண்டாவது படத்தில் கள்ளக்கடத்தல் பின்னணி. இதில் அரசியலும், பத்திரிக்கை போட்டோகிராபரின் வாழ்க்கையை ஒட்டிய பின்னணி. மூன்றிலும் ஒவ்வொரு கதை களன். முந்தைய படமான அயனின் வெற்றியும், ஹாரிஸின் என்னவோ ஏதோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.ஒரு தின இதழின் போட்டோகிராபரான ஜீவாவையும், அதன் ரிப்போர்டர்களான கார்த்திகா, பியாவை சுற்றி நடக்கும் கதை. இவர்களின் செய்லால் தமிழ் நாட்டின் ஆட்சியையே மாற்றி அமைக்க எப்படி முடிகிறது? என்பதை முடிந்த வரை சுறுசுறுப்பான திரைக்கதையில் சொல்ல நினைத்ததை வெற்றிகரமாக சொல்லி இருக்கின்ற்னர்.படத்தில் வரும் டைட்டிலை பார்க்கும்போது மிகவும் வித்தியாசமான கிரியேட்டிவிட்டி தெரிகிறது


படத்தின் முதல் காட்சியான பேங்க் கொள்ளைக்காட்சியில் பற்றிக் கொள்ளும் திரைக்கதை, மெல்ல சூடு பரவி, எதிர்கட்சி தலைவர் கோட்டாவிடம் பற்றி எரிய ஆரம்பித்து, ப்ரகாஷ்ராஜிடம் வந்து நின்று எரிய ஆரம்பித்து சட்டென அணைந்துவிடுகிறது. நடுவே கொஞ்சம் நேரம் என்ன ஏது என்று புரியாமல் அலைபாய்ந்துவிட்டு, அஜ்மல் கட்சி மீட்டிங்கில் வெடித்தெழுகிறது. அஜ்மல் கேரக்டரின் அதீத முக்யத்துவமும், ஜீவாவின் ந்டிப்பும் சபாஷ் சொல்ல வேண்டியவைதான்.
முக்கியமாய் பத்திரிக்கையாளர்களான சுபா, கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் பின்னணி நன்றாகவே தெரிந்திருக்கிறவே படம் வெற்றிக்கு பக்க பல்ம்.


ஜீவாவுக்கு மிக இயல்பாய் பொருந்துகிறது இந்த போட்டோகிராபர் கேரக்டர். சம்பவங்கள் நடக்கும் போது சடாலென கேமராவை தூக்கிக் கொண்டு ஒடும் பரபரப்பும், போட்டோ எடுக்கும் லாவகமும் படு இயல்பு. கார்த்திகாவிடம் இவருக்கு இருக்கும் நெருக்கத்திற்கும், பியாவிடம் இருக்கும் நெருக்கத்திற்குமிடையே இவரிடம் தெரியும் பாடி லேங்குவேஜ் ரசிக்க வைக்கிறது.
கார்த்திகாவின் கண்கள் பல பேரை தூக்கமிழக்க செய்யப் போகிறது. நல்ல வாளிப்பான உயரம். ஆனால் நடிப்பதற்கு பெரியதாய் ஏதும் வாய்ப்பில்லை என்றாலும், பியாவின் காதலுக்காக தன் காதலை கட்டுப்படுத்திக் கொள்ளும் காட்சிகளில் ரசனை.
பியா அவுட் ஸ்போக்கன் சென்னைப் பெண். பரபரவென காதலை கொட்டிக் கவிழ்த்து, மடிந்து போகிறார். இவரிடமிருக்கும் துள்ளல் இவர் போனதும் போய்விடுவது குறையே.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு தரம். முக்கியமாய் அந்த ஓப்பனிங் சண்டை சேசிங் காட்சிகளும், ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது. க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் அந்த மொட்டை மாடி ஜியாக்கிரபியும், அதை படமெடுத்த விதமும், விறுவிறுப்பு. அதற்கு இணையாய் ஆண்டனியின் எடிட்டிங்கையும் குறிப்பிட வேண்டும்.
ஹாரிஸின் பாடல்களில் மூன்று ஏற்கனவே ஹிட்லிஸ்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கியமாய் அந்த என்னவோ ஏதோ க்யூட் மெலடி. ஆனால் அந்த பாடலின் படமாக்கம் மிகவும் சொதப்பிவிட்டதாய் தான் தோன்றுகிறது. அந்த ஹசிலி பிஸிலியின் மெனக்கெட்டதை இந்த பாடலுக்கு மெனக்கெட்டிருக்கலாம். பின்னணியிசை வழக்கப்படி ஆங்காங்கே சுட்டுத் தெளித்திருக்கிறார்.


கதை திரைக்கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபரவென ஓடும் படத்திற்கு பெரிய பலமே திரைக்கதைதான். . படம் பார்ப்பவர்களை திசை திருப்ப, எதிர்கட்சி தலைவர், முதலமைச்சர், அஜ்மல் என்று மூன்று பக்கமும் திரைக்கதை ஓடுவதால், விறுவிறுப்பு கூடுவதை தவிர்க்க முடியவில்லை. . நக நக பாடலில் ஜெயம்ரவி, ஹாரிஸ், சூர்யா, கார்த்தி, ஜீவா என்று நட்சத்திர பட்டாளங்களை ஆடவிட்டிருப்பது இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் அதில் கல்யாணராமன் கெட்டப் சிம்பு போல ஒரு கேரக்டரை உலவ விட்டிருப்பதில் ஏதேனும் உள்குத்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படத்தின் கதையை தெரிந்து கொண்டு ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதே வேலையில் எலக்‌ஷனுக்கு பிறகு வெளியிட்டதில் இருக்கும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டத்தான் வேண்டும். இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு சரியான ப்டம் ,இளைஞர்களுக்கு சரியான பாடம் .

பெரியள்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

கருத்துகள் இல்லை: