தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/01/2011

விநாயகர் சதுர்த்தி




வினைய்களை கலைவான் விநாயகன் என்பார்கள் !!! நம் முன்னோர்கள் அதனால் தான் விநாயகர் சதுர்த்தி அன்று நாம் நம் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு அருகம்புள்ளும் ,அச்சு வெள்ளமும் வெள்ளை எருக்கம் பூவும் சாத்தி கொழுக்கட்டை ,மோதகம் மற்றும் அவள் பாயசம் போன்ற பலகாரங்களை படைத்து ஒளவையார் இயற்றிய விநாயர் அகவல் மற்றும் திருமூலர், போன்ற பெரியவர்கள் பாடிய பாடல்களை படித்தும் பாடியும் கணபதியை வழிபட்டு அக்கம் பக்கத்தில் உள்ள அனைவருக்கும் பிரசாதங்களை கொடுத்து எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்ந்து வந்தோம். ஆனால் இப்போது காலபோக்கில் விநாயகர் சதுர்த்தி என்றால் அரசு விடுமுறை பள்ளி, கல்லுரி, தனியார் நிறுவனங்கள் என்று அனைத்தும் விடுமுறை இந்த நாளில் தொலைக்காட்சியிலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திரைக்கு வந்து சில வாரங்களே ஆன என்று ஆரம்பித்து அனைத்து தொலைகாட்சியிலும் சிறப்பு நிகழ்ச்சி என்று நம் மக்களை வேறு எந்த பக்கமும் திரும்ப விடாமல் வீட்டினுள் பூட்டிவிடுகின்றனர் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் இதிலே மூழ்கிவிடுகின்றனர். எது எப்படியோ அது அது அவரவர் வச(வி)தி என்போம். நாம் இன்று(நாளை) காலை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கோவில்களில் நடக்கும் ஆராதனைகளில் நாமும் கலந்து கொள்வோம் அர்ச்சனை செய்து வழிபடுவோம் நம்மால் முடிந்த நற் காரியங்களை பல செய்வோம். நம் வாழ்வில் ஏற்படும் தடைகளும் துயரங்களும் போக தும்பிக்கை உடையோனை நம்பிக்கையுடன் பிரத்திப்போம்
கர்ம வினைகளாலும் காரிய தடைகளும் அகள ஒளவையார் இயற்றிய இவ் விநாயகர் அகவலை தினமும் காலை மாலை இரு வேளையிலும் படித்து அருள் பெறுங்கள்.
விநாயகர் அகவல்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
-ஒளவையார்
ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
-திருமூலர்

எண்ணம் :கோவை ராமநாதன்

1 கருத்து:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

விநாயகர் தின வாழ்த்துக்கள்....