தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/14/2011

கவிதையே தெரியுமா?


யாரோ வீசி ஏறிந்து
என் கைகளுக்குள்
சிக்கிய காகிதம்
காலியாகவே இருந்தது


அருகில் இருந்தவரிடம்
பேனா வாங்கினேன்
சில கவிதைகளாவது
எழுதி விடலாமே என்று.


அருகில் இருந்தவன்
முறைத்துப் பார்த்தான்
கவிதையாகவே மதிக்கவில்லை
என் கவிதையை.


ஏனென அதட்டிய, என்
கைகள் முழுவதிலும்நடுக்கங்கள்.
என் பார்வையிலும்
அவன் முகத்திலும்
மலர்ந்த கோபங்கள்.


கற்பனைதான் என்று
நினைக்கையில்-அவன்
காறி துப்ப நினைத்த எச்சில்,
உதிர்ந்தது என் காகிதத்தில்


கோபமாய் இருந்தாலும்
கவிதையே
எழுத முடியவில்லை


எனினும் மனதில் ஒரு
வருத்தம்.
அவன் போலவே,நாளை
உலகம் முழுவதும்
உமிழப்போகும் எச்சிலின்
நிலை குறித்து!

கருத்துகள் இல்லை: