தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/10/2011

இறைவன் தந்த வரம்



வரம் ஒன்று தந்தான்

இறைவன் இலவசமாக

அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய

காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே

கனவாகியது எனக்கு....


வேதனை என்ற சொல்லுக்கு

வரை விலக்கணம் இதுதான் எனக்
கூறியதுகன்னங்களின் ஓரம்

காய்ந்துபோன கண்ணீர்த்துளி..


என்னைவிட்டு புன்னகையும் பொன்நகையும் தொலை தூரம்
தொலைந்து போனதால்

பொன்நகையில் பார்ப்பதை விட என்னை

புன்னகையில் பார்ப்பது

பகல் நேர பௌர்ணமிகளாய்

தோன்றியது சிலருக்கு ....

என்னை நோக்கி அனுதாபம்

அடைந்த சில உறவுகளை

மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்

காயம் கண்ட இதயமதை மீண்டும்

காயப்படுத்திய நட்பு களை இன்னும்

ஏற்கவில்லை என் மனம் ஏனோ?


காலங்களும் கரைந்து சென்றது

காட்சிகளும் மாறியது

கனவுகள் போல

கண்கள் கண்ட கனவுகளும்

கலைந்து சென்றது

கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு

விடை தேடுகின்றேன்

நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது

இறைவனோ மௌனம் காக்கின்றான்

கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

நான் இங்கே பேதலிகின்றேன்
வரும் கால வாழ்வை எண்ணி

யாரறிவார் என்  மனதை......

கருத்துகள் இல்லை: