தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/22/2011

உன்னை எண்ணி


மின்னலை 5CM இடைவெளியில் பார்த்தேன்..
நீ பளிச்னே சிரித்தபோது...

உன்னை பற்றி எழுதும் போது பக்கத்து வீட்டு பெண்கூட வெட்கப்பட்டது...
உனது வர்ணிப்பை பார்த்து...!

தடம்புரளாமல் சென்ற தண்டவாள இரயில் நீ...
உனக்காக சிலை வைக்க சொல்லி இருக்கிறேன் மவுண்ட்ரோட்டில்...

எப்பொழுதும் சோர்வாக இருக்கும் நீ என்ன.?
பைசாநகர சாய்ந்த கோபுராமா..!

உனது திமிர் ஈபிள் டவரை போல வளர்ந்து கொண்டே போகிறது...

உனது தரத்தை ஆராய்ந்தால்  ISI நிறுவனமே ஆடிப்போய்விடும்.. 
அப்படியோரு அதிசயம் நீ..

அமாவாசை இருட்டிலும் அழகாய் தெரிபவளே ..
.எப்பொழுது வருவாய் காதல் என்னும் வெளிச்சத்தில்...

பெண் என்பவள் பூவிற்கு சமமாம்..?
நீ என்ன புயலாய் வீசுகிறாய்..!

சந்தோசமாய் வாழ ஆசைதான் எப்படி..
.நீ இல்லாமல் வாழ்வது?

வசந்தங்கள் வாழ்த்தும்போது உனது கிளையின் பூவாவேன்...
இலையுதிர் காலமுழுவதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்..!

உறங்கும் போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்கிறேன்...
நெருங்கி வந்து பேசும்போது உச்சி வேர்க்கிறேன்..
உன்னை எண்ணி என் மேனி உருக..உருகி உருகி நூலானேன்....!

கருத்துகள் இல்லை: