தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/18/2010

நரேந்திரனின் கனவை நினைவாக்க ....வாருங்கள் தோழர்களே....!

 

நீங்களும் அந்த 100 பேரில் ஒருவர் தான், வாருங்கள் முகம் தெரியா தோழர்களே....

இளமை சொட்டும் 100 இளைஞர்களை தாருங்கள் அழகான இந்தியாவை உருவாக்கி தருகிறேன்,என விவேகானந்தர் கூறியதை உண்மையாக்குவோம் வாருங்கள்.


இன்னும் எத்தனை நாளுக்கு தான் போர்க்களத்திற்கு வெளியே நின்று  வெறித்தனம்  பேசுவது?, போர்க்களத்தில் குதிப்போம், வெற்றியா?,தோல்வியா? என்பதை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்,வெளியில் நின்று வேய்க்கானம் பேசுபவன் நானல்ல, வேங்கையாய் போரிடும் போர்வாள் நானென்று நிரூபிப்போம் வாருங்கள் முகம் தெரியா என் தோழர்களே...

200 கோடி,300 கோடி என பல கோடிகளை தமிழுக்கு என, தனக்காக செலவு செய்யும் அரசியல்வாதியை பலி சொல்லிவிட்டு , எத்தனை நாளுக்கு தான் கையை கட்டிக்கொண்டு,வாயை பொத்திக்கொண்டு இருப்பது?..நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பட்டினிசாவு, வறுமையில் மரணம் எனும் அவலங்கள் நம் காதுகளுக்குள் மரண இடியாய் இறங்குகிறது ..

சரி என்ன செய்ய வேண்டும் நாங்கள்? என்ற கேள்வியோடு தொடருங்கள் என் தோழர்களே..இங்கே நாங்கள் எழுதிப்போடும் ஒவ்வொன்றும் கூலி வேலை செய்யும் கந்தனையோ, குப்பனையோ போய்சேராது என்று எனக்கு நன்றாக தெரியும், மாறாக நல்ல பணியில் இருக்கும் தனபால்,சதீஷ் ,சேகர் போன்ற தோழர்களை சென்றடையும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை..


இந்த தோழர்களை அனைவருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற கருணை குணம் நிச்சயமாய் இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும், விழிப்புணர்வை பற்றி எழுதும்பொழுதே என்னை உற்சாக படுத்தியவர்கள் அனைவருக்கும், நிச்சயம் புதியதொரு நம் தேசத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதில் ஐயமில்லை..(அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் )

இப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும்பொழுது ஏன் பட்டினிச்சாவு நடக்கிறது?,நியாயமான கேள்வி தான்?..எங்கேயோ ஒரு விளம்பரம் உதவுங்கள் என்றும்,வங்கிக்கணக்கை காட்டி இதில் உங்கள் உதவியை செய்யுங்கள் என்றும் வருகிறது?..உதவி செய்ய தோன்றுகிறது,எப்படி நம்புவது, எப்படி அனுப்புவது என்ற ஏராளமான கேள்விகள் வேகத்தை குறைத்து விடுகின்றன,கடைசியில் அடுக்கடுக்கான சுய பிரச்சனைகளில் மறந்தே விடுகிறோம் ..இது தான் உண்மை நிலை, கருணை குணம் இருக்கிறது, உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது,ஆனால் இவைகள் அழிந்துவிடுகின்றன்...


போரிடும் திறமை இருக்கிறது, தணியாத தாகம் இருக்கிறது நமக்கான சரியான களமும், சரியான ஆயுதமும் தான் இல்லை.களத்தையும், ஆயுதத்தையும் நான் காட்டுகிறேன், நாம் ஒன்றாய் போரிடுவோம்..போர் உக்தியையும் உங்களுக்கு கூறுகிறேன்..


சமீபத்தில் என் அலுவலகம் அருகில் மதிக்கத்தக்க ஒரு பெரியவரும்,ஒரும் இளைஞனும் ஒரு விசிட்டிங் கார்டு ஒன்று என்னிடம் தந்தனர் , அதில் 24/7 இலவச இரத்த தானம் போன் செய்தால் போதும் என அச்சிடப்பட்டு அதன் எண்ணையும் ,பெயரையும் தந்துள்ளனர்.அதை பார்த்த எனக்கு பெருமையாகவும் ,தலைக்குனிவாகவும் இருந்தது .ஏனெனில் இதுவரை 6தடவைக்கு மேல் ரத்தம் வழங்கியுள்ள என்னால் எப்படி இதுமாதிரி யோசிக்க முடியவில்லை என்று அப்போது என் சிந்தனையில் வ்ந்தது இதுதான்

போரிட தயார் என்று துடிக்கும் இளைஞர்களை முதலில் ஓன்று சேர்ப்போம், ஒன்று சேர்ந்த இளைஞர்களுக்கு களத்தை காட்டுவோம் ..


ஒன்று சேர்த்த இளைஞர்கள் செய்ய வேண்டியது ரொம்ப எளிதான ஒன்று

ஒன்று சேர்ந்த இளைஞர்கள் என்ன பண்ணப்போகிறோம் என்றால் எங்காவது பட்டினியால் சாகும், வாழ பாதை தேடிக்கொண்டு இருக்கும் மனிதர்களை கண்டுபிடித்து குறித்து கொள்ள வேண்டும்,(குறித்து கொள்ள வேண்டும் என்றால் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துகொண்டு போயி தேடணும்னு அவசியம் இல்லை தோழர்களே, நீங்கள் நடக்கும் பாதை, சாலையோரம்,ரயில் நிலையங்கள், அங்காடி கடையோரம் என்று உற்று நோக்கினால் போதும், அவர்களை பற்றிய விவரங்கள் அறிய வெறும் 5 நிமிடங்கள் போதுமானது).


எப்பொழுதும் ஒரு திட்டம் சரியாக அமைய வேண்டும் என்றால், நிச்சயம் இரண்டு முக்கியமானதை கவனிக்க வேண்டும்,
1).தேவைப்படுபவை
2).தடைகள் ஏற்படுத்துபவை


தேவைப்படுபவை


1).வலுவான அறிவு சார் மனிதர்கள்


2). சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் விழிப்புணர்வூட்டும் செய்திகள் பரிமாற்றம்
3).மாதம் ஒரு நாள் தான் உண்ணும் ஒர் வேளை உணவை ஒரு பசித்த ஏழைக்கு ஒதுக்கும் குணம்


தடைகள் ஏற்படுத்துபவை


1).நேரம் ஒதுக்க முடியாமை,


(குடும்பஸ்தர்கள்- மாதத்தில் 29 நாட்கள் உங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)

(காதலர்கள்- மாதத்தில் 29 நாட்கள் உங்கள் காதலிக்காக/காதலனுக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)


(பணிபுரிபவர்கள் - மாதத்தில் 29 நாட்கள் உங்கள் பணிக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)


(மாணவர்கள் - மாதத்தில் 29 நாட்கள் உங்கள் படிப்புக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)

2).கருத்து வேறுபாடு


(இங்கே யாரும் தலைவனும் இல்லை, தொண்டனும் இல்லை, அனைவரும் ஒன்றே)


அது தாங்க நான் சொன்ன போர்க்களமும், போர்களும்....


ஆனால் ஒன்று மட்டும் நன்றாய் தெரியும், நாம் ஒன்று சேர்ந்தால் ஒரு பட்டினிச்சாவையும், ஒரு வறுமைச்சாவையும் தடுக்க முடியும் மாதம் ஒரு முறை...

நீங்களும் அந்த 100 பேரில் ஒருவர் தான், வாருங்கள் முகம் தெரியா தோழர்களே,கண்முன் நடக்கும் சாவை கைகோர்த்து தடுப்போம்.... ....


குளிர் அறையில் அமர்ந்து இவர்களால் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கும் மூடர்களின் முகத்தில் அறைந்து சொல்வோம் நாங்களும் விவேகானந்தர் கூறிய அந்த 100 பேரில் ஒருவன் என்று.....

இடுக்கை :கோவைராமநாதன் போர்க்(களம்)குணம்,      நன்றி : அந்த பெரியவர்

கருத்துகள் இல்லை: