தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/03/2010

நமது வாசகரின் நகைச்சுவை பகுதி



1. படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....

ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’னு...

(லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்)


2) நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...


நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?


நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!


3) வாரணம் ஆயிரம்... மெட்ராஸ் பாஷையில.....


இந்தாமே மால்னி! நாந்தாமே கிஷ்ணன்! நா உன்னாண்ட இத்த


சொல்லியே ஆவுனும்... ஏன்னா நீ அவ்ளோ சோக்காக் கீற! இங்க எந்த


ஒரு பேமானியும் இவ்ளோ சோக்காப் பாத்துருக்க மாட்டான்! அப்பால நான்


உன்ன டாவடுக்கிறேன்!!


4) ஒரு வியக்க வைக்கும் உண்மை சம்பவம்.....


1872 ஆம் ஆண்டு X ஏர்லைன்ஸ் விமானமும், Y ஏர்லைன்ஸ் விமானமும்


நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன! 1976 ஆம் ஆண்டு அதே


கம்பெனியின் மற்ற விமானங்கள் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக்


கொண்டன!


ஒருவராலும் காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.


கடைசியில் 2009 ஆம் ஆண்டு நாஸா அதற்காண காரணத்தைக்


கண்டுப்பிடித்தது!


அது என்னன்னா....?
?
?
?
?
?
“ஒரு தடவ முட்டிட்டா கொம்பு முளச்ரும்ல?!?”
(நோ...நோ... அழக்கூடாது! )


5) பிராண்டி + தண்ணீர்: கிட்னியைப் பாதிக்கிறது..


ரம் + தண்ணீர்: குடலைப் பாதிக்கிறது..


விஸ்கி + தண்ணீர்: இதயத்தைப் பாதிக்கிறது..


ஜின் + தண்ணீர்: மூளையைப் பாதிக்கிறது..


தண்ணீரில்தான் எதோ பிரச்சனை! அதனால் தண்ணீரைக் கலக்காதீர்கள்!!


6) கொஞ்சம் ஆங்கிலத்தைப் பார்ப்போம்...


A) RHYTHM is the longest word without vowels...


B) Word GIRL appears only once in the Bible...


C) Only word that has 2 letters each used 3 times is DEEDED...


D) The only 15 letter word can be spelt without repeating a letter is


UNCOPYRIGHTABLE


7) ஒரு வயதான மனிதரின் டி-ஷர்ட்’ல் எழுதி இருந்த அழகான


வாசகம்:


“I am not 60 Years old! I am Sweet 16 years with 44 years Experience”


அதுதாங்க தன்னம்பிக்கை என்பது!


8) “லவ்" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....
ஆனா, “லவ்" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்.....
--தேவதாஸ்..


9) ஆசிரியர்: பசங்களா! யானை பெருசா? இல்ல எறும்பு பெருசா?
மாணவர்கள்: சார்! அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட்
ஆப் பெர்த் வேணும்....


10) தன்னை அறிந்தவன்
”ஆசை" படமாட்டான்...


உலகை அறிந்தவன்
”கோப" படமாட்டான்....


இதை இரண்டையும் உணர்ந்தவன்
”கஷ்டப்" படமாட்டான்.....

 நன்றி : திரு.மோகன்ராசு -கோவை

கருத்துகள் இல்லை: