முன்னால் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் ஆபிரகாம் லிங்கனும், ஜான் எப். கென்னடியும். இதைத் தவிர இவர்களுக்குள் சில நம்பமுடியாத ஒற்றுமைகள் உள்ளன. நம்பினால் நம்புங்கள்.....
அமெரிக்க காங்கிரஸ் கீழ்சபைக்கு லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1846.
அதே இடத்துக்கு கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1946.
லிங்கன், கென்னடி இரண்டு பெயர்களும் ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்களை கொண்டுள்ளன.
வெள்ளை மாளிகையில் வசித்த போது இரண்டு அதிபர்களின் மனைவியரும் தங்கள் மகனை இழ்ந்தனர்.
இருவரும் கொல்லப்பட்டது வெள்ளிகிழமையில் தான்.
இருவரும் தலையில் சுடப்பட்டு இறந்தனர்.
லிங்கன் கொல்லப்பட்டது போர்டு திரையரங்கில்.
கென்னடி கொல்லப்பட்டது போர்டு காரில்.
லிங்கனின் செகரட்டரி பெயர் கென்னடி.
கென்னடியின் செகரட்டாரி பெயர் லிங்கன்.
இருவருமே தென் பகுதி அமெரிக்கர்களால் (Southern part of USA) கொல்லப்பட்டனர்.
இருவருக்கு அடுத்து பதவிக்கு வந்தவர்களும் தென் பகுதியைச் சார்ந்தவர்கள்.
லிங்கனுக்கு அடுத்து பதவிக்கு வந்தவர் ஆன்ட்ரூ ஜான்ஸன்.
கென்னடிக்கு அடுத்து பதவிக்கு வந்தவர் லின்டன் ஜான்ஸன்.
ஆன்ட்ரூ ஜான்ஸன் பிறந்த ஆண்டு 1808.
லின்டன் ஜான்ஸன் பிறந்த ஆண்டு 1908.
லிங்கனை கொன்ற ஜான் வில்கின்ஸ் பூத் பிறந்தது 1839ல்.
கென்னடியை கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் பிறந்தது 1939ல்.
இரு கொலையாளிகளின் பெயர்களும் மூன்று வார்த்தைகளையும் பதினைந்து எழுத்துக்களையும் கொண்டிருந்தன.
பூத் திரையரங்கில் இருந்து தப்பி ஓடி குடோனில் பிடிபட்டான்.
ஆஸ்வால்ட் குடோனில் இருந்து தப்பி ஓடி திரையரங்கில் பிடிபட்டான்.
நம்பமுடிகிறதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக