தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/18/2011

லாபம் எட்டும் தந்திரம்



முதலாளித்துவ நிறுவனங்களின் ஒரே நோக்கம் லாபம் சம்பாதிப்பதுதான்.அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவதற்காக எத்தகைய வழிமுறைகளையும் அந்த நிறுவனங்கள் கையாளும்.


பன்னாட்டு நிறுவனங்கள் ஊதியத்தை அள்ளிக் கொடுப்பதாக பீற்றுகிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் லாபம் எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து யாருக்கும் கவலையில்லை. தங்கள் பொருள்களை விற்க விளம்பரத்திற்காக அவர்கள் செலவிடும் தொகை பிரமிப்பூட்டுகிறது.






இந்த விளம்பரச் செலவை அவர்கள் நுகர்வோர் தலையில்தான் கட்டுகிறார்கள் என்பது இன்னமும் பலருக்கு புரியவில்லை. தங்கள் பொருள்களை விற்க அவர்கள் எந்தவிதமான தந்திரங்களையும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்துவார்கள்.






சமீபகாலமாக சேகுவேராவை அவர்கள் தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.சேகுவேரா மாபெரும் புரட்சி வீரர். கியூபா புரட்சியில் அதிபர் காஸ்ட்ரோவுடன் இணைந்து செயல்பட்டவர். தனக்கு அளித்த அமைச்சர் பதவியை உதறிவிட்டு தென் அமெரிக்க நாடுகளில் புரட்சியை விதைக்க புறப்பட்டவர்.






பொலிவியாவின் காடுகளில் புரட்சிக் கூட்டத்தைத் தயார்படுத்தியவர். அமெரிக்காவின் கண்களில் ஊசியாக தைத்தவர். அவரை கொலை செய்ய அமெரிக்கா தனது உளவு நிறுவனமான சிஐஏவுக்கு உத்தரவிட்டது.பொலிவியாவில் அவரைக் கண்டுபிடித்த சிஐஏ மாறுகால் மாறு கை வாங்கி கொடூரமான முறையில் கொன்றது. அவரது உடலைக்கூட கியூபாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. அவர் புதைக்கப்பட்ட இடம்கூட தெரியவில்லை.






கடந்த ஆண்டு, சென்னையில் போர்டு இந்தியா கார் நிறுவனம் தனது புதிய கார்களை அறிமுகப்படுத்த செய்தியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
அப்போது அது நிருபர்களுக்கு கொடுத்த விபரக் குறிப்புகள் அடங்கிய அழகிய பைலில் விலையுயர்ந்த காகிதத்தில் சே குவேராவின் படமும் அச்சிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: