தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/01/2012

குடி குடியை கெடுத்தது

அன்புக்கரசு நல்ல குடும்பத்தில் பிறந்தவன் B .A . பட்டாதாரி அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதி எந்த தேர்விலும் அவன் தேர்ந்து எடுக்கப்படவில்லை இப்படிதான் ஒருமுறை தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்வு வரை வந்து அதில் எல்லா கேள்விக்கும் பதில் சொன்னான் ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியவில்லை ,எவ்வளவு தரமுடியும் ? அந்த கேள்வி . மனம் உடையாமல் தன் அம்மா அணிந்திருந்த காது தொங்கடத்தை வாங்கி அடகு வைத்து சின்ன பெட்டிக்கடை வைத்து அது பலசரக்கு கடையாகி மாறி வளர்த்து வருகிறான் அந்த நேரத்தில் அவனுக்கு திருமணம் முடித்து வைக்கிறார்கள் அழகான குணமுள்ள பெண் மனைவியாக வருகிறாள் ..வியாபாரமும் அதிகமாக நடக்கிறது .அன்புக்கரசுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது சந்தோஷமாக குடும்பம் வாழ்கிறது இபோதுதான் கடை உரிமையாளர்களுக்கு ஒரு பார்ட்டி கப்பெனி காரர்கள் அளிக்கிறார்கள் அதில் விளையாட்டாக ஆரம்பமான குடி ...மீண்டும் அவன் மனைவி கர்ப்பமாகிறாள் இரண்டாவது அவனின் வாரிசு ஒரு ஆண் குழந்தை பிறந்தது ...........
மறுநாள் மனம் அதை தேடியது சரி இன்னக்கி மட்டும் கொஞ்சம் குடிப்போம் ..இன்று இன்று என்று தினமும் ஆனது மதுக்கடை நண்பர்கள் அதிகமானார்கள்
அன்று சற்று போதை அதிகமானதால் தெருவில் அரை நிர்வாணமாக கிடந்தான் அதுவரை அரசல் புரசலா தெரிந்த விஷயம் ஊருக்கே தெரிந்தது ஊருக்கு தெரிந்தால் வீட்டிற்கு தெரியாமல் போகுமா ... அவனின் அம்மாவின் உசுரே போய்விட்டது பாலுட்டிய நெஞ்சு .பஞ்சு, பஞ்சு ஆனது ...மனைவின் மஞ்ச தாலி விஞ்சி விஞ்சி அழ ஆரம்பித்தது
"அம்மா இனிமேல் சத்தியமா குடிக்கமாட்டேன்" ...அடியே நம்ம குழந்தை மீது சத்தியம் இனி நான் குடிக்க மாட்டேன் "
அம்மாவிடமும் மனைவியிடமும் சத்தியம் செய்தான் ....அப்போது மகள் பள்ளியில் படிக்கும் அவள் தோழி
ஓடிவந்து "பாட்டி ,ஆண்டி உங்களை டீச்சர் பள்ளிக்கூடத்திற்கு வரச்சொன்னாங்க வாங்க" என்று மூச்சி வாங்கி சொன்னாள் .என்னமோ ஏதோ ஓடுகிறார்கள் அன்புக்கரசு, அவன் அம்மா,அவன் மனைவி பள்ளிக் கூடம் நோக்கி
"ஒன்னுமில்லங்க அவள் பெரியமனிஷியாகிட்டா கூட்டீட்டு போங்க " கிளாஸ் டீச்சர் சொன்னாங்க
சந்தோஷமாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்
அன்புக்கரசு மூன்றுநாள் நல்லாத்தான் இருந்தான் கைகள் ஆட ஆரம்பித்தது மனம் போதையை நாடியது
குடிகார நண்பர்கள் "என்னடா மச்சான் நல்ல விஷயம் உன் வீட்ல நடந்திருக்கு என்ன ட்ரீட் கொடு "குழப்பிய மனசில் போதையை விதைத்தனர் திரும்ப குடிக்க ஆரம்பித்தான் இதை பொறுக்கமூடியாத அவனின் அம்மா சரியாக சாப்பிடவிலை இதனால் நாளுக்கு நாள் உடம்பு சோர்வாகி மரணம் கொள்கிறாள் அவன் அம்மா ....
பாவம் அவன் மனைவி கடையும் பார்த்து வீட்டு வேலையும் பார்த்து முடியாமல் தன் மகளை 12 ம் வகுப்போடு நிறுத்திவிட்டால் மகன் மட்டும் பள்ளி படிப்பை அரசு பள்ளியில் படிக்கிறான் .பள்ளி விட்டு வரும்போதல்லாம் தன் புத்தக பையோடு ,போதையில் ரோட்டில் கிடக்கும் தன் அப்பாவை சுமந்துவருவான்.ஊரில் எல்லோரும் அவனை பார்த்து எப்படி இருந்த குடும்பம் இப்படி குடியால் கெட்டுபோய்விட்டது சொல்லுவார்கள் ....
தன் மாமியாரும் போய் சேர்ந்து விட்டால் புருஷனும் இப்படி ஆகிவிட்டான் கடையில் சரக்கும்மில்லை சரி இருக்கிற நகையை வைத்து தன் பொண்ணுக்கு கல்யாணத்தை முடித்து விட வேண்டியதுதான் என எண்ணி பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடுகிறாள் .....குடிகாரன் வீட்ல சம்மந்தமா வேண்டவே வேண்டாம் என்று யாரும் வரமாட்டுகிறார்கள்
இதனால் இருக்கிற பணம் காலியாகிறது இதனால் அவன் மகனின் படிப்பபை நிறுத்தி பண்ணைக்கு வேலைக்கு போகிறான் ...வறுமையிலும் வட்டிக்கு வாங்கியாவது குடிக்கிறான் அன்புக்கரசு இப்படி போகும்போது கணவன் மனைவிக்கு இடையே சண்டை பின்பு தன் மனிவியின் மீது சந்தேகம் கொள்கிறான் ....
பண்ணையில் சம்பளம் வாங்கும்போது அந்த பையனை பார்கிறார் பண்ணையார் "ஏண்டா பள்ளிக்கூடம் போகல "என்றார் நடந்த நிகழ்வுகளை சொன்னான் அந்தப்பையன் "சரி உங்க அம்மாவை என்னை வந்து பார்க்க சொல்"
வீட்டிற்கு வந்த உடன் "அம்மா உன்னை பண்ணையார் வரச்சொன்னார் "என்றான் அவன் பண்ணையாரை பார்க்கசெல்கிறாள் அன்புக்கரசுவின் மனைவி செல்கிறாள் கூட அவளின் மகளும் செல்கிறாள் ..பண்ணையார் "இந்த புள்ளைக்குதானே மாப்பிள்ளை பார்க்கிறாய் எலாம் தெரியும் உன் புருஷன் குடிகாரன் சரி விசயத்திற்கு வருகிரேன்
என் தங்கச்சி பேரனுக்கு பெண் பார்க்கிறார்கள் பண காசு எல்லாம் வேண்டாம் நல்ல பொண்ணா இருக்கணும் உன் பொண்ணு நல்லபொண்ணு அதனால அவனுக்கு கொடு "என்றார் பண்ணையார் காலில் விழுந்து வார்த்தை வராமல் அழுதாள்"சிரிப்போடும் சந்தோசமாகவும் வெளியே வருகிறாள் அன்புகரசுவின் மனைவி அப்போது அன்புக்கரசு சரியான போதையில் வருகிறான் "சந்தோகம் கொள்கிறான் .
மறுநாள் பண்ணையாரும் மாப்பிளை வீட்டாரும் அன்பரசு வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்குப்போது பண்ணையாரின் சட்டையில் பட்ட டீ கறையை சுத்தம் செய்யும்போது அன்பரசு போதையில் வந்து "கண்டபடி பேசுகிறான் "இதனால் பண்ணையாருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது நல்ல தீட்டி விட்டு போய்விட்டார் .
இதனால் மனம் உடைந்த அன்புகரசின் மனைவி தான் மட்டும் இல்லாமல் தனது பிள்ளைக்கும் விஷம் கொடுத்து தானும் மாண்டுவிட்டால் இப்போது அன்புக்கரசுக்கு கல்லீரல் பாதித்து கேட்பாரற்று அனாதையாக கிடக்குறான்
குடி குடியை கெடுத்தது ......................

குறிப்பு : இது உண்மை கதை

கருத்துகள் இல்லை: