தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/17/2012

என்காதல் வலி(மை)யானது





தமிழில் புதிய எழுத்துகளை
கண்டுபிடித்தால் சொல்லுங்கள்
அதில் தேடலாம்

என் காதலின் புனிதத்தை
சொல்லும் வார்த்தைகளை...

அவள் மேல் நான் அப்படி
ஒரு காதல் செய்தேன்.
ஆனால் இப்போது


எல்லாமும் முடிந்து போயிருந்தது
என் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.


அதில் நான் வடித்த
கண்ணீர் துளிகள்
ஒரு கடலையே உருவாக்கியது


எந்த அளவுக்கு 'வழியவழிய'
காதலித்தேனோ
அந்த அளவுக்கு
'வலிக்க வலிக்க' ரணங்களையும்
கொடுத்து விட்டு போனாள் அவள் .


எல்லாமும் முடிந்து போயிருந்தது.
இப்போதும் கூட


தினமும் எங்கள் தெருவில்  பார்க்கிறேன்
எதுவும் நடக்காதது போல
செல்கிறாள் அவள்
எதுவும் அறியாதவனாய் செல்கிறேன் நான்

இடுக்கை : அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: