தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/04/2012

விவேகானந்தரின் நினைவு தினம்





இன்று சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம் , அவரின் கருத்துக்களை பதிவு செய்வதற்கே இந்த பதிவு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜாதிக்கொடுமையும், அரசர் கொடுங்கோன்மையும், அன்னியர் அரசாட்சியும் உங்கள் பலத்தை எல்லாம் போக்கிவிட்டன. உங்கள் முதுகெலும்பு உடைந்து, இப்போது வெறும் புழுக்களைப் போலாகி விட்டீர்கள். அளவற்ற வலிமை தான் நமக்கு இப்போது தேவை.


இத்தகைய வலிமை பெறுவதற்கு, ” நான் சர்வசக்தி வாய்ந்தவன். சர்வ ஞானம் படைத்தவன்” என்ற இந்த அதி அற்புதமான, நம்மைக் காப்பாற்றக்கூடிய வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள், நம்மை பலவீனர்களென்று சொல்லாதீர்கள். நாம் விரும்பும் எதையும் சாதிக்க முடியும்.

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிறது

கருத்துகள் இல்லை: