தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/14/2012

மனிதர் தாம் உண்டோ

இதுவரை நான் யோசித்ததில்லை...


ரோட்டோரத்தில் அரை ஆடையில் கிடக்கும்

என் அம்மா வயதுள்ளவளைப்பற்றி..!

பிளாட்பார படிக்கட்டில் அண்ணா காசு கொடு

என்ற அனாதை சிறுமியைப்பற்றி..!

தன்னையறியா நிலையில் தாயாகித் திரியும் பைத்தியக்கார

தமிழச்சியைப்பற்றி..!

அன்றொரு நாள் தண்டவாளத்தில் துண்டமாய்

கிடந்த அனாதைச் சிறுவனைப்பற்றி..!

ரோட்டோர சாக்கடைக்குழிக்குள் சுத்தம் செய்யும்

முகம் தெரிய பெரியவரைப்பற்றி

ஆனாலும் ;

சென்று கொண்டுதான் இருக்கிறோம் நாமும்..!

இப்படியாய் சுய நலமே பொது நலமாய்..!

போன வாழ்க்கையில் பிறர் நலம் தான்

நாம் காண வாய்ப்புண்டோ..!

இல்லை ;

மனிதர் தாம் உண்டோ

1 கருத்து:

Eternal Bliss! சொன்னது…

உங்கள் எழுத்துப் பணி செவ்வனே தொடர உள்மார வாழ்த்துகிறேன்!