தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/20/2012

கற்பனை காதல்தான்!


உன் முகத்தின் முகவரியை


அசைபோட்டுப் பார்க்கிறேன்!


பார்ப்போர் எல்லோர் மீதும்


பாசம் வருவதில்லை!




கண்ணில் காண்போர்

எல்லோர் மீதும்


காதல் வருவதில்லை!


ஆனால் எப்படி


உன்மீது மட்டும்


இப்படி ஒரு காதல்!



என் இதயக் கோயிலில்


காதல் கீதங்கள் பாட …


உன் வாசனைகள்


எனைக் கடந்து செல்கிறது!


ம்…! இதயத்தின்


ஒவ்வொரு நிலையிலும்


உன் முகம் பதிகிறது!


உன் நினைவால்…


என் அனுமதிகள் எதுவுமின்றி


கற்பனை நான்கு திசைகளிலும்


உன்னை தேடிப் பார்க்க…


நெஞ்சினில் அன்பையும்


கண்களில் காதலையும்


தேக்கி வைத்த காதலை


உன்னிடம் சொல்லி …


இருந்தும் என்ன பயன்…?




இது கற்பனை  காதல்தான்!

கருத்துகள் இல்லை: