தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/04/2010

நண்பர்களில் ஒரு காதல் -2



" டிவிஸ், டி.சி.எஸ் இரண்டு கிடைச்சா.. எதுலடா சேறது " என்றாள்.


" நான் டி.சி.எஸ்" என்றேன்.


" எனக்கு என்னவோ டிவிஸ் சேறலாம் தோனுது. டி.சி.எஸ் விட பெரிய கம்பேனி இல்லனாலும், சிட்டிக் குள்ள ஒரு ஆபிஸ் வெச்சிருக்கான். சீக்கிறம் வீட்டுக்கு போய்ட்டு வரலாம் "


அவள் என்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வது எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவிற்கு அவள் முடிவு எடுத்துவிட்டு என் கருத்தை கேட்பது எனக்கு பிடிக்காது. அந்த முடிவை எந்த பதில் சொல்லியும் மாற்ற முடியாது. அவள் எப்போதும் இப்படி தான். யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுப்பாள். நான் பேசாமல் அமைதியாக வந்தேன்.


நாங்கள் வீட்டுக்கு திரும்பும் போது நல்ல மழை. முன்பே பஸ்ஸில் ஏறிவிட்டதால் நனையவில்லை. ஆனால், நனையாமல் இருந்தது அவளுக்கு வருத்தம் தான். ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மழை நீரை பிடித்து என் மீது தெளித்தாள். முதல் முறையாக அவள் கண்ணில் காதலை கண்டேன்.


" கை ரொம்ப ஜில்லுனு இருக்கு.... பாரேன்" என்று என் அனுமது கேட்காமலே கை பற்றினாள். அந்த ஸ்பரிஸ்த்தில் அவள் காதலை இன்னும் உணர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தது. மழை விடாமல் பெய்தது. அவளிடம் குடையிருந்ததால், மழையில் நனையாமல் இருவரும் குடைக்குள் நடந்தோம். பஸ்ஸில் அமர்ந்து வந்த நெருக்கத்தை விட குடைக்குள் எங்கள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது.


அவள் தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயந்து குடையில் இருந்து வெளியே வர நினைத்த போது, " ரொம்ப வெட்கப்படாத.. குடைக்குள்ள வாடா" என்றாள்.


இருவரும் அவள் வீட்டு தெரு முனை வரை பேசிக் கொண்டு நடந்தோம்.


" எனக்கு வர போற புருஷன் கூட இப்படி கொட புடிக்க மாட்டான்" என்று வெட்கத்தோடு சிரித்தாள்.


அவள் சொன்னது போல் நான் ட்யூப் லைட் தான். அவளின் காதலை இப்போது கூட புரிந்து கொள்ளவில்லை என்றால் என்னை விட முட்டாள் யாருமில்லை.


மாடியில் போனை நொண்டி கொண்டே யோசித்தேன்.


அவளிடம் காதலை சொல்ல வேண்டும். ஆனால், அதற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்த தேதி குறித்துவிட்டார்கள். "உனக்கு புடிச்ச சொல்லு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று முன்பு அவள் சொன்னது நினைவில் இருந்தது இப்போதும். அவர்களிடம் சொல்லி நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதை விட முதலில் அவளிடம் காதலை சொல்ல வேண்டும்.




போனை நொண்டி முடித்து கீழே வந்தேன். நான் அவளுக்கு போன் பேசலாம் என்று நினைக்கும் போதே, என் செல்போன் மணி ஒலித்தது. அவள் தான்.


செல்போனை எடுத்து, " சொல்லு தங்கம்மா ! " என்றேன்.


"உன்ன அவசரமா பார்க்கனும். என் வீட்டுக்கு வா " என்றாள்.


என்னது என்று கேட்க தோன்றவில்லை. அவள் அழைக்கவில்லை என்றாலும் நானே அவளை பார்க்க வேண்டும் என்று தான் இருந்தேன். பத்து நிமிடத்தில் உடைகளை மாற்றிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றேன்.


முகம் கடு கடுவென கோபத்தோடு இருந்தாள். கணவனுக்காக காத்திருக்கும் மனைவி கோபம் போல் எனக்கு தெரிந்தது.


" ஹாய் தங்கம்மா... என்ன அவசரமா கூப்பிட்ட...." என்றேன்.


அவள் முகம் மாறவில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது.


" ராம் ! ஏன்டா என்கிட்ட உண்மைய மறைச்ச...." என்று கண்ணீருடன் கேட்டாள்.


அவளிடம் காதலை சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு. அவள் என் மேல் எவ்வளவு காதல் இருந்தால், சொல்லாமல் இருந்ததற்கு கண்ணீர் சிந்துவாள்.


" தங்கம்மா ! இதுக்கு போய்யா அழுவுற. நாம மூனு வருஷமா பிரண்ட்ஸா இருக்கோம். நம்ப லவ்வ சொல்லி தான் புரிஞ்சிக்கனுமா..." என்றேன்.


" நான் லவ்வ பத்தி கேட்கல. என் நிச்சய தார்த்தம் பத்தி கேட்டேன் " என்றாள்.


இவளுக்கு எப்படி தெரியும்.நான் வரவில்லை என்று, இவளது (காதலியின் )நிச்சய தார்த்தம் என்றால் கண்டிப்பாக எந்த ஆணுக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கும். நான் மட்டும் விதி விலக்கா ? ஆனால், நம் காதலுக்கு அது தடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நீ காதலுக்கு சம்மதம் சொல்லிவிட்டால், என் நிச்சயதார்த்ததை நிருத்திவிட போகிறேன். என்றாள் அம்மாவிடம் காதலை பற்றி சொன்னால், கொஞ்சம் மன வருத்தம் இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள்,என்றாள்.


நான் மாடியில் அவளை நினைக்கும் போது , அங்கு அவளுக்கு விக்கல் வ்ந்துள்ளது ,அப்போது அவள் அம்மா நான் நிச்சயாதார்த்திற்கு வராததை அவளிடம் சொல்லியிருக்கிறார்.(எங்கள் இருவரில் யாருக்கு விக்கல் வந்தாலும் நாங்கள் தான் நினைப்பதாக)


" தங்கம்மா ! இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. " நாமா நல்ல நண்பர்கள்............


"அது எல்லாம் வேண்டாம். நீ உங்க அம்மா சொல்லுற பையன கல்யாணம் பண்ணிக்கோ..!! " என்றேன்.


பெரிய சுத்தியல் தலையில் விழுந்தது போல் இருந்தது. என் மேல் இருக்கும் காதலை பல சமயத்தில் உணர்த்தியவள் அவள் தான். அவளை காதலிப்பது நூறு சதவீத உண்மை. நான் ஏன் இப்படி மறுத்தேன்.


" என்ன ஆச்சு உனக்கு ? நம்ப லவ்க்கு முன்னாடி அவங்க சொல்லாட்டியும் . இப்ப நினச்சா கூட நிறுத்தலாம்." என்றாள்


" இல்ல வேண்டாம் தங்கம்மா, எனக்கு என்னவோ சரியா வரும்னு தோணல்ல..."


வழக்கம் போல் முடிவு எடுத்து விட்டு என்னிடம் பேசுவாள் ,ஆனால் நான் எடுத்த முடிவு என்று புரிந்தது. அவள் எப்படியாவது முடிவை மாற்றிவிடுவாள். அந்த அளவிற்கு எங்கள் காதல் மீது நம்பிக்கை இருந்தது.


" நீ என்ன லவ் பண்ணா போதுமா. நான் உன்ன லவ் பண்ணவே இல்ல. " என்றேன். கோபத்துடன்.....


நான் சொன்னதை அவள் மட்டுமல்ல படிக்கும் நீங்கள் கூட நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அவளிடம் அதற்கு மேல் பேச எனக்கு விருப்பமில்லை. என்றேன் காதல் இல்லை என்று பொய் சொல்லுபவனிடம் என்ன பேசினாலும் வீண் தான்.என்று அழுதாள், என்னால் மட்டும் எப்படி அழுகாமால் இருக்க முடியும்.அழுதுகொண்டே இனி நாம் பேசி கொள்ள வேண்டாம் ,உனது மொபைலில் எனது எண்ணையும் அழித்து விடு என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் .


அவளுக்கு இரண்டு மாதத்தில் திருமணமும் நடந்தது. சிரித்த முகத்துடன் அவளை மனதளவில் வாழ்த்தினேன். கொஞ்ச தூரம் தனியாக பைக்கில் சென்றதும் என்னை அறியாமல் கண்ணில் நீர் துடைப்பதை பார்த்தேன். நான் மாற எத்தனை நாள் கஷ்டப்பட்டு கிடந்தேன்


" ஸாரி.... தங்கம்மா , நீ வைராக்கியம் உள்ளவள் தான் இதுவரை என்னிடம் பேச நினைக்கவில்லை இல்லை மாறிவிட்டயோ ? எது எப்படியோ உன் நினைவில் வாடும் ,உன் மனதை காயப்படித்தியா.....!!" பாவி அல்ல .......


உன் அன்பு ராம்..........BOSS( இது அவளும் நானும் வைத்த என் பெயர்) [இப்போதும் உன் பிறந்த நாளில் வாழ்த்த முடியவில்லை என நினைத்து எழுதிய எ(ந)மது பொக்கிஷம்]

இடுக்கை , எழுத்து & இயக்கம்   : அ.ராமநாதன்   

கருத்துகள் இல்லை: