தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/29/2010

                   காதல்
பனித்துளிபோல் தூய்மையானது
விஷத்துளிபோல் ஆபத்தானது...
தென்றலைப் போல் இதமானது
புயலைப்போல் கொடுமையானது....


          உனக்காக மட்டும்.....


என் உணர்வில் என்றென்றும்
உன் நினைவே
என் உயிரில் என்றென்றும்
உன் உருவமே
என் விழிகளில் என்றென்றும்
உன் முகமே
என் உச்சரிப்பில் என்றென்றும்
உன் குரலே
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்
நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை நினைப்பதற்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்
இல்லை என்றால்
என்றோ இறந்திருப்பேன்...!


       அது மட்டும்தான் நாம்

பண்பும் பணிவும்
நம்மை நல்லவனாக்கும்
அடக்கமும் ஒழுக்கமும்
நம்மை சிறந்தவனாக்கும்
உண்மையும் உழைப்பும்
நம்மை உயர்ந்தவனாக்கும்
ஆர்வமும் முயற்சியும்
நம்மை வெற்றியாளனாக்கும்
திறமையும் அறிவும்
நம்மை சாதனையாளனாக்கும்
ஆனால்
அன்பும் கருணையும்
நம்மை மனிதனாக்கும்....!


 இடுக்கை :அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: