குவாலியரில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக 200 ரன்களை எட்டி வரலாறு படைத்தார்.
இதற்கு முன் இந்த சாதனையை வைத்திருந்த சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக சுதந்திரக் கோப்பை போட்டியில் சென்னையில் 194 ரன்கள் எடுத்ததும், ஜிம்பாப்வே வீரர் 2009ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக எடுத்த 194 ரன்களும் உலக சாதனையாக இருந்து வந்தது.
இன்று அந்த சாதனைகளை சச்சின் முறியடித்தார். 40 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 3 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 60 ஓவர்களாக இருந்தபோதும் இந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை.
இங்கிலாந்தில் 55 ஓவர்கள் கிரிக்கெட் நடைமுறையில் இருந்தபோதும் ஒருவரும் இந்த மைல்கல்லை எட்டவில்லை. ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதுவும் 36 வயதான டெண்டுல்கர் மீதம் வைத்திருந்த இந்த சாதனையையும் நிகழ்த்தி கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னராக இன்று ஆனார்.
அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கைகள்:
1. சச்சின் டெண்டுல்கர் 200 நாட் அவுட் - 147 பந்துகள் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்கள்
2. கோவென்ட்ர்ய் 194 நாட் அவுட் - 156 பந்துகள் 16 பவுண்டரிகள் 7 சிக்சர்கள்
3. சயீத் அன்வர் 194 அவுட் - 146 பந்துகள் 22 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்
4. விவியன் ரிச்சர்ட்ஸ் 189 நாட் அவுட் - 170 பந்துகள் 21 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்
5. சனத் ஜெயசூரியா 189 அவுட் - 161 பந்துகள் 21 பவுண்டரிகள் 4 சிக்சர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக