தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/12/2010

தற்கொலைக் கவிதைகள்

1.
தற்கொலைக்கு

விஷம் வாங்கிவர பயணிக்கின்றன
என் கால்கள்.
முட்டாள்தனமென்று புத்திசாலிகள்
தூற்றலாம்;

மக்கள்தொகையிலொன்று குறைந்ததென்று
எதிரிகள் மகிழலாம்.

ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகள்
நான்கைந்து அழுகைகள்
சில உதடு பிதுக்கல்கள்

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்
கொஞ்சம் பிரிவுக் கவிதைகள்

இவை எதைப் பற்றிய பிரக்ஞையுமின்றி
நிகழலாம் இவனது
மரணம்.

விஷம் வாங்கிகொடுத்த
வேலைக்காரனென்று நசுக்கப்படலாம்
நானும்.

2.
தோல்விகளால் நிரம்பியவன்
வெற்றிகளால் நிரம்பியவனை
சந்தித்தான்

கொஞ்சம் மெளனம்
கொஞ்சம் வன்மம்
கொஞ்சம் பரிகாசம்
கொஞ்சம் நஞ்சு
இருவருக்கும் இடையே
மிதந்து கொண்டிருந்தது.

கடைசியாக,
அறிவுரைகளுடன் நகர்ந்தான்
வென்றவன்
தோல்வியுடன்.

கருத்துகள் இல்லை: