தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/06/2010

தோழி

வழக்கமாய்

கடற்கரை வளாகத்தில்

நாம் சென்று விட்டால்

எங்கிருந்தோ,

பூக்கூடையோடு வந்து

பேரம் பேசாமல்

முழம் போட்டு அளக்காமல்

கைநிறைய

மல்லிகைப்பூவைக்

கொடுத்துவிட்டு செல்வாளே

ஒரு பெரியம்மா...

அவளை நினைவு இருக்கிறதா...

சமீபத்தில் நான் மட்டும்

கடற்கரை மணலில்

நடந்தபோது

அவள் எதிபபட்டாள்...

என்னை அடையாளம் "கண்டு"

"பாப்பா எப்படி இருக்கு"

ஆவலோடு நலம் கெட்டாள்...

அவள் என்னை மாதிரியே

உன்னை மறக்கவில்லை...

நமக்கான நிகழ்வுகளை

அவள் மறக்கவில்லை...

அவள் மட்டுமல்ல

நானும்தான்...!

நாம் சென்ற

உணவு விடுதிகள்...

திரையரங்குகள்...

ஆலயங்கள்...

துணிக்கடைகள்...

நகைக்கடைகள்...

நண்பர்கள் வீடு...

அமர்ந்து பேசிய

ரயில்நிலையங்கள்...

இங்கெல்லாம் இப்போது

நான் மட்டும் செல்கிறேன்...

அந்தப் பூக்கடைப்

பெரியம்மாவைப்போல்...

என்னைப் பார்த்ததும்

உன்னை அடையாளம் சொல்லி...

எல்லோரும் உன்னை

விசாரிக்கிறார்கள்...

நீயும் தனியாக

செல்லும் போது

என்னைப் பற்றி

உன்னிடமும் இப்படித்தானே

நலம் கேட்பார்கள்

தோழி...

இதையெல்லாம்

சொல்லித் தொலைக்க

எனக்குக் கவிதை இருக்கிறது...

உனக்கு ?...
 
நன்றி :சினஹன்

கருத்துகள் இல்லை: