தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/29/2010

அகவையும் ,அனுபவமும் ஒரு சிறுகதை

கதையின் நாயகர்கள் : சேகர் ,கார்த்திக்  (கோவை)
இக்கதையில் வரும் நபரும் ,கதையும் உண்மையே ,இது ஒரு உண்மை சம்பவம் .


சேகர் - வயது இருபது  : ATM- க்கு சென்ற போது தனக்கு முன்னால் ஒரு பெண் இருந்தாள்.அவள் பணம் எடுத்து வந்தவுடன் நான் உள்ளே ஏறியவனுக்கு  படிக்கட்டில் ஒரு புதையல் கிடைத்தது. யாரோ வங்கி அட்டையை படிக்கட்டில் தவற விட்டிருந்தார்கள். அப்படியே குனிந்து எடுத்தேன். அதை எடுத்தால்  முன் புறம் இருந்த நண்பர்கள், வேகமாக போக சொல்லி , என் பக்கம் வந்தனர்.


கையில் ATM , பணம் இரண்டையும் எடுத்துவிட்டு என் நண்பர்களிடம் சென்ற நான் , "ஏதுடா" என்றனர். விபரம் சொன்னேன். "டேய் நல்லா செலவு பண்ணலாம்டா" என்றான் சிவா . "அஞ்சப்பர் போகலாமா . இத எடுத்துக்கலாம்" என்றான் பாஸ்கர். "போங்கடா. இது நாம செலவு பண்ணக் கூடாது. அனேகமா இந்த ATM  -ல எனக்கு முன்னால இருந்தவளின் தான் இது . விசாரிச்சு கொடுத்துடுவோம்" என்றேன். பாவம் யார் Atm . பஸ் ஏறும் அவசரத்தில் ATM கீழே விட்டிருக்கலாம்.


சிவா  சட்டையை பிடித்தான். "அதெல்லாம் நீ கொடுக்கக்கூடாது"
என்றுகார்டை  பிடுங்கினான். பாஸ்கர் "என்னடா சண்டை போடுறிங்க" என்றார். நான் அவன்  பக்கமாக ஓடினேன். ஒரு முறை, அண்ணா பத்தாயிரம் ரூபாய் பணத்தை தொலைத்து விட்டு பட்ட பாடு உள்ளதே. பாவம் இந்த பெண் அம்மாதிரியான மனநிலையில் தானே இருப்பார். உடனே வங்கிக்கு தொடர்பு கொண்டபோது
சார். என்னிடம் இருந்த கார்டின் நிலவரத்தை சொல்லி ATM கிடந்துச்சு. .அதை பிளாக் பண்ணனும் என்றேன்.அவரும் அதை அருகில் உள்ள வங்கி கிளையில் கொடுக்க சொன்னார்


படிக்கிற பையனா இருந்தாலும் பொறுப்பா இருக்கார் தம்பி" என்று என் நலன் விரும்பிகள் தோளில் தட்டி கொடுத்தார். "ரெம்ப நன்றி தம்பி" என்றார்கள்.


வயது முப்பது கார்த்திக்  : மனசே சரியில்லாமல் இருந்தது. எது செய்தாலும் நட்டத்தில் முடிகிறது. வீட்டு பிரச்சனை வேறு. வேலையும் சரியில்லை. எல்லா பக்க சிக்கல்களும் மனிதனை கொல்கிறது. என்ன தான் செய்ய போகிறோமோ என்கிற சிந்தனையோடு நடந்து கொண்டு இருந்தேன் . மெயின் ரோட்டுக்கு
வந்த போது, ஒரு குப்பை மேட்டை நெருங்கிய போது, லாரி ஒன்று வரவே குப்பை மேட்டின் மீது ஒதுங்கினேன். குப்பை மேட்டை ஒட்டி பெண்கள் உபயோகப்படுத்தும் கைப்பை ஒன்று கிடந்தது. கைப்பை புத்தம் புதுசாக இருந்தது.


கைப்பையை உற்று பார்த்த போது, லேசாக திறந்திருந்த ஜிப் வழியே- ஏதோ தங்க நகைகள் போல் மினு மினுவென்று தெரிய, சபலத்தில் ஏதோ தோன்ற
கைப்பையை குனிந்து எடுத்து கொண்டு பறந்தேன். சற்று தூரம் போய் நடந்து - பையை திறந்து பார்த்தால்... மிக பெரிய அதிர்ச்சி. உள்ளே நகைகளும், பணமுமாய் இருந்தது. யாரோ வண்டியில் போகும் போது, தவற விட்டிருக்க வேண்டும் போலும். குப்பை மேட்டின் அருகே மிகப் பெரிய பள்ளம்
இருந்தது. பள்ளத்தில் ஏறி இறங்கும் போது, கைப்பை நழுவி இருக்கலாம்.
நழுவியதை கவனிக்காமல் இருந்து இருக்கலாம்.


கைப்பையின் வெளிப்புற பையை திறந்து பார்த்தேன். விசிட்டிங் கார்ட் இருந்தது. ஜிப்பை நன்றாக இழுத்து விட்டு நடக்க ஆரம்பிக்க. போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைப்பதா அல்லது விசிட்டிங் கார்டை பார்த்து நாமே, அந்த முகவரிக்கு சென்று கொடுத்து விடுவோமா. பார்ப்போம். அதோடு இன்னொரு எண்ணமும் மனதில் தோன்றியது. அது குறித்தும் யோசிக்கலாம். பார்ப்போம். யாராவது கல்யாணத்திற்கு நகைகள் வாங்கி கொண்டு போகிறார்களா என்ன. எல்லாம் புது புது நகைகளாக இருந்தன.


மனிதர்கள் ஒரு பக்கம் பணம் இல்லை, பணம் இல்லை... வாழ்வதே கடினமாக உள்ளது என்கிறார்கள். மறு பக்கம்- நகைகடைகளிலும், ஆடம்பர
பொருள்களுக்கான கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. கஷ்டப்படுகிறவன்- கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறான். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான்.(இது நான் கற்று கொண்டது )  உலகம் சிலரை வாழ வைத்து, பலரை அழ வைப்பதாக உள்ளது. இப்போது தன் நிலையே அவ்விதமாக தான் உள்ளது.


சின்னதாய் ஒரு வேலையில் இருந்துள்ளேன். மொத்த  சாப்ட்டு ,தினசரி இரு நூறு செலவு பண்ண பண்ண வேண்டியுள்ளது. எல்லாம் படிக்க  வட்டிக்கு வாங்கிய பணம். வட்டிக்கு கட்டவில்லை வருமானம். ஏமாற்றி பிழைக்க
தெரியாதவன், வேலை  செய்யக்கூடாது. இது தான் அண்ணாச்சிகள் கற்று
கொடுத்த பாடம் - இந்த நேரத்தில் நாம் தான் பாவம், புண்ணியம் பார்க்கிறோம். நமக்கு யார் பார்க்கிறார்கள்.


மூளையில் ஏதோ உரைக்க, சட்டென்று நிற்க . அந்த கைப்பையில் இருந்த விசிட்டிங் கார்டை கிழித்து எறிந்தேன். எனது கைப்பையில் எல்லா நகை பணத்தை கொட்டிவிட்டு, அடுத்து வந்த குப்பை தொட்டியில், அந்த கைப்பையை வீசி எறிந்தேன். யார் எக்கேடு கெட்டு போனால் என்ன. வசதி இல்லாதவன் இவ்வளவு நகை வாங்குவானா. இல்லாதவன், கடன் அட்டை வைத்திருப்பானா, வாங்கிய பொருளை இவ்வளவு அலட்சியமாக கொண்டு போகிறவன், எவ்வளவு வசதியானவனாக இருப்பான்.


இப்போது எனக்கு நான் முக்கியம். கடவுள் கொடுத்ததாக வைத்து கொள்வோமே. சின்ன வயதில், கீழே கிடந்து எடுத்த பர்ஸை உரியவரிடம் சேர்த்த ஞாபகம் வந்தது.


இந்த சிறுகதை சில நாட்களுக்கு முன்னால், "இரு கதை கதாநர்யகர்களுக்கும் ,
ஒரே மாதிரியான சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் இரண்டு பேரும்  வேறு முடிவெடுக்கிறார்கள். வேறு வேறு முடிவை எடுப்பதால் தான், அவரகளைபற்றி சிந்திக்கிறோம்.


மனிதர்களை சூழல் எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பது பற்றி எழுதியுள்ளேன். நீங்கள் என்ன சொல்கிறிர்கள்.........

சிந்தனை & எழுத்து  : அ.ராமநாதன்            நன்றி : சேகர் & கார்த்திக்

3 கருத்துகள்:

சங்கீதா சொன்னது…

அருமை ஆனால் உண்மை கதையில் கார்த்திக் பாத்திரம் யோசிக்கும்படியாக உள்ளது

சூர்யாதேவா சொன்னது…

சூழ்நிலைக்கேற்ற‌ மாற்ற‌ம்.... க‌தை ந‌ல்லா வ‌ந்திருக்கு..

Ramesh சொன்னது…

நீங்க கதை எடுத்துச் சென்ற விதம் நல்ல இருக்குங்க..

மனுசங்க, படுற கஷ்ட நஷ்டங்கள்.. அவர்களின் இயல்பான குணங்களை மாற்றி விடுவதை..
எடுத்துச் சொன்ன விதம் அருமை.. வாழ்த்துக்கள் :-))