தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/04/2010

வாழ்வதுதான் வாழ்க்கை......!!!


பிறந்து விட்டோம்
வாழ்வதற்காகவே
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம்
வழி நெடுகே...!


வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயணத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம் நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!


கண்ணீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்ணீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!


இப்பயணம்
எத்தனை போராட்டமானது
இவ்வழியால் போனவர்கள்
சொல்லலாம்...போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும் இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே...!


இரவும் பகலும்
எம்மைத்தொடர்வது போல
இன்பமும் துன்பமும்
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை ஒளியை வீசியவாரு
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!


நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயணியாய்
நிம்மதிக்காய் தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள் நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம் பசுமையாகவும் மாறலாம்...!


வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே......!

இடுக்கை :அ.ராமநாதன்

1 கருத்து:

devakinarayanan சொன்னது…

படித்ததில் மனதை கவர்ந்த கவிதை /சிந்தனை வாழ்வது தான் வாழ்க்கை.... மனதார வாழ்த்துகிறேன்..