தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/09/2010

உயிரில் கலந்து வைத்தேன்.......

காகிதத்தில் எழுதிவைத்தால்
கரையான் அரித்து விடும்.
உடம்பில் குத்தி வைத்தால்
மண்ணோடு மறைந்து விடும்.
கல்வெட்டில் பதித்து வைத்தால்
காலம் அழித்து விடும்.
நட்சத்திரங்கள் ஒன்று சேர்த்து
வானில் கூட எழுதி வைப்பேன்...
பாவம்!


அற்ப ஆயுள் தான் அவற்றிற்கும்.
அது சரி,
காட்சிப் பொருளா நீ?


கண்ட இடத்தில் எழுதி வைக்க!
அதனால் தான் அன்பே,
உன்னை
என் உயிரில் கலந்து வைத்தேன்

கருத்துகள் இல்லை: