தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/21/2010

உணர்வுகள் -2

 முதல் பகுதியை படிக்க இதை காதல் சுகமானது கிளிக் செய்யவும்..

         காதலை பற்றி தொடர் எழுத சிந்திக்க  தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்

தொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள் காதலின் அற்புதத்தை...! காதல் என்பது வயதை, இயல்பை மறக்க செய்யும் !!

         "நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்.
(இந்த தொடரை மேலும் தொடருவதற்கு முன் சில விளக்கங்கள். தொடரின் முதல் பதிவிற்கு வந்த மின்னஞ்சலை பார்க்கிறப்போ காதல் வந்தால் பெத்தவங்களை விட்டுட்டு ஓடி போய்டுவாங்க, 
உண்மையான காதல் என்று ஏதும் இல்லைன்னு சொல்லி இருந்தாங்க....!!?நாட்டில காதலால் நொந்தவங்க தான் பாதி பேர் என்று நினைக்கிறேன்)
நான் இந்த தொடரில் சொல்ல இருப்பது அழகான மென்மையான காதல் உணர்வை பற்றியது மட்டும்தான். மனதை என்றும் இளமையாகவே வைத்திருக்கும் காதலை பற்றி மட்டுமே இங்கே பேசுவோமே....! காதலர்கள் செய்யும் தவறுக்கு காதல் என்ன செய்யும்....?
'காதல் ஒரு போதும் தோற்பதில்லை' 'காதலர்கள் தான் தங்களுக்குள் தோற்று போகிறார்கள் !!' (இது யாரோ சொல்லி கேட்டது)
எனக்குள் எப்போதும் இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து விழுந்து விடும் அதன் காலடியில், எந்த நிபந்தனையும் இன்றி.......!! ஒரு முறை இரு கண்களையும் மூடி மெதுவாய் 'காதல்' என்று சொல்லி பாருங்கள்...... உடம்பில் ஒரு சிலிர்ப்பு மெதுவாய் பரவுவதை உணர முடியும்....
            இதை காமம் என்று எள்ளி நகையாடி வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஒன்று காதலில் தோற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது காதல் கிடைக்காமல் ஏங்குபவர்களாக இருக்க வேண்டும். அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருந்திருப்பார்கள்....! மனிதர்கள் பிறப்பதற்கு காதல் ஒரு வேளை காரணமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மனிதனாய் வாழ நிச்சயம் ஒரு காதல் வேண்டும். பலருக்கும் தங்களின் முதல்
காதல் இன்றும் ஸ்பெஷல் பொக்கிஷம் தான். அதை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு துள்ளல் எழத்தான் செய்யும். பதின்ம வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியாக இருந்தாலுமே அதிலும் கொஞ்சமாவது ஒரு காதல் இருக்கத்தானே செய்யும்.....கொட்டும் மழையும் இதம் தான், சுட்டெரிக்கும் வெயிலும் குளுமைதான்.....!
காதலை பார்க்கும் பார்வைகள் வேறு படலாம்...ஆனால் காதல் மட்டும் அதே அழகுடன், அதே துள்ளலுடன், அதே பரவசத்துடன், அதே இனிமையுடன், அதே இளமையுடன் இருக்கிறது. காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை செடி கொடிகள் விலங்குகள்,பறவைகள் இனத்திலும் காதல் உண்டு. எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம், இருந்த கொஞ்ச நீரையும் தன் துணை அருந்தட்டும் என்று விட்டுக்கொடுத்த 'மான்கள் கதை'யை.....!இறுதிவரை இரண்டுமே ஒன்றுக்காக ஒன்று விட்டு கொடுத்து நீர் அருந்தவில்லை. குளத்தில் இருந்த சிறிய அளவு நீரும் அப்படியே குறையாமல் இருந்தது, அவை ஒன்றின் மேல் ஒன்று வைத்திருந்த காதலால் தான் !!
" நீரில் வாழும் அன்றில் பறவைகள் இணைந்தே நீந்தும், இணைந்தே இரையுண்ணும். ஒருமுறை நீந்தும் போது நீர் பூ ஒன்று நடுவில் குறுக்கிட்டுவிட்டது. பூவின் அகலம் கொஞ்சமே, சுற்றி வர இடைப்பட்ட நேரம் ஒரு நொடியே...ஆனால் அந்த அன்றில்கள் பல ஆண்டுகாலம் பிரிந்து விட்டது போன்று வருந்தினவாம்...! " என்னே அதன் அன்பு ! அதற்குள்ளும் காதலை வைத்து இருக்கும் இயற்கையை வியக்காமல் இருக்க இயலவில்லை...!
கவிதை (படித்ததில்)
காதலன் :அன்பே !
இன்று இரவுக்குள் நான் சாகப் போகிறேன்
எனக்குத் தெரியும்  விடியலில் முதல்
ஒளிக்கீற்றாய் நீ வருவாய் !
காதலி: அன்பே !
இந்த இரவுக்குள் நீ சாகப் போகிறாய்
அந்தியின் முதல் இருளாய்
நான் வருவேன் !
இதுதான் காதலோட அழகான உண்மையான
சுத்தமான அன்பு ! 
காதல் வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டும் இது காதலின் கட்டளை .
காதலில் சோகம் என்றால் கவிதைகள் இப்படி எழுதப்படலாம்...!

நேற்று  என் விழிகள் சிரித்தது
உன் இதழோர புன்னகையில்
இன்று விழிகள் நீர் வார்க்கிறது
அது ஏளன சிரிப்போ என்ற
சந்தேகத்தில் !?
நேற்று இன்று ஒரே வித்தியாசம்
நேற்று வாழ்ந்தேன் இன்று மடிந்தேன்
எனது மரணமோ உன் வருகை நாளோ
எது முன்பு வந்து என்னை அழைத்திடுமோ !
சாவின் கடைசி நொடியில் காதலி...
'வேறு யாரும் என் அளவிற்கு
உன்னை காதலிக்க முடியாது'
சாகும் போதும் கூட  எவ்வளவு நம்பிக்கை தன் காதலின் மீது...!
அந்தஸ்து, படிப்பு, வயசு, உடம்பு, அழகு இதெல்லாம் அன்புக்கு ஒரு தடை கிடையாது....!
இந்த கவிதைகள் உங்கள் மனதை தொட்டு இருந்தால் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனதின் ஓரத்திலும் சொல்லபடாத ஒரு காதல், ஒரு நேசம் ஒளிந்திருக்கலாம்.......! சொல்லி விடுங்கள்....
சொல்லி விட்டு மனதை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.....!!

பின் குறிப்பு....
நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லி மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....! அதை பற்றி  விரைவில்  சொல்கிறேன்....

கருத்துகள் இல்லை: