தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/28/2010

சார் போஸ்ட்......

       என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு சில
 வருடங்களுக்கு   முன்னால் அவரை பாராட்டி தபால் அட்டை வந்ததாக சொன்னார் உடனே எனது மனதின் பிரதிபலிப்பு இதோ ....


கடிதம் எழுதுதல் என்பது நம்மிடையே சுத்தமாக  நின்றுவிட்டது. Communication என்பது மிகவும் துரிதமாக பல்வேறு வடிவங்களில் எளிதாக நமக்கு கிடைத்துவிட்டதால், கடிதங்கள் எழுதுதல் என்பதின் தேவைகள் குறைந்துவிட்டன.
சின்ன வயதில், அம்மா , பெரியம்மா  சொல்ல சொல்ல பல கடிதங்கள் எழுதி இருக்கிறேன். ஆசிரியர்   ஒரு முறை யாருக்கோ ஆங்கிலத்தில் கடிதம் எழுத சொல்லி தயார்  செய்தார்,. யாருக்கு என்ன விஷயம் என்பது மறந்து போயிவிட்டது. என் கையெழுத்து நன்றாக இருக்குமென, எதை எழுதவேண்டும் என்றாலும்.. என்னை அழைத்துவிடுவார்கள்.
இதில் நாங்கள், "இன்லேன்ட் கவர்" அதிகம் பயன்படுத்தியதாக இருக்கும். 
பெரியம்மா ,மாமா  எந்த கடிதம் என்றாலும் ஆரம்பிப்பது - "நலம், நலமறிய அவா. நிற்க. " என்பது தான் இருக்கும். இதை எழுதிவிட்டு, அம்மா  சொல்லு ...சொல்லு ன்னு அவங்க வேலை செய்துக்கிட்டு இருக்கும் போது கேட்டு கேட்டு எழுதுவேன். பொதுவாக அம்மா  லெட்டர் எழுத  சொல்லுவது, என் பெய்யம்மவுக்கு  ,பாட்டிக்கும்  என்று இருக்கும். அம்மாவிற்கு மாதம் ஒன்று என்பது கணக்கு. (சில நேரங்களில் தவறி விடும்)
அம்மா அதை பார்க்கும்  போது,ஒரு வேளை நாங்கள் எழுதிய கடிதத்தில் தவறுகள், வார்த்தை பிரயோகம் சரியாக இல்லாவிடில் கேட்பார்கள், திருத்துவார்கள். என் தம்பி  தான் நிறைய தப்பு செய்வான் .
              எனது பக்கத்து வீடு அப்புச்சி , அவருக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் தெரியாது. இதற்கு காரணம் அவரின் இடைவிடாது மூக்குப்பொடி போடும் பழக்கம் என்று அம்மா  சொன்னார். அவர்கள் வீட்டில்  அவரின் கண் பார்வை வர எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார், முடியவில்லை.  எங்கள் வீடு அருகே பல வருடங்கள் இருந்தார். அவரும் யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால்.. என்னைத்தான் அழைப்பார்.
பிறகு, +1,+2 படிக்கும் போது, தோழிகளுக்கு கடிதம் எழுதுவேன். அவர்களும் எனக்கு திருப்பி பதில் அனுப்புவார்கள்.
       கடிதம் கதை இத்தோடு முடிந்தது என்றால் இல்லை. எனது நண்பன் ஒருவன் எனக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவான். அவர்களின்  கடிதங்களில்
சிறப்பு அம்சம் என்னவென்றால், இடைவெளியில்லாமல் நெருக்குமாக எழுதுவார்கள். கடிதத்தை மடிக்கும் இடத்தை கூட விட மாட்டார்கள்.
கடிதங்கள் என்று சொன்னால், முதலில் நினைவுக்கு வருவது, நேரு மாமா சிறையில் இருந்த போது இந்திராஜிக்கு எழுதிய கடிதங்கள். அடுத்து 5 ஆம் வகுப்பு படிக்கும் போது "Kannan Writes from Kanyakumari" என்ற பாடம் ஆங்கில புத்தகத்தில் இருந்தது. வகுப்பில் கண்ணன்'னு ஒரு பையன் இருந்தான், கன்யாகுமரி'ன்னு ஒரு பெண்ணும் இருந்தாள். இந்த பாடம் வரும் போது எல்லோரும் அவர்கள் இருவரையும் கிண்டல் அடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மற்றவர்கள் கிண்டலிலிருந்து தப்பிக்க கண்ணனும், கன்யாவும் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். 5 ஆம் வகுப்பிலேயே இப்படி எல்லாம் பிள்ளைகள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்..ம்ம்ம்ம்.. என்ன உலகமடா இது.?
   அடுத்து கடிதத்தின் மேல் ஒட்டும் ஸ்டாம்ப். :) ஸ்டாம்ப்ஸ் கலெக்ட் செய்வதை பொழுதுப்போக்காக நிறைய குழந்தைகள் ஒரு காலத்தில் செய்து வந்தார்கள். ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒட்டக்கூடாது என்று அப்புச்சி  சொல்லி இருந்தார். விளக்கம் கேட்டபோது, பின்னால் தடவியிருப்பது மயில் துத்தம்,அது விஷம் என்ற சொல்லப்பட்டது. அவர் சொன்னபடியே நடந்துக்கொள்வேன், ஸ்டாம்ஸ் 'ஐ தண்ணீர் தொட்டு, ஒட்டுவேன்.
இந்த காலத்து குழந்தைகளுக்கு கடிதம் தேவையில்லை என்றாகிவிட்டது.அடுத்துபோஸ்ட் பாக்ஸ். இக்காலத்தில் சில குழந்தைகள்  இதை பார்த்து இருக்கிறானே ஒழிய பயன்படுத்தியதே இல்லை. போஸ்ட் ஆபிஸ் போகும் வேலையே இல்லாதபடி, தடுக்கிவிழுந்தால் கூரியர் சர்வீஸ்கள் வந்துவிட்டன, அவற்றின் துரிதமான சேவை, நம்மை போஸ்ட் ஆபிஸ் செல்லவைப்பதை தடுத்து விடுகிறது. ஆனாலும் அரசு தபாலுக்கு நாம்   ஸ்பீட் போஸ்ட் ஐ இன்றும் பயன்படுத்தி வருகிறோம்   .
மணி ஆர்டர், இதன் சேவை இப்போதும் தேவைப்படுகிறது தான். ஊர் பக்கம் பலருக்கு பேங்க் அக்கவுண்ட் இருப்பதில்லை. அதற்கு மணி ஆர்டர் தான் ஒரே வழி.
 
தந்தி, ஒரு காலத்தில் தந்தி என்றால், படிப்பதற்கு முன்னமே துக்க செய்தியாகத்தான் இருக்கும் என, வீட்டு பெண்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள். தந்தி என்றாலே ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அதுவும் இப்போது சுத்தமாக இல்லை.
தபால்துறை இனி வரும் காலங்களில் நமக்கு பயன்படாமலேயே போய் விடுமோ என்ற எண்னம் கூட வந்தது. கூரியர் சர்வீஸ் போன்று, அலுவலகங்களுக்கு - டோர் ஸ்டெப் கலெக்ஷன், அக்கம் பக்கம் இருக்கும் கடைகளிலேயே கடிதங்களை பெற்றுக்கொண்டு, டெலிவரி செய்தல் போன்ற சேவைகள் கிடைக்குமானால், தொடர்ந்து தனியார் பக்கம் போகாமல்,பழையபடி மக்கள் இவற்றை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.









கருத்துகள் இல்லை: