தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/08/2010

சூரியன் vs இலை

                  

               வலையுலகில் கடந்த சில நாட்களாக தி.மு.கவிற்கு எதிரான பதிவுகள் தொடர்ந்து பதிவிடப்படுகிறது ஏன் இந்த வலைத்தளத்தில் கூட சென்ற  பதிவுகளை தி.மு.க அரசுக்கு எதிராக பதிவிட்டு இருந்தேன். ஆனால் இது போன்ற பதிவுகள் எல்லாம் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக மாறுகின்றது என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது. இப்போதிருக்கும் நிலையில் தி.மு.க அரசு அகற்றப்படவேடிய, புரம்த்தள்ளப்பட வேண்டிய ஒரு அரசுதான் ஆனால் அந்த இடத்தில் அ.தி.மு.கவை அமரவைக்கவேண்டும் என்றால் அதற்க்கு தி.மு.க வே பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது காரணம் கடந்த காலத்தில்
அ.தி.மு.க வின் ஆட்சியில் நடந்த சாதனைகள் தான்.


       தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் மறதி , நம் சிறுவயதில் நடந்த சம்பவங்களை எல்லாம் ஞாபகம் வைத்திருப்போம் ஆனால் ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை ஐந்தாண்டுகளில் மறந்து விடுகிறோம். இந்த மறதியால் நாம் எந்த ஆட்சியாளர்கள் வேண்டாம் என்று விரட்டியடித்தொமோ அவர்களே மீண்டும் ஆளும்கட்ச்சியால் உருவாகும் எதிர்ப்பலைகளை பயன்படுத்தி ஆட்சியில் அமர்ந்து விடுகின்றனர். இந்த முறையாவது அது நடந்து விடக்கூடாது என்பதுதான் எனது ஆசை. சரி அ.தி.மு.க ஆட்சியில் அப்படி என்னதான் நடந்தது, நீங்கள் மறந்ததை நினைவூட்டுகிறேன் பாருங்கள்.


அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் நடந்தவை:


☼ தனது ஆட்சி காலத்தில் தொண்டன் முதல் அமைச்சர் வரை யாராக இருந்தாலும் தன் காலில் விழவேண்டும்(வயதில் தன்னைவிட முதிர்ந்தவராக இருந்தாலும்). புதிதாக பதவி ஏற்ற சட்டமன்ற சபாநாயகர் சட்டமன்ற வளாகத்திலேயே தன் காலில் விழ வைத்து சட்டசபையின் கவுரவத்தை கெடுத்தது.


☼ ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.

☼ சாலைப்பணியாளர்களை  டிஸ்மிஸ் செய்தது.


☼ அரசுபணியாளர்களை இரவில் வீடு புகுந்து கைது செய்தது.

☼பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது.

☼வாஸ்த்துப்படி புது சட்டசபையை ராணி மேரி கல்லூரியை இடித்ததுதான் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகளை கைது செய்தது.

☼கண்ணகி சிலையை அகற்றியபோது தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பியும் அதற்க்கு செவி சாய்க்காதது.

☼தனக்கு பிடிக்காதவர்கள் மேல் பொய்வழக்கு,பொடா  , கஞ்சா வழக்கு போட்டது.

☼பொதுநல பணித்துரையினரை டிஸ்மிஸ் செய்தது.


☼ கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மதமாற்ற தடை சட்டம்.


☼ வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த அரசு ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் அதே வேலைக்கு தற்காலிமாக ஊழியர்களை(ஓட்டுனர்களை) நியமித்து தனியார் நிறுவனம் போல் ஊழியர்களை மிரட்டியது.


☼ பலநூறு கோடிகளில் இதுவரை உலகமே கண்டிராத வகையில் தன் வளர்ப்பு மகனுக்கு ஆடம்பர திருமணம் செய்தது.


☼ கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி நகைகள்(தங்கத்தாரகை), சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.


☼கள்ள சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் பாணியில் அரசு சார்பில் குறைந்த விலைக்கு மதுபானம் அறிமுகம் செய்தது.இதில் புதிதாக இளைஞர்கள் கவரப்படுவார்கள் என்று சற்றும் கவலைப்படாதது( எனது பள்ளிகாலத்தில் என்னுடன் படித்த நண்பர்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் அடிக்கடி இந்தமதுபானத்தை குடித்துதான் பலக்கப்பட்டார்கள்)


☼ டான்சி அரசு நிலங்களை தன் பெயரில் குறைந்த விலைக்கு வளைத்து போட்டது. உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தபின் தன்னுடைய கையெழுத்தையே தன்னுடையது இல்லை என்று போய் சொன்னது. மாட்டிக்கொண்ட பின் டான்சி நிலங்களை மீண்டும் அரசிடமே ஒப்படைத்தது.


☼நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி, விவசாயிகளுக்கு எலிக்கறி ( ஆனால் இது எதிர்க்கட்சியினரின் சதி என கூறப்பட்டது)


☼இன்று தமிழக அரசே மதுபான கடைகளை நம்பி தான் உள்ளது. இதற்க்கு காரணம் இவர்கள் ஆட்சியில் எடுக்கப்பட்ட முட்டாள்தனமான முடிவுதான்(சாராய கடைகள் அரசே எடுத்து நடத்தியது).


☼ மூன்று கல்லூரி மாணவிகளை எரித்தது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் குற்றவாளிகளுக்கு அ.தி.மு.க சார்பில் மேல் முறையீடு செய்தது.


☼ சென்னை மேயர் பதவி அ.தி.மு.க வசம் வந்தபின் எந்த ஒரு மக்கள் நலப்பனியையும் செய்யவிடாமல் தடுத்தது. (கராத்தே தியகரஜனே இதை தன் வாயால் சொல்லிதான் அ.தி.மு.க வை விட்டு வெளியேறினார்).


☼ தேர்தலை கணக்கில்கொண்டு மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் தருகிறேன் என்று அரசு பணத்தை செலவழித்தது. பாதிக்கப்பட்டவர்களை விட பாதிக்கப்படாத அ.தி.மு.க வினர் தான் இந்த பணத்தை கொள்ளையடித்தனர். ஏன் என் நண்பரே  1000 ரூபாய் வாங்கி விட்டு 2000 ரூபாய் வாங்கியதாக சொன்னார் . இந்த முட்டாள்தனம்தான் இன்று இலவச அரசு தொலைக்கட்சியாக மாறியுள்ளது.


☼ தமிழக இளைஞர்களை பற்றி கடுகளவும் நினைக்காமல் TNPSC தேர்வை நடத்தாமல் இருந்தது. இளைஞர்கள் அ.தி.மு.க ஆட்சியில் வேலைக்கிடைக்காமல் கண் பிதுங்கி நின்றது தான் கொடுமையிலும் கொடுமை.


☼இது நாள் வரை எந்த ஒரு கூட்டணி கட்சியினருடனும் அனுசரித்து போக தெரியாதது(உதாரணம்:மூன்றாவது அணி).


☼பதவிக்காக இந்திய அரசியலையே கவிழ்த்தது.


இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் ஆனால் எனக்கும் கொஞ்சம் மறதி மறந்து விட்டேன். இதையெல்லாம் விட எனக்கு அ.தி.மு.க ஆட்சியில் பிடிக்காதது திமிர், ஆணவம்தான். யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்று நடந்து கொள்வது. ஏதோ பணக்கார வர்கத்தை சேர்ந்த தனியார் கம்பனி நிர்வாகி போல் அரசு ஊழியர்கள் மிரட்டி பணிய வைத்தது.


எனது நண்பரின் தங்கை  பத்தாம்வகுப்பு தேர்வு எழுதிய பொது அந்த நேரத்தில் தேர்வு எழுதிய என்னுடைய நண்பர் பயந்த ஒரு விஷயம் அப்போதிருந்த ஒரு புரளிதான். ஆம் அது என்ன புரளி என்றால் படித்து எல்லோரும் பாஸ் ஆகிவிட்டால் வேலைகேட்பார்கள் என்று மாணவர்களை முடிந்த வரை fail பண்ண சொல்லிட்டாங்க மேலிடத்தில் இருந்த என்பதுதான். அதற்க்கு காரணம் அந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்தனர்,போதாகுறைக்கு புதிதாக வேலைக்கு ஆள்செர்ப்பதையும் நிறுத்தி வைத்திருந்தார் இப்போதைய எதிர்கட்சி தலைவர். இந்த காரணத்தால் அவள் 
 சுமாராக எழுதியிருந்த கணக்கு பாடத்தின் ரிசல்ட் வரும் வரை பயந்துபோய்தான் இருந்தனர்  அந்தளவுக்கு இவர் அரசு வேலையில் இருந்த முதியவர்(கட்டாய் ஓய்வு) முதல் பள்ளி சிறுவர்கள் வரை தமிழக மக்களை பயமுறுத்தி வைத்திருந்தார்.


தி.மு.க ஆட்ச்சியில் நடக்கும் ஊழல்களும் கொள்ளைகளும் தான் நம்மை வெறுக்க செய்துள்ளது ஆனால் எனக்கு தி.மு.க வில் பிடித்த ஒரு விஷயம் என்றால் மக்களை எந்த விதத்திலும் மிரட்டாதது உதாரணம் சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மாற்று திறனாளிகளை நேரில் சென்று பார்த்து ப்ரட்சனைக்கு தீர்வு கண்டது தான் ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் கைது செய்தது முற்றிலும் தவறான ஒன்று. அதே போல் முன்னாள் முதல்வர் என்று கூட பார்க்காமல் வீடு புகுந்து நள்ளிரவில் கைது செய்த அந்த பலி வாங்கும் குணம் ஆனால் இப்போதைய தி.மு.க அதற்க்கு எந்த ஒரு பதிலடியும் கொடுக்காமல் முத்துகருப்பனுக்கு பதவி உயர்வு கொடுத்தது எனக்குள் ஆச்சர்யத்தை கொடுத்தது.


நான் நடுநிலையாக தான் இதை சொல்கிறேன் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பல்ல . இதுதான். தி.மு.க வா இல்லை அ.தி.மு.க வா என்று என்னிடம் கேட்டால் நான் தி.மு.க வைத்தான் சொல்வேன். காரணம் இரண்டும் ஊழல் கட்சிதான். ஆனால் மக்கள் நலனில் சிறிதளவாவது கருணை உள்ள கட்சி என்றால் அது நடுநிலையானவர்கள் கண்டிப்பாக தி.மு.க வை தான் கூறுவார்கள்.


☼108 ஆம்புலன்ஸ்.
☼காப்பிடு திட்டம்.
☼வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழித்தது.
☼ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்.
☼இலவச தொலைக்காட்ச்சி
☼கண்க்ரிட் வீடு திட்டம்.
☼திருமண உதவிதொகை திட்டம், கர்ப்பிணி உதவிதொகை, முதியவர் உதவித்தொகை திட்டம் போன்றவற்றை உயர்த்தியது.
☼ விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்தது.


இப்படி பல மக்கள் நலத்திட்டத்துக்காக வரவேற்கலாம் ஆனால் இதிலும் ஊழல் இருப்பதாக குற்றம் இருப்பதால் வெறுக்கத்தான் செய்கிறது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் பயம் இருந்ததே தவிர இது போன்ற மக்கள் நல திட்டம் என்று ஒன்று கூட சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்பது தான் உண்மை. இதற்காகத்தான் இந்த பதிவில் சொல்கிறேன் நாம் தி.மு.க ஆட்சி வேண்டாம் என்று ஒடுக்க நினைத்தால் அதற்க்கு மாற்று கட்சி அ.தி.மு.க கிடையாது. இனி வரப்போகும் நாட்களில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் தமிழகம் தப்பிக்கலாம்.


நான் எதிர்ப்பார்க்கும் மாற்றம்:


☼அ.தி.மு.க தலைவரால் தி.மு.க வில் குற்றம் சாட்டப்படாதவர் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான் ஆம் இது வரை எந்த ஒரு ஊழலிலும் எதிர்க்கட்சி தலைவரால் குற்றம் சாட்டப்படாதவர். இவருடைய செயல்பாடு
அ.தி.மு.க வினரையே திருப்தி பட செய்தது என்றால் அது உண்மைதான். ஆனால் இவர் தி.மு.க வில் இருந்துகொண்டு மக்களுக்கு நல்லதை இனி செய்யமுடியும் என்பதில் சந்தேகமே இவர் தி.மு.க வை தன் அண்ணனிடம் ஒப்படைத்து புது கட்சி தொடங்கினால் எனது ஓட்டு இவருக்குதான். இது இப்போதைக்கு நடக்காது. எனது ஆசை அவ்வளவுதான்.


முடிவு:
இப்போதிருக்கும் அரசியல்வாதிகளில் முதலமைச்சருக்கான தகுதி உடையவர்கள் என்றால் அது மு.க.ஸ்டாலின் மட்டும்தான் நான் கூறுவேன். நடுநிலையோடு யோசித்து உங்கள் முடிவை சொல்லுங்கள் . மற்ற கூட்டம் எல்லாம் கொள்ளை அடிக்கும், முதல் அமைச்சர் பதவியில் உட்கார தகுதி இல்லாதவர்களே.


இன்னும் எத்தனை காலத்துக்குதான் எம்.ஜி.ஆர் காக ஓட்டு போட்டேன், அண்ணாவுக்காக ஓட்டு போட்டேன், காமராஜருக்காக ஓட்டு போட்டேன் என்று போட போகிறீர்கள். இனி வரும் காலங்களிலாவது உங்கள் பிள்ளைகளுக்காக ஓட்டு போடுங்கள்,அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓட்டு போடுங்கள.

கருத்துகள் இல்லை: