தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/21/2012

ஒர் ஏழை தமிழனாக ...!!!


தஞ்சை பெரிய கோயிலை - என்னுடன்
சுற்றினான் ஒரு வெள்ளையன்
அவன் எந்நாடு என்று நானறியா - இருந்தும்
என்னாட்டுக் கலை கண்டு வாய்ப்பிளந்த போது
எனக்குள் ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ...
வானுயர்ந்த கோபுரம் போல் என்னாடே உயர்ந்தது 
என்றுதலைநிமிர்ந்து திரும்பினேன் ...

கோயில் தலைவாசலில் - அந்த
அந்நியனைச் சுற்றி ஒரு கூட்டம்
இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ...
சற்று முன்தலைக்கேறிய தலைக்கணத்தில்
தலைக் கவிழ்ந்து நடந்தேன் ...


ஒர் ஏழை தமிழனாக ...!!!

மின்னஞ்சலில் வந்தது .....

கருத்துகள் இல்லை: