தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/14/2012

பொங்கலோ பொங்கல்



  
பொங்கலோ பொங்கல்


கரும்பின் தித்திப்பு மனதில் ஒரு மத்தாப்பு


இயற்கையை வணங்கும் எளிய மக்கள்


மற்றவர் பெருமைக்காக நடுத்தர மக்கள்


வியாபாரமாகிறது பொங்கல்


நாலு காசுக்கு விற்றது இன்று நாற்ப்பது காசுகள்


விற்று பணத்தை அள்ளும் வியாபாரிகள்


மனமே இல்லாமல் வாங்கும் மக்கள் அதிகம்


அழுது வாங்கி அமுதமாக சாப்பிடும் மக்கள்


பாதி பேருக்கு நீரழிவு 


பாழாய் கிடக்கிறது கரும்பு கழிவாய்


வயலில் விளைந்ததை 

விளைய வைத்தவன்


பெருந்துணை பெருஞ்சுரியனுக்கு


நன்றி செலுத்தும் நாள் இந்த பொங்கல்


புத்தரிசி குத்தி பாயசம் வைத்து


சூரியனுக்கு படைப்பது பொங்கல்


ஆனால் இன்றோ விளை நிலம் காணோம்


உயர்ந்து விட்ட கட்டிடங்கள்


விளையும் பயிரோ விசத்தின் தீட்டு


விசத்தை வாங்கி விழுங்கும் மனிதா


உண்மை பொங்கலை உற்சாகமாக


கொண்டாடு ..பொங்கலோ பொங்கல்

பொங்கல்  &  தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்


கருத்துகள் இல்லை: