தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/26/2010

நான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )

                 நமக்குத் தெரிந்தது எல்லாம் ரோஜப்பூ,மல்லிகைப் பூ.ஏன் எனில்  ஆண்கள், பெண்களுக்கு  இதைத்தான் வாங்கித்தருகிறார்கள்.அதையே தான் பெண்களும் விரும்புகிறார்கள்.நிலைமை இவ்வாறு இருக்கும் போது நாம் எப்படிச் சங்க காலத்தில் இருந்த மலர்களைப் பற்றி அறிந்திருக்க முடியும்..சங்க காலத்தில் இருந்த மலர்களைப் பற்றி நான் அறிய விரும்பினேன்.அதன் விளைவே இப்பதிவு..இதனை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்…..

பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று குறிஞ்சிப் பாட்டு. "ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவித்தலின் பொருட்டு இப்பாட்டு கபிலரால் பாடப்பட்டது" .குறிஞ்சி நிலம் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும்.இங்கு தலைவியும்,தோழியும் சுனையில் நீராடிவிட்டு மலர்களைக் கொய்கின்றனர்.அவ்வாறு பறிக்கப்படும் மலர்கள் குறிஞ்சி நிலத்தினைச் சார்ந்தவை மட்டுமல்ல.இங்கு கபிலர் அனைத்து நிலப்பூக்களையும் குறிப்பிடுகின்றார்.அவற்றில் குறிப்பிடத்தக்கது 99 வகையான மலர்கள் மட்டுமே.அவை கீழே தரப்பட்டுள்ளன...


கபிலர் கூறும் குறிஞ்சிப்பாட்டுச் செய்யுள்:


“ஒண்செங் காந்தள்,ஆம்பல்,அனிச்சம்,
  தண்கயக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
 செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை,
 உரிதுநாறு,அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
 எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
 வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை,மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி,வகுளம்,பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை,வேரல்,சூரல்,
குரீஇப் பூளை,குறுநறுங் கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங் கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங்கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமாத்
தில்லை,பாலை,கல்இவர் முல்லை,
குல்லை,பிடவம்,சிருமா ரோடம்,
வாழை,வள்ளி,நீள்நறு நெய்தல்,
தாழை,தளவம்,முள்தாள் தாமரை,
ஞாழல்,மெளவல்,நறுந்தண் கொகுடி,
சேடல்,செம்மல், சிறுசெங் குரலி,
கோடல்,கைதை,கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி,மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
 பாங்கர்,மராஅம்,பல்பூந் தணக்கம்,
ஈங்கை,இலவம்,தூங்குஇணர்க் கொன்றை,
அடும்பு,அமர் ஆத்தி,நெடுங்கொடி அவரை,
பகன்றை,பலாசம்,பல்பூம் பிண்டி,
வஞ்சி,பித்திகம்,சிந்து வாரம்,
தும்பை, துழாஅய்,சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி,நறவம்,நறும் புன்னாகம்,
பாரம்,பீரம்,பைங்குருக் கத்தி,
ஆரம்,காழ்வை,கடிஇரும் புன்னை,
நரந்தம்,நாகம்,நள்ளிருள் நாறி,
 மாஇருங் குருந்தும்,வேங்கையும் பிறவும்,
அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி”
இப்பாடலில் உள்ள பூக்கள்:


1. காந்தள் மலர்


2. ஆம்பல் மலர்

3. அனிச்சம் பூ


4. குவளை மலர்


5. குறிஞ்சிப் பூ

6. வெட்சிப் பூ

7. செங்கோடுவேரி மலர்


8. தேமாம் பூ

9. மணிச்சிகை(செம்மணிப்பூ)


10. உந்தூழ்(மூங்கில் பூ)


11. கூவிளம் பூ


12. எறுழம்பூ


13. சுள்ளி(மராமரப்பூ)


14. கூவிரம் பூ


15. வடவனம் பூ


16. வாகைப் பூ


17. குடசம்(வெட்பாலை)


18. எருவை(கோரைப்பூ)


19. செருவிளை(வெண்காக்கணம்)


20. கருவிளம் பூ


21. பயினிப் பூ


22. வானிப் பூ


23. குரவம் பூ


24. பசும்பிடி(பச்சிலைப்பூ)


25. வகுளம்(மகிழம்பூ)


26. காயா மலர்


27. ஆவிரைப் பூ


28. வேரல்(சிறுமூங்கில்பூ)


29. சூரல் மலர்


30. சிறுபூளைப் பூ


31. குறுநறுங்கண்ணி மலர்


32. குருகிலை(முருக்கிலை)


33. மருதம் பூ


34. கோங்கம் பூ


35. போங்கம் பூ


36. திலகம் பூ


37. பாதிரி மலர்


38. செருந்தி மலர்


39. அதிரல் பூ


40. சண்பகம் மலர்

41. கரந்தை மலர்


42. குளவி(காட்டு மல்லி)


43. மாம்பூ


44. தில்லைப்பூ


45. பாலைப்பூ


46. முல்லைப்பூ


47. கஞ்சங்குல்லை


48. பிடவம் பூ


49. செங்கருங்காலி மலர்


50. வாழைப் பூ


51. வள்ளிப் பூ


52. நெய்தல் மலர்


53. தாழைப் பூ


54. தளவம்(செம்முல்லைப் பூ)


55. தாமரை மலர்


56. ஞாழல் மலர்


57. மௌவல் பூ


58. கொகுடிப் பூ


59. சேடல்(பவளமல்லி பூ)


60. செம்மல்(சாதிப் பூ)


61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)


62. கோடல்(வெண்காந்தள் மலர்)


63. கைதை(தாழம் பூ)


64. வழைப் பூ(சுரபுன்னை)


65. காஞ்சிப் பூ


66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)


67. பாங்கர் பூ




68. மரவம் பூ


69. தணக்கம் பூ


70. ஈங்கைப் பூ


71. இலவம் பூ


72. கொன்றைப் பூ


73. அடுப்பம் பூ


74. ஆத்திப் பூ


75. அவரைப் பூ


76. பகன்றைப் பூ


77. பலாசம் பூ


78. பிண்டி(அசோகம்பூ)


79. வஞ்சிப் பூ


80. பித்திகம்(பிச்சிப் பூ)


81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)


82. தும்பைப் பூ


83. துழாய்ப் பூ


84. தோன்றிப் பூ


85. நந்திப் பூ

86. நறவம்(நறைக் கொடிப்பூ)


87. புன்னாகம் பூ


88. பாரம்(பருத்திப்பூ)


89. பீரம்(பீர்கம்பூ)


90. குருக்கத்திப் பூ


91. ஆரம்(சந்தனப்பூ)


92. காழ்வைப் பூ


93. புன்னைப் பூ


94. நரந்தம்(நாரத்தம்பூ)

95. நாகப்பூ


96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)


97. குருந்தம் பூ

98. வேங்கைப் பூ

99. புழகுப் பூ

1 கருத்து:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இப் பெயர்களுடன் படமும் கிடைத்தால், அதன் வடிவத்தை அடையாளம் காண உதவும். யார் செய்வார்? அதை...
மிக்க நன்றி