தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/18/2010

எப்பவோ எழுதியது ......


  புத்தகம் 

 நான் பிரச்சனையிலிருக்கும் போது தீர்வு சொல்லி
குழப்பத்திலிருக்கும்போது தெளிவடையச்செய்து
அழும்போது ஆறுதல் அளித்து
சோர்ந்தபோது தன்னம்பிக்கை அளித்து
தவறியபோது தத்துவ ஞானம் அளித்து
என் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டியாக
இருந்த என் துணையை இழந்தேனே!
இழந்தது அழியக் கூடிய மனிதத் துணையை அல்ல!
உயிரினும் மேலான, என்றுமே
அழிவென்பதேயில்லாத அத்துணை
நண்பர்கள் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்க
மறந்த என் புத்தகங்கள்தான்!!!!


ஆணால் என் வெற்றி 

முட்டுக் கட்டைகளை மூலதனமாக்கி
ஏமாற்றங்களை ஏணியாக்கி
சோதனைகளை சாதனையாக்கிய
வெற்றி விழாவில் பாராட்டுப் பத்திரம்
அந்த முட்டுக்கட்டைக்கு.
ஒரு பெண்ணின் வெற்றிக்குப்
பின்னாலும் ஒரு ஆண்
 

சிறந்தது


நதிகளில் சிறந்தது கங்கை ,
மலைகளில் சிறந்தது இமயம் , 
மலர்களில் சிறந்தது தாமரை , 
மணிகளில் சிறந்தது மாணிக்கம் ,
தெய்வங்களில் சிறந்தவர் முருகர் ,
யாத்திரைகளில் சிறந்தது கயிலை யாத்திரை.

கருத்துகள் இல்லை: