தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/11/2010

முயற்சி + தனித்திறமை =சாதனையாளன்


முயற்சி
          குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான், ஏன் மற்ற உயிரினங்களிடமிருந்து; சிங்கத்திலிருந்து, நாயிடமிருந்து, நரியிடமிருந்து, குதிரையிடமிருந்து பிறக்கவில்லை...
குரங்குதான் அடுத்த கட்டத்திற்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது.நின்றது, நடந்தது, குதித்தது, மரம் ஏறியது, நிமிர்ந்தது. பரிமாணம் பெற்றது.

முயற்சி செய்ததால் ஒரு விலங்கு இனம், பரிமாண வளர்ச்சி பெற்று மனிதனாக மாற முடிந்தது. எனில் ஏன் மனிதனால் தெய்வமாக மாறமுடியாது.

அறிந்துக் கொள்ளுதலும், புரிந்துக் கொள்ளுதலும் முழுமைப்பெற, முயற்சி செய்தால் நிச்சயம் இது நிகழும்.
முயற்சி என்பது சுவாசம் போல் எப்போதும் இருக்க வேண்டும். முயற்சி நின்று போகும் போது ஒருவன் உயிர் இழந்தவனாகிறான்.
தோற்றுப்போனவனை பாராட்டுங்கள். முயற்சி செய்யாதவனை விட , தோற்றவன் நூறு மடங்கு சிறந்தவன்.
நின்று கொண்டிருக்கும் நீரில் தான் அழுக்குகள் சேரும். நீரோட்டம் என்பது நதிக்கு உயிரோட்டம். முயற்சி என்பது வாழ்க்கைக்கு உயிரோட்டம்.

"நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா? ஓடிக்கொண்டே இரு " என்பது ஒரு பழமொழி.
மனிதன் தெய்வமாக முயற்சிக்காவிட்டால் கூட
பரவாயில்லை, மீண்டும் மிருகமாக மாறாமல் இருந்தாலே போதும். 
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...

 தனித்திறமை 
              இந்த உலகில் தனித்திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க இயலும்.
தனித்திறமை என்பது தன்னைப் புரிந்துக் கொள்ளுதல், அனைவரிடமும் உள்ள சிறப்பு பண்புகளை (Plus Points) உற்று நோக்கி; அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒருவாறு யூகித்தல், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், இவையனைத்திறகும் மேலாக நம்பிக்கை.

படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!

நம்பிக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், இன்று நம்மை எள்ளி நகைக்கும் இவ்வுலகம் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.

இவ்வுலகில் ஏசுநாதரைப் போல் வாழ்வது என்றால் நம்மை பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். எனவே தேவைப்பட்டால் மறுகன்னத்தில் மட்டுமல்ல, இரு கன்னத்திலும் திருப்பி அறைய வேண்டும். "ரௌத்திரம் பழகு" என்பது பாரதியின் வார்த்தைகள். நல்லவனாக வாழுதல் தவறல்ல. நல்லவனாக மட்டும் வாழ்தல் என்பது இன்றைய சூழலில் " பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டத்தை பெறுவதற்கு மட்டுமே உதவும்.

நமது சுற்று வட்டாரம் எப்படிப்பட்டது, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் திறம், என்பவையும் முக்கியம். இவை சமுதாயத்தால்மதிக்கப்படக்கூடியநிலையை உருவாக்கும்.

வாழ்க்கையின்இறுக்கம் தாண்டி, நல்ல விஷயங்களை ரசிக்கும் மனதையும் பெற்று விட்டால் இனி எல்லாம் சுகமே.... 
 

கருத்துகள் இல்லை: