தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/09/2010

மனித இனம் அழிந்தால்! -கற்பனையே


பொதுவாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. மதவாதிகள் கூட அடிக்கடி உலகம் அழியப்போகிறது.. என்று கூறி தேதிகளும் குறித்து விடுவார்கள்.

அப்படி மனிதர்கள் முழுதும் அழிந்துவிட்டால்( நீங்களும் நானும் மட்டும் மிச்சம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..)
என்ன நடக்கும்?
1.மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்.
2.கொசுக்கள்,பூச்சிகள் எண்ணிக்கை பெருகும்.
3.மனிதப்பேன் அழிந்துபோகும்..
4.மின்சாரம் நின்று உலகம் இருளில் மூழ்கும்.
5.ஒரு வாரத்தில் அணு உலை வெடிக்கும்.
6.நான்காமாண்டு சாலையெல்லாம் புல்பூண்டு முளைத்திருக்கும். அவினாசி சாலையில்கூட
7.கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்!!!
8.ஐந்தாம் ஆண்டு நகரங்கள் தீக்கிரையாகியிருக்கும்.
9.100 வது ஆண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகிவிடும்.
10.வீட்டுவிலங்குகள் காட்டு விலங்குகளால் தின்னப்பட்டுவிடும்.
11.மனிதனால் ஏற்பட்ட உலக வெப்பமாதல் குறையும். 15000 ஆண்டில் உலகில் பனிசூழ ஆரம்பிக்கும். நீண்ட பனிக்காலம் உலகை பீடிக்கும்.
12.மனிதனின் இடத்தை பபூன் போன்ற வாலில்லாக்குரங்குகள் பிடிக்கும். அவற்றின் எண்ணிக்கை பெருகும். அவற்றிடையே மீண்டும் மனிதன் போல புத்திக்கூர்மையுடைய இனம் தோன்றும். அந்த இனம் உலகை ஆளலாம்.
அது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..

கருத்துகள் இல்லை: