தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/07/2010

ஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்


ஆஸ்கார் ஒயிஸ்ட் - எழுத்தாளர்

இவர் நீதி, நேர்மை, சத்தியம், புண்ணியம். ஒழுக்கம். நம்பிக்கை. நட்பு, காதல் என்று பிறர் புனிதப்படுத்தும் அத்தனை விஷயங்களையும் பக்கம் பக்கமாகக் கிண்டலடிப்பவர்.

சிறிதளவு நேர்மை இருப்பது ஆபத்தானது. அதிகபட்ச நேர்மையுடன் இருப்பது உயிருக்கே உலை வைத்துவிடும்.நல்ல அறிவுரையை யாராவது உங்களுக்கு வழங்கினால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முழிக்க வேண்டாம். உடனே மற்றவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். நல்ல அறிவுரையை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது.
இது அவரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில வரிகள்.

ஆனால் தன்னையும் சேர்த்தே தான் கிண்டலடித்துக் கொள்வார். "நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் உடனே எனக்குப் பயம் பிறந்துவிடும். ஒருவேளை நான் சொன்னது தவறானதாக இருக்குமோ? அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ?'

நையாண்டியும் எகத்தாளமும் நிரம்பி வழிந்தாலும், ஒயில்டின் எழுத்துகள் நிச்சயம் எதிர்மறையானவை அல்ல. ஓர் உதாரணம். இழந்துபோன என் இளமையை மீட்க எதையம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூன்று விஷயங்களைத் தவிர காலை சீக்கிரம் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, மதிக்கத்தக்க மணிதராக வாழ்வது.'

என்ன ஒரு வித்யாசமான புகழ் பெற்ற எழுத்தாளர்!

இவர் வாழ்க்கையும்  வித்தியாசமானது ...

பார்வை இழந்தால்-வாழ்கை ?

பார்வை இழந்தால் ,வாழ்கை என்னவாகும் ?

என்னென்ன சாதனைகள் செய்ய முடியும்?

உதாரணம் - லூயிஸ் ப்ரெய்ல்

இராணுவத்தில் தகவல் பரிமாற உதவும் சங்கேதக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு ப்ரெய்ல் எழுத்து முறையை தன்னுடைய 15வுது வயதில் வடிவமைத்தார்.

இது ப்ரெய்ல் எழுத்து முறை -கணிதம் மற்றும் சங்கீதக் குறியீடுகளையும் உள்ளடக்கியது.

தன்னுடைய 20வது வயதில் பார்வையற்றோருக்கான முதல் புத்தகத்தை வெளியிட்டார்.
அவர் வாழ்நாளின் இறுதிவரை ப்ரெய்ல் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் இறந்தபின் தான் அதன் சிறப்புகளை அறிந்த பிரான்ஸ் அரசு ப்ரெய்ல் கல்வி முறையை அங்கீகரித்தது.

இந்த விஞ்ஞான யுகத்துக்குப் பொருந்தும் வகையில் முன்னெப்போதும் விட ப்ரெய்ல் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.எனவே பார்வையற்றோர்க்கான உயர் கல்விக்கும், அவர்களது சாதனைகளுக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தி, நாம சந்தோஷப்படுவது சின்ன சந்தோஷம். ஆனா மற்றவங்களோட சந்தோஷத்தையும் நம்ம சந்தோஷமா பெரிசா கொண்டாடும் போது கிடைப்பது பெரிய சந்தோஷம். சின்ன சந்தோஷத்தை வார்த்தைகள்ல சொல்லிவிடலாம். பெரிய சந்தோஷத்தை வார்த்தைகள்ல அடக்க முடியாது

கருத்துகள் இல்லை: