தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/01/2011

என் பார்வையில் 2010

        
          வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம் தான்... சரி 2010 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும்  என்ன என்பதை பார்ப்போம்...


உலகம்...
  •   விக்கிலிக்ஸ் இணையத்தால் அமெரிக்க இமேஜ் கிழித்து நார் நாராக தொங்கவிடப்பட்டது இந்த ஆண்டுதான்..
  • ஆங் சான் சூகி 15 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு சுதந்திர காற்றை மியான்மரில் சுவாசித்தார்...
  • இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்...
இந்தியா...


  •  மிகப்பெரிய கேவலமான தீர்ப்புக்கு சாட்சி.. போபால் விஷவாயு தீர்ப்பு... அதே போல இன்னும் பெரும்பாண்மையான இந்திய மக்களால் கூர்ந்து கவனிக்கபட்ட தீர்ப்பு அயோத்தி தீர்ப்பு...
  • அதிபர் ஒபாமா இந்தியா வந்தார்..
  • அரசியலை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன்னிட்டு நீண்ட நாட்கள் நாடளுமன்றம் முடங்கியது...
  • ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் ஒரு லட்டசத்து 70 ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ் டம் என்று தணிக்கைதுறை சொல்லியது..பிரச்சனை இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது..
  • நீரா ராடியா டெலிபோன் பேச்சு மற்றும் சேன்ல் தொகுப்பாளர்கள் டேப் வெளிவந்து மானத்தை வாங்கியது...
  • காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்..
  • கிரிக்கெட்டில் லலித் மோடி ஊழல் என்று ஊழல் ஆண்டு 2010 என்றால் அது மிகையாகாது...
  • மங்களுர் விமான விபத்தும், இரண்டு ராக்கெட் கடலில் விழுந்ததும் பரபரப்பாய் பேசப்பட்டன...
தமிழகம்...
  • செம்மொழி மாநாடு...பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது . செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலுக்கு ஏஆர் ரகுமான் இசை கூடுதல் கவர்ச்சிக்கு வித்திட்டது...
  • தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவை கொண்டாடியது இந்த ஆண்டுதான்... அது எவ்வளவு பெரிய பெருமை.
  • புதிய தலைமை செயலகம் இந்த வருடம் துவங்கபட்டு மவுண்ட்ரோட்டில் கம்பீரமாக நிற்க்கின்றது.. இன்னும் திரைபடங்களில் இந்த புதிய சட்டமன்றம் காட்டப்படவில்லை என்று எண்ணுகின்றேன்.
  • கல்வி கட்டணத்துக்கு கடிவாளம் போடபட்ட ஆண்டு இந்தவருடம்தான்... இன்னும் அந்த சட்டம் சற்று இழுபறியாக இருப்பது வருத்தமே..
  • தென்மாவட்டங்களில் 23 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மழை மக்களை உண்டு இல்லை என்று செய்து விட்டது..
  • தமிழகத்தில் இந்த ஆண்டினை தமிழகத்தில் கடத்தல்கள் நிறைய நடந்தது என்று சொல்லாம்..நிறைய கடத்தல்கள் வெளிய தெரியாமல் முடி மறைக்கப்பட்டன.. நிறைய கடத்தல் கொலைகள் இந்த ஆண்டு.. கோவை பிள்ளைகள் கொலை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சோகத்துக்கு உள்ளாக்கியது..
  • தமிழக சாலைவிபத்துகளில் இற்ந்தவர்களும்.. சென்னை மெரினாவில் குளிக்க வந்து கடலில் மூழ்கி இறந்தவர்கள் அதிகம்...
  • நித்யா,ரஞ்சிதா வீடியோ கிளிப்பிங் வெளியாகி பரபரப்பை கிளப்பியது...
சென்னை...
  • சென்னையில் பல பதிய மேம்பாலங்கள் பயண்பாட்டுக்கு வந்தன..
  • பல புதிய மால்கள் சென்னையில் உதயமாயின... உதாரணத்துக்கு எக்ஸ்பிரஸ்மால் ராயப்பேட்டையிலும்,ஸ்கைவால்க் அண்ணாநகர் அருகிலும் திறந்து வைக்கப்பட்டது....
  • அண்ணா நுற்றாண்டு நினைவு பெரிய நூலகம் திறந்துவைக்கபட்டது....
சோகம்..
  • நடிகர் முரளி இறந்ததும் சுவர்ணலதா இறந்ததும் நிறையபேருக்கு அதிர்ச்சி செய்தி...
சினிமா...
  • போனவருடத்தில் வெளியான படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் நிறையவே உண்டு (களவானி ,மைனா ,எந்திரன் )
நான் :
இந்த வருடம் நிறைய பிரச்சனைகளைசந்தித்த ஆண்டு...நிறைய காழ்ப்புனர்ச்சி  சண்டைகள், சச்சரவுகள்... நிறைய பேர் யோக்கிய வேஷம் போட்டு வெளுத்து வாங்கினார்கள். நானும் சீண்டப்பட்டேன். முதலில் கோபபட்டு, பிறகு நண்பர்கள் சொன்னார்கள்... 4 பேர் சீண்டுவதுக்கு ஏன் பதில் சொல்லவேண்டும்? என்று என்னிடத்தில் கோபித்துக்கொண்டவர்கள் நிறைய... நாங்கள் இருக்கின்றோம் என்று என்னோடு இருந்தார்கள்.. என்னோடு நட்பு பாரட்டிய நண்பர்களுக்கு என் நன்றிகள்.ஆனால் நான் நண்பர்களையும் நம்பவில்லை.


வலைப்பூ


      பதிவுலகில் நான் காலடி எடுத்து வைத்த ஆண்டு ,இந்த வருடம் 297 பதிவுகள் எழுதி இருக்கின்றேன்... இத்தனைக்கும் மற்றவர்களை காட்டிலும் எனக்கு அனுபவம்
குறைவாக  இருந்தது.. வரும்  வருடம் அப்படி இல்லை.. என்னையும் செழிமை படுத்தி
நல்ல பதிவுகளுடன் உங்களை அடுத்த வருடம் சந்திப்போம் (அதாங்க நாளைக்கு )


என்னோடு தொடர்ந்து பயணப்பட்டு வரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்..
              அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. குட்பை 2010...


என்றும் அன்புடன்
கோவைராமநாதன்
குறிப்பு..


இந்த தளம்  பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.


பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

கருத்துகள் இல்லை: