தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/16/2011

வாழ்த்தி பாராட்டுங்கள் ....


            
          நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம்.
ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. பொதுவாக காதலிக்கும்போது குறைகள் கூட நிறைகளாகத் தெரியும் என்பார்கள். அதுதான் திருமணத்திற்கு பின்பு பெரிய பிரச்சினைகளையும் கிளப்புகிறது. அதுவேறு கதை.

இங்கு நாம் சொல்ல வந்தது என்னவென்றால், ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

பாராட்டுத்தான் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.

பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் எச்சரிக்கையாகிவிடுவார்கள் பெண்கள்.

இவன் நம் மனதைவிட, உடலையே அதிகம் விரும்புபவன் என்று முடிவு கட்டிவிடுவார்கள். அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன.
     பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும்.

மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக.

அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

இதை ஒவ்வொரு ஆணும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் நல்ல பலன் கிட்டும்.

              இது ரொம்ப பழசுதான் ,நீங்கள் படித்ததுதான் எனக்கு தெரிந்தவர் 
தனது குடும்பத்தை குறை கூறி வந்தார் இதை அவருக்கு சொல்ல வயதில்லை 
இதன் மூலம் தெரியபடுத்தி   கொள்ள விரும்பி போடப்பட்ட பதிவு ....


















கருத்துகள் இல்லை: