தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/13/2011

எப்படி இன்பமும் ,வேதனையும் - அன்னை

       உன்னால் துன்பத்தைத் துணிவோடு, பொறுமையோடு, இறைவனுடைய அருளில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியுமானால், துன்பம் வரும்போது அதைத் தவிர்க்க முயலாமல், எல்லாப் பொருள்களிலும் நடுப்பகுதியாக உள்ள ஒளிபொருந்திய உண்மையை, மாறாத களிப்பை, கண்டுபிடிக்க வேண்டும் என்னும் உறுதியுடனும் ஆர்வத்துடனும் அதனுட்புகுந்து, அந்த ஆனந்த அனுபவத்தைப் பெறுவாயானால், மனநிறைவைத்தரும், திருப்தியைத்தரும், பல ஆன்ம அனுபவங்களைவிட அது அதிக நேரான, குறுக்கு வழியாக இருக்கும்.

நான் புலனின்பத்தைப் பற்றிய பேசவில்லை. ஏனெனில், புலனின்பம் எப்பொழுதும் கிட்டத்தட்ட முற்றிலுமாக இந்த ஆழ்ந்த தெய்வீக ஆனந்தத்தைப் புறக்கணித்து அதைவிட்டு ஓடுகிறது.

புலனின்பம் ஏமாற்றுகிற, வக்கரித்த வேடம், அது நம்மை நமது இலட்சியத்திலிருந்து திசைதிருப்புகிறது. ஆகவே நிச்சயமாக நாம் அதை நாடக்கூடாது. புலனின்பம் நம்மை ஆவியாக்குகிறது, அது நம்மை ஏமாற்றுகிறது, வழிவிலகிப் போகச் செய்கிறது.

    வேதனை, அதைத் தாங்கிக்கொள்ளவும் நம்மை நசுக்குகிற அதை எதிர்த்து நிற்கவும், நம்மை ஒருமுனைப்படச் செய்கிறது. அதனால் அது நம்மை ஓர் ஆழ்ந்த உண்மைக்கு இழுத்து வருகிறது. வேதனை ஏற்படும்போதுதான் ஒருவன் அதிக எளிதாக உண்மையான பலத்தை மீண்டும் கண்டுபிடிக்கிறான், அவன் பலமடைகிறான்.

வேதனை ஏற்படும்போதுதான் ஒருவன் அதிக எளிதாக உண்மையான நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிக்கிறான் - எல்லா வேதனையையும் கடந்த ஒன்றில், எல்லா வேதனைகளுக்கும் அப்பால் உள்ள ஒன்றில் நம்பிக்கை.

கருத்துகள் இல்லை: